Sunday, September 29, 2024

திங்கட்கிழமையில் சிவன் அருளை பெறக் கூடிய பிரதோஷம்.....

சோமவார தேய்பிறை பிரதோஷத்தன்று இந்த வழிபாடு செய்பவர்கள் இல்லத்தில் சகல தோஷங்களும் நீங்கி செல்வ வளம் பெருகும்.**
சிவ வழிபாடு என்றாலே நம் நினைவிற்கு வருவது பிரதோஷம் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கு ஒவ்வொரு நாட்கள் உகந்ததாக இருக்கும் பட்சத்தில், சிவபெருமானை வழிபட உகந்த நாளாக கருதப்படுவது இந்த பிரதோஷ தினம். அது மட்டுமின்றி நாட்களிலே சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுவது திங்கட்கிழமை. ஆகையால் தான் சிவபெருமானுக்கு திங்கட்கிழமை சோமவார விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.

அத்தகைய அற்புதமான திங்கட்கிழமையில் சிவன் அருளை பெறக் கூடிய பிரதோஷமும் இணைந்து வந்திருப்பது நமக்கு சகல செல்வங்களையும் தேடித் தருவதாக அமைந்துள்ளது. அப்படியான நல்ல நாளில் நாம் சிவபெருமானை எந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய குடும்பத்தில் உள்ள தோஷங்களும் துன்பங்களும் நீங்கி இன்பமாக வாழ முடியும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

**துன்பம் நீங்க பிரதோஷ வழிபாடு**

மனிதனுடைய வாழ்க்கையில் துன்பங்களுக்கு எப்போதும் குறையவே இல்லை என சொல்லலாம். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான இன்னல்களும், துயரங்களும் இருந்த வண்ணம் தான் இருக்கிறது. இதிலிருந்து மீள தெரியாமல் மனிதன் தினம் போராடக் கூடிய நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படி போராடக் கூடிய மனிதனை கை தூக்கி விடக் கூடிய அற்புதமான தெய்வம் தான் நம் சிவபெருமான்.

நமசிவாயா என்ற நாமத்தை சொன்னாலே நம்முடைய சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கி விடும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்பேற்பட்ட சிவபெருமானை வழிபட அவருக்கு உகந்த நாளனின் அது பிரதோஷம் தான். அந்த நாளில் நாம் அவரை வழிபடும் பொழுது அவை அருளை பரிபூரணமாக பெற முடியும் என்பது நம்பிக்கை. அன்றைய தினத்தில் நாம் அவரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். 

அன்றைய தினம் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. அப்படி செய்ய முடியாதவர்கள் காலை ஏழு மணிக்குள்ளாகவாது எழுந்து இந்த வழிபாடு செய்ய வேண்டும் இதற்கு நாம் காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் சுத்தம் செய்த பிறகு, சிவபெருமான் படம் லிங்கம் இருந்தால் அதற்கு நல்ல வாசனை மிக்க மலர்களை சூடி விடுங்கள். அதன் பிறகு ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் ஏற்றி வழிபடும் நேரத்தில் சிவபுராணத்தை கேட்பது மிகவும் நல்லது. சிவ மந்திரங்கள் தெரிந்தவர்கள் அதையும் இந்த நேரத்தில் சொல்லலாம். இந்த வழிபாடு செய்யும் பொழுது சிவபெருமானின் மனதார நினைத்து மனமுருகி உங்களுடைய பாவங்களும் தோஷங்களும் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதே போல் இந்த வழிபாட்டை மாலை நேரத்தில் செய்ய வேண்டும் குறிப்பாக பிரதோஷ காலமான நான்கு முப்பதிலிருந்து ஆறு மணிக்குள்ளாக செய்யுங்கள் முடியாதவர்கள் ஏழு முப்பது மணிக்குள்ளாக செய்து முடித்து விடுங்கள்.

இந்த நேரத்தில் உங்களால் முடிந்தால் வெள்ளை நிறத்தில் ஆன நெய்வேத்தியத்தை சிவபெருமானுக்கு படைத்து வழிபடலாம் எங்களால் வீட்டில் இப்படி வழிபட முடியாது என நினைப்பவர்கள் சிவன் ஆலயம் சென்று வழிபடலாம். ஆனால் வீட்டில் வழிபட்டாலும், ஆலயம் சென்று வழிபட்டாலும் இன்றைய சிவாலயத்திற்கு நல்லெண்ணெய் வாங்கி கொடுக்க வேண்டும்.

தீபமானது இருளை நீக்கி ஒளியை தரக்கூடியதாக உள்ளது. நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பம் துயரம் தோஷம் போன்ற இருள் நீங்கி இன்பம் மகிழ்ச்சி செல்வம் போன்ற வெளிச்சம் பெற இந்த தீப தானமானது உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுப்பது மிகவும் நல்லது ஏனெனில் சிவபெருமானானவர் அபிஷேக பிரியர்.
அன்றைய தினம் தேய்பிறை சோமவார பிரதோஷம் இந்த தினத்தில் நல்லெண்ணையை வாங்கி தருவது தான் மிகவும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது வாய்ப்பு உள்ளவர்கள் அற்புதமான இந்த நாளை தவற விடாமல் நல்லெண்ணெய் தானத்தில் செய்து நம் குடும்பத்தில் உள்ள துன்பங்களை எல்லாம் நீக்கி இன்பமாக வாழ வழி தேடி கொள்ளலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நட்சத்திரப் பிரதோஷம் என்றால் என்ன❓

1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த...