Tuesday, July 2, 2024

திருவாரூர் சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமான்.

சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம்: 
கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். 

முருகப்பெருமான் இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 

ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். 
சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். 

அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். 
திருமால் , முருகனுக்கு தனது 
சங்கு, சக்கரத்தை கொடுத்தார். 

ஆயுதங்களுடன் சென்ற முருகன், 
அசுரர்களை சம்ஹாரம் செய்தார். 
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன்  ~ கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். 

சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. 
இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். 
 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திருநாவுக்கரசு நாயனார். ‘நாமார்க்கும் குடியல்லோம்! அப்பர் வரலாறு

அப்பர் வரலாறு அப்பர் அப்பர், வாகீசர், சொல்லரசர், தமிழ்வேந்தர், நாவரசர், தாண்டக வேந்தர் முதலிய பல பெயர்களால் வழங்கப் படுபவர் திரு...