Monday, October 30, 2023

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு திருப்பத்தூர் அருள்மிகு பூமாயிஅம்மன் ஆலயம்.*

◄•───✧ உ ✧───•►

*🙏 இன்றைய கோபுர*
*தரிசனம் 🙏*
*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு திருப்பத்தூர் அருள்மிகு பூமாயிஅம்மன் ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

பூமாயி அம்மன்

*அம்மன்/தாயார்:*

பூமாயி அம்மன்

*தீர்த்தம்:*

இத்திருக்கோயிலின் இராஜகோபுரத்திற்கு வடக்கே பூமாயிஅம்மன் திருக்குளம் உள்ளது. நவக்கிரக சந்நிதியை ஒட்டியுள்ள கிணறும் தீர்த்தமாக பயன்படுத்தப்படுகிறது.

*பழமை:*

500 வருடங்களுக்குள்

*புராண பெயர்:*

திருப்புற்றூர்

*ஊர்:*

திருப்புத்தூர்

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*பூத்திருவிழா:*

*சிறுவர்களுக்கு தீபாவளி என்றால் எப்படி உற்சாகமோ, திருப்புத்தூர் பகுதி மக்களுக்கு பூத்திருவிழா என்றால் சந்தோசம் கரை புரண்டோடும்.*

*பேசும் தெய்வமாம் பூமாயிஅம்மனுக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று பூச்சொரிதல் விழா நடைபெறும்.*

*காப்புக் கட்டி பத்து நாட்களும் அம்மனுக்கு உற்சவமும், திருக்குளத்தைச் சுற்றி திருவீதி உலாவும், பத்தாம் நாள் அம்மனுக்கு பொங்கல் விழாவும் நடைபெற்று வசந்தப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.* 

*பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூத்தட்டு சுமந்தும் வந்து அம்மனை பூக்களால் அபிசேகம் செய்து தரிசிப்பதும் நாள் முழுவதும் நடைபெறும்.*

*அதற்கேற்ப நகரெங்கும் ஆடல், பாடல், இசைக் கச்சேரிகளும், மின்னொளி அலங்காரமும், பரவலான கிராமிய திருவிழாக் கடைகளும், விளையாட்டுக்களும், வீட்டுக்கு வீடு விருந்தினர்களுக்கு உபசரிப்பும், மின் அலங்கார தேர்களில் அம்மன் என்று நகரே திருவிழா கோலம் கொள்வதைப் பார்க்க கண் கொள்ளக் காட்சியாகும்.*

*அது மட்டுமின்றி, புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி விழாவில், தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். பக்தர்கள் புடைசூழ அம்பு எய்தலும் நடைபெறும்.*

*சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி, கார்த்திகை, சஷ்டி நாட்களில் சிறப்பு அபிஷேகம், அனுமன் ஜெயந்தி விழாவும் இக்கோயிலில் நடைபெறுகிறது.*

*தல சிறப்பு:*

*சப்த மாதாக்கள் என அழைக்கப்படும் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய அன்னை எழுவரும் ஒரே இடத்தில் இங்கு எழுந்தருளி காட்சி தருவது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு பூமாயி அம்மன் திருக்கோயில்,தென்மாபட்டு, கண்டரமாணிக்கம் ரோடு,திருப்புத்தூர்,சிவகங்கை-630211.*

*போன்:*

*+91 99424 60707, 99426 49580.*

*பொது தகவல்:*

*திருக்கோயில் கிழக்குப் பகுதியில் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது.*

*வடபுறம் இராஜகோபுரம், மகா மண்டபம், வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஆதிவிநாயகர் சன்னிதி, மேற்கு மதில் சுவரையொட்டி தவ முனீஸ்வரர், உள் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் பரிகார விநாயகர், மேற்கே வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளது.*

*வடக்கில் தெற்கு நோக்கிய ஆஞ்சநேயர், மூலவர் சன்னிதி எதிரே வேதாளம் சிலை, தொடர்ந்து பலி பீடம், கொடிமரம் உள்ளது.*

*மகா மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக சன்னிதி, அருகில் மேற்கு நோக்கிய பைரவர் சன்னிதி உள்ளது.*

*இத்திருக்கோயிலில் 1981 கும்பாபிஷேகத்தின் போது மூன்று நிலைகளுடன் கட்டப்பட்ட இராஜகோபுரம், மூலவர் விமானம் அழகிய சுதை சிற்பங்களுடன் பஞ்சவர்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.*

*மகா மண்டபம், திறந்த வெளி உள்பிரகாரம், கருவறை மண்டபம், பரிவார தேவதைகளுக்கு சிறு மண்டபங்கள் உள்ளன.*

*அன்னை பூமாயி அம்மனுக்கு ராஜ கம்பீர தோற்றத்துடன் ராஜகோபுரம் எழுப்பி, 21.06.1981, 15.09.1994, 31.10.2008 ஆகிய ஆண்டுகளில் மும்முறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.*

*பிரார்த்தனை:*

*பக்தர்கள் தங்களது பிரார்த்தனை அனைத்தையும் இந்த அம்மனிடம் வேண்டுகின்றனர்.*

*நேர்த்திக்கடன்:*

*வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.*

*தலபெருமை:*

*பிராஹ்மி:*

*பிரம்மாவின் சொரூபமாக அட்சமாலையும், கமண்டலமும் ஏந்தி சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*மகேஸ்வரி:*

*மகேஸ்வரரின் சொரூபமாக முச்சூலத்தையும், சந்திரனையும், பாம்பையும் தரித்து சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*கவுமாரி:*

*குமரனின் அம்சமாக மயிலும் வேலாயுதமும் சூழ பெரிய வேலாயுதத்துடனும் சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*வைஷ்ணவி:*

*விஷ்ணுவின் சொரூபமாக சங்கு, சக்கரம், கதை, வில் ஆயுதங்களுடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*வராஹி:*

*ஹரியின் வராக வடிவத்தின் சொரூபமாக கலப்பை மற்றும் சாட்டையுடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*சாமுண்டி:*

*தெற்றிப்பல் கொண்ட வாயும் தலைமாலை ஆபரணமும் கொண்டு சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*இங்கு சப்தமாதாக்கள் எழுவரும் சிலை வடிவில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது.*

*தல வரலாறு:*

*தொன்மையான பூமாயி அம்மன் திருக்கோயில், தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர் என திருஞானசம்பந்தரும், தேரோடும் நெடுவீதி திருப்புத்தூர் என திருநாவுக்கரசரும் போற்றிப் பாடிய திருப்புத்தூரில் அமைந்துள்ளது.*

*பெண்கள் வணங்கும் தெய்வங்களாகிய சப்தமாதாக்கள் உறைந்த திருக்கோயிலாக, தென் திசை காவல் தெய்வமாக அன்னை பூமாயி அம்மன் கோயில் உள்ளது.*

*வேதச்சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் கொண்டது. திருப்புத்தூர் ஆதிகாலத்தில் கொன்றை வனமாக இருந்தது.* 

*இவ்வனத்தில்தான் ராமாயணம் காவியம் படைத்த வால்மீகி முனிவர் தவம் இருந்ததாகவும், அவரைச் சுற்றி புற்று மூடியதாகவும், இதனால் வன்மீகம் என்று வடமொழிச் சொல்லால் அழைக்கப்பட்டது.*

*வன்மீகம் என்றால் தமிழில் புற்று என்பதால், திருப்புற்றூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்புத்தூர் என்று மருவியிருக்காலம் என்று புராண,வரலாறுச் செய்திகள் தெரிவிக்கின்றன.*

*சப்த மாதாக்களின் நடுநாயகமாக அன்னை வைஷ்ணவி, பூமாயி அம்மனாய் இங்கு அருள் புரிகிறாள்.*

*பூமா + ஆயி: இப்பூவுலகம் முழுவதையும் தன் அருட்பார்வையால் காத்து ரட்சிக்கும் தாய் எனப் பொருள் தரும் பூமாயி என்ற பெயரில் பூமாயி அம்மனாய் இங்கு அன்னை காட்சி தருகிறாள்.*

*லவகுசர்களுக்கும், ராமபிரானுக்கும் யுத்தம் முடிந்த பின் சீதா பிராட்டியைப் பூமாதேவி பூமிக்குள் அழைத்துச் சென்ற இடம் இது என்பதால் பூமாயி என்ற பெயரில் இத்திருக்கோயில் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், இக்கோயிலில் உள்ள சப்த மாதாக்கள் வால்மீகி முனிவரின் ஞான கடாட்சத்தாலும், தவ வலிமையாலும் ஸ்தாபிக்கப்பட்டது என்றும் புராணச் செய்திகள் கூறுகிறது.*
 
*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*சப்த மாதாக்கள் என அழைக்கப்படும் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய அன்னை எழுவரும் ஒரே இடத்தில் இங்கு எழுந்தருளி காட்சி தருவது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும்.*

*அமைவிடம்:*

*சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து பட்டமங்கலம் செல்லும் வழியில் சுமார் 2 பர்லாங் தூரத்தில் கோயில் உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

காரைக்குடி

*அருகிலுள்ள விமான நிலையம்:*

மதுரை

*தங்கும் வசதி:*

காரைக்குடி


பூமாயி அம்மன்
விநாயகர்
சுப்பிரமணியர்
ஆதி விநாயகர்
பைரவர்
நவக்கிரகம்
சப்த கன்னி
தவ முனீஸ்வரர்
ஆஞ்சநேயர்

*கோபுர தரிசனம் தொடரும்...*

*வாழ்க வளமுடன்...*

*வாழ்க வையகம்...*

*🙏 ஓம் சக்தி 🌷*

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...