Saturday, November 2, 2024

சிதம்பரம் பால்வண்ண நாதர் திருக்கோவில் திருக்கழிப்பாலை..



 

சிவஸ்தலம் பெயர்

திருக்கழிப்பாலை (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்

பால்வண்ண நாதர்

இறைவி பெயர்

வேதநாயகி

தேவாரப் பாடல்கள்

சம்பந்தர்

1. புனலாடியபுன்

2. வெந்தகுங்குலியப்

அப்பர்

1. வன பவள

2. நங்கையைப்பாகம்

3. நெய்தற் குருகுதன்

4. வண்ணமும்வடிவுஞ்

5. ஊனுடுத்தி

சுந்தரர்

1. செடியேன் தீவினை

எப்படிப் போவது

சிதம்பரத்தில் இருந்து 13 கி.மி. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்த சிவஸ்தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். திருநெல்வாயல் சிவஸ்தலத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில்
திருக்கழிப்பாலை - சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002
தொடர்பு : 09842624580
ஆலய அர்ச்சகர் வீடு அருகில் உள்ளது. அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.

தல வரலாறு

 

இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வன்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மி. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயல் என்றும் வழங்கும் மற்றொரு சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.

சிறப்புகள்

 

இது இன்று சிவபுரி எனப்படுகிறது.

சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு படி எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாலயத்திலுள்ள காலபைரவர் இப்பகுதி மக்களால் மிகவும் பூஜிக்கப்பட்டு வருகிறார். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சித்ரா பௌர்ணமி வழிபாட்டு முறைகள்

சித்ரா பௌர்ணமி வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் பற்றிய பதிவுகள் :* சித்ரா பௌர்ணமி என்பது தமிழ் மாதமான சித்திரையில் வ...