.
108 திவ்ய தேசங்களில் 41வது திவ்ய தேசமாக உள்ள கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம்2 தேதி நடக்கிறது.
இந்தியாவிலேயே ஹை கிரிவருக்கு மலை மேல் தனிக்கோயில் இங்கு மட்டுமே சாத்தியம் இத்தலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர், லட்சுமியை தனது வலது தொடையின் மீது அமர வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில்சிறப்புமிக்கவை வைணவத் திருத்தலங்கள். இவைகளில்வரிசையில் 41-வது திவ்ய தேசமாக இருப்பது திருவந்திபுரம்108 திவ்ய தேசங்கள்' என்று வரிசைப்படுத்தப்படுகிறது.
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அமைந்துள்ள அந்ததேவநாத சாமி கோவில், கெடிலம் நதிக்கரை ஓரமாக கோவில் அமைந்துள்ளது. மூலவராக தேவநாதரும்உச்சவராக அச்சுதன் உள்ளனர். தாயார் செங்கமலம், ஹேமாம்புஜவல்லி அமையப் பெற்றுள்ளது.
இங்கு மூலவராக தேவநாதரும், உற்சவஆவார்கள்.தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக கருட தீர்த்தமும் உள்ளது.தேவநாதசாமி கோவிலின் எதிரில் அவுசதகிரி மலைஉள்ளது.இதில் செல்வத்துக்கும், கல்விக்கும் அதிபதியான பரிமுகத்துடன் கூடிய லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதி அமைந்துள்ளது.
தல வரலாறு
ஒரு சமயம் அசுரர்களால் தேவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.அப்போது அந்த தேவர்கள் இப்பகுதிக்கு வந்தனர். அவர்கள்கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் இருந்து திருமாலைவழிபட்டனர்.திருமாலும் அவர்களுக்கு உதவுவதாக உறுதி அளித்தார்.
இதை அறிந்த அசுரர்கள் நான்முகனிடம் இதுபற்றி முறையிட்டனர். ஈசனின் துணை கொண்டு யுத்தம் செய்யுமாறு நான்தனது வல குறிப்பிடத்தக்கதாகும்.
முகன் பணித்தார் ஈசனும் அசுரர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்.
தேவர்கள் ஈசனால் தாக்கப்பட்டனர். ஏற்கனவே தேவர்களுக்குஉதவுவதாக வாக்கு அளித்த திருமாலால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் அவர் சக்ராயுதத்தை ஏவினார். அது அசுரர்கள் அனைவரையும் தோல்வியடையச் செய்தது.
அசுரர்கள் அனைவரும் திருமாலிடம் சரணடைந்தனர்.
அனைவரையும் அரவணைத்த திருமால், தானே மும்மூர்த்தியாக அருள்பாலிப்பதாகக் கூறி தனது திருமேனியில் நான்முகனையும், ஈசனையும் காண்பித்தார். இதில் தேவர்களுக்கு தலைவனாக
இருந்ததால் 'தேவநாதன்' என்ற பெயர் உருவானது.
அதேவேளை தனது தந்தையார் நான்முகன் அருளியபடி பிரம்மதீர்த்தத்தில் தாமரை மலரின் நடுவே திருமகள், குழந்தையாகபிருகு முனிவர் முன் தோன்றினார்.அவருக்கு ஹேமாம்புஜவல்லி
என்று பிருகு முனிவர் பெயரிட்டு அழைத்து வந்தார்.
ஹேமாம்புஜ வல்லியும் நாராயணனையே தன் கணவராக அடைய கோவிலில் உள்ள சேஷ தீர்த்தக் கரையில் தவம் செய்தார். அவரது தவத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவநாதன், அவர்முன்னர் தோன்றி, பிருகு முனிவரின் சம்மதத்துடன் அவரைக் கரம் பிடித்தார்.
ஈசன், இந்திரன், பூதேவி, பிருகு முனிவர், மார்க்கண்டேயர்.
தேவநாதர்முதலானோர் தவம் செய்த தலமாக இது விளங்குகிறது. இந்தஇடத்தில் திருமால் மும்மூர்த்தியாக வாசம் செய்வதை அறிந்தஆதிசேஷன், இந்த இடத்திலேயே ஒரு நகரத்தை உருவாக்கினார்,அதுவே திரு அஹீந்திரபுரம் என்ற பெயரோடு விளங்கி, தற்போது'திருவந்திபுரம்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இங்கு வந்த திருமாலுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டது. அதன்படியே கருடாழ்வாரும் உடனே தீர்த்தம் அடுத்து, கருடாழ்வாரை அழைத்து தனக்கு தீர்த்தம் கொண்டுஎடுத்துவரச் சென்றார். அப்போது, ஒரு ரிஷியின் கமண்டலத்தில்விரஜா தீர்த்தம் இருப்பதை அறிந்த கருடாழ்வார், தன் அலகால்அந்த கமண்டலத்தை தட்டி விட்டார். இதனால் கோபத்தின் உச்சம்சென்ற் அந்த ரிஷி, 'இந்த நீர் கலங்கட்டும்' என்று சபித்தார்.
உடனே கருடாழ்வார், திருமாலின் தாகம் தீர்க்கவே தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார். அதைக் கேட்டு வருந்திய ரிஷி -'கலங்கிய நீர் தெளியட்டும்' என்றார். இப்படி, கருடனால் கொண்டு வரப்பட்ட தீர்த்தம் தான், கெடிலம் ஆறாக கோவிலையொட்டி பாய்ந்தோடுகிறது.
ரிஷியின் சாபத்தால்இன்றும் கருட நதியின் (கெடிலம்) தீர்த்தம், மழைக் காலத்தில் கலங்கிய நிலையில் ஓடுகிறது.கருடாழ்வார் திருமாலுக்கு ஏற்பட்டதாகத்தை போக்க தீர்த்தம் எடுத்து வரதாமதம் ஏற்பட்டது.
இதனால், அருகில் இருந்த ஆதிசேஷன் தன்வாலால் பூமியைப் பிளந்து, அங்கிருந்து ஊற்று பெருகச் செய்தார்.
அதன் மூலம் திருமாலின் தாகத்தை தீர்த்து வைத்தார்.இப்போதும்சேஷ தீர்த்தம் என்ற கிணறு கோவிலின் உள்ளே தெற்கு பகுதியில்அமைந்து இருப்பதை பக்தர்கள் காணலாம். இந்த சேஷ தீர்த்தத்தை பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள். இதனுள் உப்பு, மிளகுவெல்லம் போட்டு வழிபட்டால்பல நோய்கள் குணமாகும் என்பதுபக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இத்தல தேவநாதப் பெருமாளை வணங்குவதால் உயர் பதவி,குழந்தை வரம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, நிலைத்த செல்வம்கிடைக்கும். தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் பக்தர்கள்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விப்பது வழக்கமாக இருந்துவருகிறது.
இந்த கோவிலில் திருமணத்தை நடத்தினால், மணமக்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சகல பாக்கியமும் பெற்று நீடூழிவாழ்வார்கள். ஆகையால் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் இங்கே நடைபெறுவதைக் காண முடியும்.
இந்தக் கோவிலில் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரமோற்சவமும், வைகாசி விசாகம் நம்மாழ்வார் சாற்றுமுறை 10 நாள் உற்சவம்,பெருமாள் வசந்த உற்சவம் 10 நாள் (பவுர்ணமி சாற்றுமுறை), நரசிம்ம ஜெயந்தி, ஆடி அமாவாசை, ஆவணி பவித்ர உற்சவம்,கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், புரட்டாசி தேசிகன் பிரம்மோற்சவம்,ஐப்பசி தீபாவளிப் பண்டிகை, முதலாழ்வார்கள் உற்சவம் போன்றவிழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருப்பதைக் காணலாம்.
இத்தல மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம், 'சுத்தசத்வம்’என்று அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக விளங்கும் திருவந்திபுரம் தேவநாத சாமியை வந்து தரிசித்து நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர்'கல்விக் கடவுள்' சரஸ்வதி. அந்த சரஸ்வதிக்கேகல்வியறிவைக் கொடுத்தவர், ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். இவருக்குதமிழகத்தில் முதன் முதலில்கோவில் அமையப்பெற்றதலம் இது என்பது தனிச்சிறப்பு.
தேவநாதசாமி கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள அவுசதகிரி மலை மீது ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலையானது,இமயமலையில் இருந்து சஞ்சீவி மலையை அனுமன் இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் விழுந்த சிறு துண்டு என்கிறார்கள்.
இங்கு வசித்து வந்த வேதாந்த தேசிகர் என்பவர், ஹயக்ரீவரை பெரிதும் விரும்பி வழிபட்டார். அவருக்கு ஹயக்ரீவமந்திரத்தை கருட பகவான் உபதேசித்தார். எப்போதும்ஹயக்ரீவ மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்த தேசிகருக்குஹயக்ரீவர் அருள்பாலித்ததோடு மட்டுமல்லாது, அனைத்துவேத சாஸ்திரங்களையும் இந்த அவுசதகிரி மலையிலேயேகற்பித்தார்.
தேசிகரால் வழிபடப்பட்ட ஹயக்ரீவரை இன்றும்தேவநாத சாமி கோவிலில் மலை மீது உள்ள தனி சன்னிதியில் காணலாம். இத்தலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர், லட்சுமியை தனது வலது தொடையின் மீது அமர வைத்திருப்பதுகுறிப்பிடத்தக்கதாகும்
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment