Tuesday, September 24, 2024

பசுபதீசுவரர் திருத் துறையூர் சிட்ட குருநாதர் கோவில்...

*⚜️     திருத் துறையூர் சிட்ட குருநாதர் திருக்கோயில்* .                               
          *ஞான சிவம் தட்சிணா மூர்த்திக்குத் தனிச் சந்நிதி உள்ள  கோயில்களில் ஒன்று*.
  🙏   *வழிபட்டவர்கள்* .   பசுக்கள், நாரதர் , பிரம்ம விஷ்ணுக்கள் , முருகன்,   சூரியன்,   அகத்தியர், ராமன்,  பீமன் மற்றும் பலர்.              
           
திருத் துறையூர் திருத்தலம் பண்ணுருட்டிக்கு அருகே பெண்ணை யாற்றங் கரையில் உள்ளது.  

நீர்த் துறையில் மேய வந்த பசுக்கள் *கொன்றை மரத் தடியில் வெளிப்பட்டிருந்த லிங்கப் பரம்பொருளைப் பூசித்து முக்தி பெற்றதால்* திருத் துறையூர் என்று பெயர். 

ஈசனுக்குப் *பசுபதீசுவரர்* என்று திருநாமம்.   

சிட்டர் என்றால் உத்தமர், 
முனிவர் என்று பொருள். 

தேவ முனிவராகிய நாரதர் பசுபதீசுவரரைப் பூசித்துத் தவம் செய்து ஞானோபதேசம் பெற்ற ஊர் ஆதலால் சிட்டருக்கு அருளிய ஈசனுக்கு சிட்ட குருநாதர் என்று அருள் நாமம். 

சுந்தரருக்குத் தவ நெறி அருளியதாலும் சிட்ட குரு நாதர் என்று திருநாமம்.
        
🔥  *துறையூர்ச் சிட்டா* 
*உனை வேண்டிக்* *கொள்வேன் தவ நெறியே*     (சுந்தரர்) 

🔯        *சிட்டனே சிவலோகனே*                         (திருவாசகம்)

என்று திருமுறைகள்  திருத் துறையூர்ச் சிட்டனைப் போற்றுகின்றன. 

*தவ நெறி உடையார், தவநெறி ஆளுடையார்* என்ற திருநாமங்களைக் 
கல்வெட்டு கூறுகின்றது. 
             
    ருத்திராட்சப் பந்தலின் கீழ் உள்ள லிங்கப் பரம்பொருளுக்கு முன் சிறியதும் பெரியதுமாக இரண்டு நந்திகள் உள்ளன. 

சிட்ட குரு நாதரைத் தொழுது பூசித்துத் தவ நெறியின் மகிமை உணர்ந்த  அரி அயன் ஆகிய இருவரில் பிரம்மன் உருவம்  கருவறைச் சுவற்றிலும்   மகாவிசுணு  உருவம் ஆதி கேசவப் பக்த வச்சலப் பெருமாள் என்று தனிச் சந்நிதியிலும் உள்ளன. 

 சூரிய பகவான் பசுபதீசுவரரைப்  பூசித்துத் தொழுத பின் தீர்த்தம் உண்டாக்கி லிங்க மெய்ப் பொருளைப் பிரதிட்டை செய்து வழிபட்டு நலம் பெற்றான்.  
சூரியன் பிரதிட்டை செய்த லிங்கமும் சூரியனும் தனிச் சந்நிதிகளில் உள்ளனர்.   

  நாரதர்,   அரி அயன் சூரியன் ஆகியோருக்கு ஞானம் அருளிய   மேதா தட்சிணா மூர்த்தி தனிச் சந்நிதியில் உள்ளார். 
       
   இரண்டு புறமும் சுவற்றில் இரண்டு சித்தர் உருவங்கள் உள்ளன. 

கீழே விநாயகர் அமர்ந்துள்ளார். 

அகத்தியர் இராமன் பீமன் பசுபதீசுவரரைப் பூசித்து நலம் அடைந்தனர்.  

சிட்ட குருநாதரைப் பூசித்து வணங்கிய பின் அகத்தியரும் இராமனும் பீமனும் பிரதிட்டை செய்து வழிபட்ட அகத்திய லிங்கம் இராம  லிங்கம் பீம லிங்கம் தனிச் சந்நிதிகளில் உள்ளன. 

அகத்திய லிங்க சந்நிதியில் லிங்கப் பரம்பொருளுக்கு முன்பு அகத்தியர் உள்ளார். 

சிட்ட குருநாதரை வழிபட்ட முருகன் பால முருகனாகத் தனிச் சந்நிதியில் உள்ளான். இது அல்லாமல் தேவியருடன் இருக்கும் ஆறுமுகன் சந்நிதியும் உள்ளது. 

விநாயகர் சந்நிதியில் பிள்ளையார் நர்தன கணபதியாக உள்ளார். 

யானை லட்சுமி தனிச் சந்நிதியில் அமர்ந்துள்ளாள்.  



         *அவ யோகம் சாராது அவன் பதி போக* 
      *நவ யோக நந்தி நமக்கு  அளித்தானே*
(திருமூலர்)

என முக்தி பெற்று *சிவ லோகம் சேர ஒட்டாமல் தடுப்பவை  அவதாரம் பிறவி  ஆகிய  அவ யோகம்*. 

இவை உள்ள யாரும் எந்த அம்மனும்  சிவ  யோக நாயகி அல்ல. 

வந்து வழிபடும் பக்தர் யாரும் எந்த தெய்வமும்  
 கோயிலில் இருக்க முடியாது. 

அவ யோகம் சார்பவர்களுக்கு பக்தர்களுக்கு சந்நிதி அமைத்து வழிபடும் 
 இவை யெல்லாம் நாய்க்கர் செய்த சிவ அபச்சாரங்கள்.    

சுந்தரருக்கு அருளிய  சிட்ட குரு நாதர் சுதைச் சிற்பம் நுழை வாசல் முகப்பில் உள்ளது. 

அமர்ந்த கோலத்தில் உள்ள ஈசன் திருமுன் தவக்கோலம் கொண்ட சுந்தரர் உருவம்  சுவற்றில் கல் சிற்பமாகக் காணப்படுகிறது. 
         
  பிரம்மன் சிரம் கொய்த    சிவ மைந்தர் பைரவருக்குத்  தனிச் சந்நிதி  உள்ளது.   

தெய்வீக நால்வர் தனிச் சந்நிதியில் உள்ளனர். 

சிவஞான போதத்தின் விரி நூலான சிவஞான சித்தியார் என்னும் மெய் கண்ட சாத்திர நூலை அருளிய அருள் நந்தி சிவாச்சாரியார் அவதாரம் செய்த தலம் திருத்துறையூர். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ள கனகசபாபதி சுந்தரேசுவரர்....

*கனகசபாபதி* கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனகசபாபதி திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகிலுள்ள கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனக...