Friday, June 28, 2024

சோழவரம் வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளூர்.....

வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள்
சோழவரம் வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் குறித்து இங்கே காணலாம்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர்.. 

விஜயநகர பேரரசு காலத்தில் 108 சிவாலயங்களில் நிறுவிய மன்னன் இங்குள்ள வர வரமூர்த்தீஸ்வரர் கோயிலை ஈசான மூலையில் கட்டி உள்ளார். திருக்கோயிலில் நான்கு நிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. மூலவராகவும் உற்சவராகவும் வரமூர்த்தீஸ்வரர் காட்சி தருகிறார்.

அம்பாளாகக் காமாட்சி அம்மன் அருள்புரிகிறார். சுவாமியும், அம்பாளும் கிழக்கு நோக்கி இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். இக்கோயிலின் தலமரமாக வில்வமரம் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள சுற்றுப்பிரகார தூண்களில் பல்வேறு சிற்பங்கள் கலை நயத்துடன் தத்ரூபமாகக் காட்சி அளிக்கின்றது.
கோயிலில் விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா, பைரவர், மற்றும் சண்டிகேசுவரர், நந்தி சன்னிதிகள் உள்ளன. இக்கோயிலில் நவகிரகம் இல்லாததால் சுவாமியே பிரதான மூர்த்தியாகக் காட்சி தருகிறார். அதனால் இத்தலம் அனைத்து தோஷங்களுக்கும் பரிகார தலமாக அமைந்துள்ளது.

திருமணத் தடை, அனைத்து நோய்களும் நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி மார்கழி ஆருத்ரா, மாதம் தோறும் பிரதோஷ வழிபாடு, ஐப்பசி அன்னாபிஷேகம், கால பைரவருக்கு அஷ்டமி பூஜை, ஆகியவை விசேஷ தினங்கள் ஆகும்.

செல்லும் வழி

சென்னை கோயம்பேட்டிலிருந்து சோழவரம் வழியாக எருமை வெட்டி பாளையம் சென்றடைந்தால் வர மூர்த்தீஸ்வரரை வழிபடலாம் மேலும் இக்கோயில் அருகே அபூர்வமாக மலைக் குன்றின் மேல் கோதண்ட ராமர் ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓம்நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 



No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...