Thursday, May 15, 2025

திருப்பதி ஏழு மலைகள் ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஆழ்ந்தப் பொருளுண்டு.



திருப்பதி திருமலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என அன்போடு அழைப்பர்.
ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட, ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளன. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஆழ்ந்தப் பொருளுண்டு.

#ஒன்றாம் மலை

‘வேம்” என்றால் பாவம், ‘கட” என்றால் ‘நாசமடைதல்”. பாவங்களைப்போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு ‘வேங்கட மலை” என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

#இரண்டாம் மலை

பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த  *ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை” என்று அழைக்கப்படுகிறது.

#மூன்றாம் மலை

வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை” என்று அழைக்கப்படுகிறது.

#நான்காம் மலை

சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை ‘கருட மலை” எனப் பெயர் பெற்றது.

#ஐந்தாம் மலை

விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு ‘விருஷப மலை” என பெயர் வந்தது.

#ஆறாம் மலை.

ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரை பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை” எனப்படுகிறது.

#ஏழாம் மலை.
         ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு ஆனந்த மலை  என்று பெயர் வந்தது. 

இந்த ஏழுமலைகளின் காரணமாக திருப்பதி  வேங்கடவனுக்கு  ஏழுமலையான் என்று பெயர் வந்தது.

ஏழுமலையானே சரணம் 
அன்னை மகாலட்சுமியே போற்றி.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...