Friday, October 27, 2023

மஹா அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமி 28/10/23,சனிக்கிழம

🙏🕉🌼மஹா அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமி 28/10/23,சனிக்கிழமை 
🕉🙏🌼அன்னாபிஷேகம் புராண கதை 🙏🌼🕉

🕉🌼🙏பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிடுவார். துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையைக் கவ்விக்கொள்ள, அவரை பிரம்மஹத்தி தோஷம் தொற்றிக்கொள்ளும். 

🕉சிவபெருமான் தனது சுயத்தை இழந்துவிடுவார். கையைக் கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலமே பிச்சைப் பாத்திரமாக மாறிவிடும். யார் பிச்சையிடும் போது இந்தக் கபாலம் அன்னத்தினால் நிறைகிறதோ அப்போது அந்தக் கபாலம் சிவபெருமானின் கையை விட்டுப் பிரியும் என்பது விதி. 

🕉சிவபெருமான் காசிக்குச் செல்லும்போது அன்னபூரணி அன்னமிடுகிறாள். அவளது அன்பினால் கபாலம் அன்னத்தினால் நிறைய, பிரம்மனின் தலை சிவபெருமானை விட்டு விலகும். சிவபெருமானும் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டு மாயையிலிருந்தும் விலகுவார். 

🕉அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாத பவுர்ணமி. அதனால்தான் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது

🙏🌼🕉அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

🕉ஆண்டுதோறும் ஐப்பசி பௌர்ணமியின் போது சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

🕉அன்ன அபிஷேகம்: 

🕉அபிஷேகம் என்பது இறைவனுக்கு செய்யும் ஒரு செயல். இறைவனின் சிலைக்கு பால், தயிர், தேன், புனித நீர் உள்ளிட்ட அபிஷேகப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அந்த வகையில் அன்ன அபிஷேகம் என்பது சமைக்கப்பட்ட அரிசியால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதாகும்.

🕉பொதுவாக அன்னாபிஷேகம் தமிழ் மாதமான ஐப்பசி பௌர்ணமி நாளில் செய்யப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், தென்னிந்திய சிவன் கோவில்கள் அனைத்திலும் சிவலிங்கம் வடிவில் சிவபெருமானுக்கு இந்த குறிப்பிட்ட அபிஷேகம் செய்யப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை இந்த வழிபாட்டைச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம் என்று கூறப்படுகிறது. இந்த விழா சிவ அபிஷேகம் அல்லது மகா அன்ன அபிஷேகம் என்றும் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியா முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பல சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

🕉அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம்: 

புனித நூல்களின் படி, அரிசி என்பது வாழ்க்கை, செழுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும். சிவபெருமான் அபிஷேக பிரியர். ஆகவே அவருக்கு பொதுவாக புனித நீர், பசுவின் பால், நெய், இளநீர், கரும்புச்சாறு, சந்தனப் பசை, விபூதி, தயிர், பஞ்சாமிர்தம் போன்ற 11 புனித பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். ஒருவரது வாழ்க்கையில் அரிசியின் முக்கியத்துவத்தையும் தெய்வீகப் பங்கையும் குறிக்கும் வகையில், சிவனுக்கு ஆண்டுதோறும் அன்ன அபிஷேகம் செய்யப்படுகிறது.

🕉இயற்கையின் ஐந்து கூறுகள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஒரே பாதுகாவலராக இருக்கும் சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக அன்ன அபிஷேகம் செயல்படுகிறது. மேலும், அரிசி என்பது இயற்கையின் ஐந்து கூறுகளின் இணைப்பின் விளைவாகும். நிலத்தில் விதை விதைக்கப்படும் போது, அது வானத்திலிருந்து வரும் தண்ணீராலும், சூரியனிடமிருந்து வரும் ஆற்றலாலும் ஊட்டமளித்து, காற்றின் உதவியால் நெல்லாக மாறுகிறது. இது அரிசியாக பதப்படுத்தப்பட்டு அனைத்து உயிரினங்களுக்கும் உணவாக வழங்கப்படுகிறது. 

🕉இறைவன் மீது இருக்கும் ஒவ்வொரு அன்னமும் ஒரு லிங்கத்துக்கு சமம் ஆகையால் இன்று தரிசனம் காண்போருக்கு கோடி லிங்க தரிசனம் பார்ப்பதர்க்கு சமமாகும் 🕉🙏🌼

எல்லாம் வல்ல ஈசன் கருனையால் அனைவருக்கும் அனைத்து  வகையான வளங்களும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டுகிறேன் 🌼🙏🕉

🕉🙏🌼திருச்சிற்றம்பலம்🕉🙏🌼
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...