Tuesday, July 30, 2024

கோவிலுக்குப் போனால் பிரசாதம் தானே நமக்கு ரொம்ப முக்கியம்!!

_ஆலயங்களில் வழங்கப்படும் பிரசாதங
கோவில் என்றாலே நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது அந்த கோவிலின் அமைப்பு, அங்கு கொடுக்கப்படும் பிரசாதமும் தான்.

கோவிலுக்குப் போனால் பிரசாதம் தானே நமக்கு ரொம்ப முக்கியம்!!

சில கோவில்களில் திருநீறு, பூக்கள், கொடுப்பார்கள். 

அம்மன் கோவிலாக இருந்தால் மஞ்சள், குங்குமம் ஆகியவையும் கொடுப்பார்கள்.
பெருமாள் கோவிலில் துளசியை பிரசாதமாகக் கொடுப்பார்கள்.

அதைத்தாண்டி, சாப்பிடுவதற்கான கொடுக்கப்படும் பிரசாதங்களும் உண்டு. அவை அவ்வப்போது மாறும். அதாவது லட்டு,புளியோதரை,எலுமிச்சை சாதம், பொங்கல், பருப்பு கூழ், சுண்டல் இப்படி என்னவெல்லாமோ கொடுப்பார்கள்.

ஒவ்வொரு ஆலயங்களிலும் வழங்கப்படும் பிரசாதம் சிறப்பு வாய்ந்தவை.

ஆலயங்களில் நிவேதிக்கப்படும் உணவு வகைகள் அந்தந்த ஆலயங்களுக்கு என்றே உரித்தான ஒழுங்கு முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் எந்தெந்த ஆலயங்களில் என்னென்ன பிரசாதங்கள் என்று பார்ப்போம்.

ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும், துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.

திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு,  மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லி தான் முதல் நைவேதியம்.

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர் சாதம் மட்டுமே.

கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

முஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

கேரளம், மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.

நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.

தங்கக் காசுகள்

என்னென்னவோ பிரசாதங்கள் வாங்கியிருப்போம்.ஆனால் எந்த கோவிலிலாவது தங்கக் காசுகளை பிரசாதமாகக் கொடுப்பதைப் பார்த்திருக்க மாட்டோம்.

நாம் தான் நேர்த்திக் கடன் என்ற பெயரில் தங்கத்தை கடவுளுக்குப் படைப்போம்.

ஆனால், அப்படி ஒரு கோவிலும் நம்முடைய இந்தியாவில் தான் இருக்கிறது.

இந்த அற்புதக் கோவிலானது,மத்திய பிரதேச மாநிலம் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.

அதாவது ரத்லம் என்னும் ரத்னபுரி பகுதியில் தான் இக்கோவில் இருக்கிறது.

இந்த ரத்னபுரி கோவிலுக்குள் உறைந்திருக்கும் கடவுள், நமக்கு வளங்களை அள்ளித் தருகின்ற லட்சுமிதேவி தான் அது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், குறிப்பாக வசதி படைத்தவர்கள் தாங்கள் செலுத்துகின்ற காணிக்கையைப் பணமாகச் செலுத்துவதில்லை. காணிக்கை செலுத்த நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

பொதுவாக நாம் கோவிலுக்கு செலுத்துகின்ற பணம், தங்கம், வெள்ளி ஆகிய அத்தனையும் கோவில் நிர்வாகத்துக்கும், அரசுக்கும்,கோவில் திருப்பணிகளுக்கும் பயன் படுத்தப்படுவது தான் வழக்கம்.
 
ஆனால், இந்த கோவிலைப் பொறுத்தவரையில், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்ற அத்தனை தங்கமும் வெள்ளியும் பெரிய மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும்.இந்த மலை போல குவிக்கப்படும் பொருள்களை, வருடத்தின் முக்கியப் பண்டிகையாக இந்தியாவில் கொண்டாடப்படுகிற தீபாவளியன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அந்த தங்கம் மற்றும் வெள்ளி கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று மட்டும் தான் தங்கம் பிரசாதமாக வழங்கப்படும். தினமும் வழங்கப்படும் வழக்கம் இங்கு கிடையாது.

மேலும்,இங்கு பிரசாதமாக தங்கம் கிடைத்து விட்டால்,வாழ்க்கையில் பணக்கஷ்டம், வறுமை என அத்தனையும் தீர்ந்து மகாலட்சுமியே தங்களுடைய வீடுகளுக்குள் நுழைவதாகவே பக்தர்கள் கருதுகிறார்கள்.

இந்த தங்கக் காசை இறைவனின் அருளாக பாவிப்பதால்,அதை யாரிடமும் கொடுப்பதோ விற்பதோ கிடையாது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...