Wednesday, July 9, 2025

ஈசனால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட காரைக்காலம்மையாரின் மாங்கனி விழா

*ஈசனால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட காரைக்காலம்மையார் பெருமையைப் போற்றும் மாங்கனி திருவிழா!* 
அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்ற காரைக்கால் அம்மையார் 3ம் நூற்றாண்டில் அவதரித்தவர். தாய், தந்தையற்ற இறைவனால் ‘அம்மையே’ என்று அன்புடன் அழைக்கப்பெற்ற பெருமையுடையவர். திருக்கோயில்களில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருப்பவரும் இந்த அம்மையார் ஒருவரே.

சோழ வள நாட்டில் காரைக்கால் ஒரு அழகிய துறைமுக நகரம். மூன்றாம் நூற்றாண்டில் தனதத்தர் எனும் வணிகர் வணிகக் குலத் தலைவராக வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு பிறந்த மகளுக்கு புனிதவதி என பெயர் சூட்டி மகிழ்ந்தார் தனதத்தர்.

புனிதவதியார் சிறு வயதிலிருந்தே சிவ பூஜை செய்து வந்தார். புனிதவதியார் பருவமடைந்ததும் மணமுடித்து வைத்தனர் பெற்றோர். ஒரு நாள் பரமதத்தரைக் காண வந்த அவரது நண்பர்கள் இரு மாங்கனிகளை அவரிடம் கொடுத்துச் சென்றனர்.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

அவர் அவற்றை தனது வீட்டுக்குக் கொடுத்தனுப்பினார். அன்று நண்பகல் சிவனடியார் ஒருவர் புனிதவதியாரின் வீட்டுக்கு வந்தார். அவரின் பசித்த நிலைக்கண்டு புனிதவதியார் அவருக்கு அமுது படைத்து மாங்கனிகளில் ஒன்றை சாதத்தோடு அவரது இலையில் இட்டார். அதை உண்ட அவர், புனிதவதியாரை வாழ்த்திச் சென்றார். பிறகு வீட்டுக்கு வந்த பரமதத்தருக்கு உணவு பரிமாறி  மாங்கனியையும் உணவோடு வைத்தார்.

அந்த மாங்கனி சுவையாய் இருந்ததால் மற்றொரு கனியையும் அவர் கொண்டுவரும்படி கேட்டார் கணவர். புனிதவதியார் செய்வதறியாமல் இறைவனிடம் சென்று முறையிட, அவர் கையில் மாங்கனி ஒன்று வந்தது. அது முதலில் சாப்பிட்டதை விட சுவையாக இருப்பதை அறிந்து, ‘இக்கனியை எங்கு பெற்றாய்’ எனக் கேட்க அதற்கு அம்மையார், ‘இது இறைவன் கொடுத்தது’ எனச்  சொன்னதை அவர் நம்பவில்லை.

‘அப்படியெனில் அந்த இறைவனிடம் இன்னொன்று பெற்றுக் கொடு’ எனக் கேட்க, மற்றொரு கனி வந்தது. அதை கணவர் கையில் கொடுக்க, அந்த மாங்கனி மறைந்தது. இதைக் கண்டதும் தனது மனைவி மனிதப் பிறவி அல்ல, தெய்வம் எனக் கருதி பொருளீட்டுவதாகச் சொல்லி பாண்டி நாடு சென்றார். அங்கு வாணிபம் சிறந்ததும் மறுமணம் புரிந்து கொண்டார்.

அவருக்கு ஒரு மகள் பிறந்து அதற்கு புனிதவதி எனப் பெயர் சூட்டி, கூப்பிடும் போதெல்லாம் திருமந்திரம் ஓதுவதாக எண்ணி மகிழ்ந்தார். அம்மையாரோடு உறவினர்கள் அவரைக் காணச் சென்றபோது மனைவி, மகளுடன் அம்மையாரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

‘இனி, தனக்கு அழகு மேனி தேவையில்லை. பேய் உருவம் தந்தருள வேண்டுமென வேண்டி, ஈசனை தரிசிக்க தரையில் கால் வைக்காமல் தலையாலேயே நடந்து சென்றார். இதனைக் கண்ட ஈசன், ‘அம்மையே, நம்மிடம் நீ வேண்டுவது யாது?’ எனக் கேட்க, அம்மையார் இறைவனை, ‘அப்பா’ என்றழைத்து, இறவாத அன்பு வேண்டும், பிறவாமை வேண்டும், பிறப்புண்டேல் உம்மை மறவாமை வேண்டும்’ என்று வேண்டினார். அதற்கேற்ப இறைவன், ‘அம்மையே நீ திருவாலங்காடு அடைந்து எமைப் பாடு’ என்று பணித்தார். திருவாலங்காட்டில் ‘கொங்கைதிரங்கி’ எனவும், ‘எட்டி இலம் ஈகை’ எனத் தொடங்கும் மூத்தத் திருப்பதிகங்களை அம்மையார் பாடி அருளினார். திருவாலங்காட்டில் இறைவனின் பொற்பாத நிழலில் அம்மையார் என்றும் வீற்றிருக்கும் பெறற்கரிய பேறு பெற்றார்.

மாங்கனியை வைத்துத் திருவிளையாடல் புரிந்த ஈசனின் பேரருளைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இத்திருத்தலத்தில் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. 

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, July 8, 2025

காஞ்சிபுரம் கச்சிஓணகந்தான்தள்ளி ஓணகாந்தேஸ்வரர்.

உலகப் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்ற தலமான , கோயில்களின் நகரமான
#காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள #கச்சிஓணகந்தான்தள்ளி என்ற 
#திருஓணகாந்தன்தளி
#ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

"நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; 
கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; 
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, 
உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! 

திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, 'நெய், பால், தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவாரது கையில்காசு ஒன்றும் காணப்படுகின்றதில்லை. அவ்வாறே, உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி, இவ்வுலகத்தில், புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று, அச்சுழற்சியாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது என சுந்தரரால் பாட பெற்றது. சுந்தரர் பொருள் வேண்டி இறைவனை சற்றே வஞ்ச புகழிச்சியோடு பதிகம் பாடியுள்ளார்.

ஊர்: ஓணகாந்தன்தளி,
காஞ்சிபுரம் - பஞ்சுப்பேட்டை

மூலவர்: ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர்

அம்பாள்: காமாட்சி அம்மன்

ஸ்தல விருட்சம்: வன்னி, புளியமரம்

தீர்த்தம்: ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம்

வழிபட்டோர்கள் :  ஓணன், காந்தன்,சலந்தரன்

*கோயில் வரலாறு:

அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தன்ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான். இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப்பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான்.

தல வரலாறு : 

ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது.

காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சிக்கு தனிக்கோயில் இருக்கிறது. அவளே சர்வவியாபி என்பதால், இந்நகரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது.

ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர் .சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 235 வது தேவாரத்தலம் ஆகும்.

விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் "ஓம்' என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாகச் சொல்லப்படுவதுண்டு.

*ஆலய சிறப்புகள்: 

ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். இது தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுகிறது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது ஐதிகம்.

3 நிலை இராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி தருகிறது.கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில் சிவன் உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஓணேஸ்வரர் சந்நிதி அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம். அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். இத்தலத்திலுள்ள வயிறுதாரிப் பிள்ளையார் சந்நிதியை சம்பந்தர் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிடுகிறார். இது தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இத்தலத்தில் தட்சினாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். முருகர் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். கோவிலுக்கு வெளியே தான்தோன்றி தீர்த்தம் உள்ளது.

சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, நெய்யும் பாலும் தயிரும் கொண்டு என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொன் பெற்றார் என்பது வரலாறு. இப்பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும், அதையறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக ஒரு செய்தி இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகின்றது.

ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்

ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ளது.

*அமைப்பு:

வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட இத்தலத்தில் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் அடுத்தடுத்து தனிச் சன்னதிகளாக உள்ளன. சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி தனியே உள்ளது. [2] இவ்வகையில் ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில் வளாகத்தில் மூன்று சிவலிங்கத் திருமேனிகளை மூலவராகக் கொண்ட மூன்று சன்னதிகள் உள்ளன. அவை ஒரே நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளன.

*ஓணகாந்தேஸ்வரர்:

ஓணகாந்தேஸ்வரர் (ஓணேஸ்வரர்) சன்னதியின் கோஷ்டத்தில் பாலவிநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முன்புறத்தில் பலி பீடம் மற்றும் நந்தி உள்ளன. இங்கு வயிறுதாரி விநாயகர், குமார வேலன், பைரவர், சூரியன் நவக்கிரகம், அகோர வீரபத்திரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

*காந்தேஸ்வரர்:

காந்தேஸ்வரர் சன்னதியின் வலது புறத்தில் ஓம்கார கணபதி, இடது புறத்தில் சுப்ரமணியர் ஆகியோர் உள்ளனர். முன்புறம் நந்தி மண்டபம் உள்ளது.

*சலந்தரேஸ்வரர்:

சலந்தரேஸ்வரர் சன்னதிக்கு மேற்கண்ட இரு சன்னதிகளின் வலது புறத்தில் உள்ள திருச்சுற்றில் உள்ள வாயில் வழியாகச் செல்ல வேண்டும். வெளியிலிருந்து நேரடியாக உள்ளே வரமுடியாது. சலந்தரேஸ்வரர் சன்னதியின் திருச்சுற்றில் கணபதி சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. முன் புறத்தில் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன.

* திருவோணகாந்தன் தளிப்படலம் (1462 - 1470)
கலிவிருத்தம்:

பேண வல்லர் பிறவு தீர்த்தருள்
        வாண நாத மரபு சொற்றனம்
        யாணவர் வண்மை பெருமி தன்குணக்
        கோண காந்தன் தளியு ரைத்துமால்

சலந்தேரசப் படலம்: (1471 - 1493)

 ஓணனார்க் காரியவர் ஓணகாந் தந்தளி
        நீநகர் மேன்மையத் தெரிந்தவா நிகழ்த்தினாம்
        மாணமர் காட்சிசால் மற்றதன் வடதிசைப்
        பேணிய சலந்தேர சத்தியல் பேசுவாம்.
        ஓணனார் – திருவோண நட்சத்திரத்துக்கு உரிய திருமால்

*கல்வெட்டுகள்:

பல்லவர் காலத்திற்கு முன்பே அசல் கோயில் இருந்ததாகவும், பல்லவர்களாலும் பின்னர் விஜயநகரர்களாலும் மீண்டும் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது  . இந்தக் கோயிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. 1 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர மன்னர்களால் இந்தக் கோயில் மீண்டும் புனரமைக்கப்பட்டது . 

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி ஸ்ரீ சிவஞான சுவாமிகள் ஓணான், காந்தன் மற்றும் ஜலந்திரன் ஆகியோரின் ஸ்தல புராணத்தை எழுதி  காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களை வழிபட்டார்.

தரிசன பயன்கள்: 

பொன், பொருள் வேண்டுவோர் இறைவனை வழிபட்டு இக்கோயில் பதிகத்தை பாட கேட்டது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

எப்படி செல்வது : 

ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை  உள்ளது. 

தி

நந்தியை வழிபடுவது சிவனை வழிபடுவதற்கே சமம்.

சிறப்பு நந்தி வழிபாடு பற்றிய பதிவு
சிறப்பு நந்தி வழிபாடு என்பது, பரமசிவனின் வாகனமாகவும், அடையாளமாகவும் விளங்கும் நந்தி தேவரை பிரத்யேகமாக நம்பிக்கையுடன் வழிபடும் ஒரு உயர்ந்த ஆன்மிக முறையாகும். 

சிவபெருமானின் அருகிலேயே, எப்போதும் தரிசன நிலையில் இருப்பவராக நந்தி பகவான் கண்ணோட்டம், விசாரம், சமர்ப்பணம் என்பவற்றின் அடையாளமாக போற்றப்படுகிறார். இதுகுறித்து மேலும் விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*நந்தி யார் ?*

நந்தி தேவர் (நந்திகேசுவரர்) என்பது பரமசிவனின் பக்தசிரோமணி.

சிவபெருமானின் வாசலுக்கு எதிராக அமர்ந்து, நமசிவாய மந்திரத்தை என்றும் ஜபித்து கொண்டிருப்பவராக நந்தி காணப்படுகிறார்.

நந்தி உருவம் பொதுவாக வெள்ளை மாடு (பசு) போல காணப்படும்.

நந்தியின் மேல் சிவபெருமான் ஆசீர்வதித்ததில் இருந்து, அவர் தரிசிக்கிறவனை சிவதரிசனம் செய்ததாகவே கருதப்படுகிறது.

*நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம்*

1. நந்தியை வழிபடுவது சிவனை வழிபடுவதற்கே சமம்.

2. நந்தியின் வாயிலாக சிவபெருமானிடம் மன அழுத்தங்கள், பிரார்த்தனைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

3. நந்தியின் காதில் "உரையாத ஆசைகளை மந்திரமாகச் சொல்லும்" மரபு மிக பிரசித்தமானது.

4. நந்தி வழிபாடால் அருள் அடையும் வாய்ப்பு, ஒழுக்கம், பக்தி, சக்தி எல்லாம் கிடைக்கும்.

*நந்தி வழிபாட்டு முறை :*

*1. வாசலில் நின்று நந்தி தரிசனம் :*

சிவன் சந்நிதிக்கு செல்லும் முன், நந்தி மீது கண்ணை நிலைநிறுத்தி, நந்தியின் வழியாகவே சிவனை தரிசிக்க வேண்டும்.

இது, "குருவின் வழியே ஈஸ்வரனை காணும்" மரபின் ஒரு அடையாளம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, July 7, 2025

திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் ரகசியம்.

திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு
திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும்  ஒரு  பெயர்  உண்டு.  அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும். இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

1. ராஜகோபுரம் (கிழக்கு), 2. பேய்க் கோபுரம் (மேற்கு),
3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 5. வல்லாள மகாராஜா கோபுரம், 6. கிளி கோபுரம்,
7. வடக்கு கட்டை கோபுரம், 8. தெற்கு கட்டை கோபுரம்,
9. மேற்கு கட்டை கோபுரம்.

1. ராஜகோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார். அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால் அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன. கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பேய்க்கோபுரம்

ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார். 

இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர். மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

3. திருமஞ்சன கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள். அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது. 

4. வல்லாள மகாராஜா கோபுரம்

இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு. ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது. அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. 

5. கிளி கோபுரம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும். 1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. 

அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று. அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார். கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. 

இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.

6. தெற்கு கட்டை கோபுரம்

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன. 

7. மேற்கு கட்டை கோபுரம்

பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. 

8. வடக்கு கட்டை கோபுரம்

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. 

9. அம்மணியம்மாள் கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது.

ஓம் நமசிவாயம்.

திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும்  ஒரு  பெயர்  உண்டு.  அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும். இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

1. ராஜகோபுரம் (கிழக்கு), 2. பேய்க் கோபுரம் (மேற்கு),
3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 5. வல்லாள மகாராஜா கோபுரம், 6. கிளி கோபுரம்,
7. வடக்கு கட்டை கோபுரம், 8. தெற்கு கட்டை கோபுரம்,
9. மேற்கு கட்டை கோபுரம்.

1. ராஜகோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார். அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால் அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன. கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பேய்க்கோபுரம்

ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார். 

இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர். மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

3. திருமஞ்சன கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள். அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது. 

4. வல்லாள மகாராஜா கோபுரம்

இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு. ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது. அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. 

5. கிளி கோபுரம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும். 1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. 

அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று. அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார். கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. 

இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.

6. தெற்கு கட்டை கோபுரம்

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன. 

7. மேற்கு கட்டை கோபுரம்

பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. 

8. வடக்கு கட்டை கோபுரம்

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. 

9. அம்மணியம்மாள் கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது.

ஓம் நமசிவாயம் 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, July 5, 2025

விஸ்வரூப தரிசனத்தின் அளப்பரிய பலன்கள்

விஸ்வரூப தரிசனத்தின் அளப்பரிய பலன்கள் தெரியுமா?
 விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலையில் இறைவனைக் காணும் முதல் தரிசனம் என்று பொருள்.

அதாவது, இறைவனை திருமஞ்சனத்திற்கு முன்னே அவரது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது.

திருமஞ்சனம் என்னும் சொல் இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.

மற்ற தரிசனத்திற்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் என்ன வித்தியாசம் என்கிறீர்களா?

நாம் இறைவனைக் காண்பது தரிசனம்.

ஆனால், இறைவன் நம்மைப் பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலையில் முதல் முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும் தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார்.

அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும் அதுதான் விஸ்வரூப தரிசன சிறப்பு.

ஒரு கோயிலில் விஸ்வரூப தரிசனத்திற்காகக் காத்திருந்தபோது வந்திருந்தவர்களில் கண் பார்வையற்றவர்களும் இருந்தார்கள்.

அந்தக் காலை நேரத்தில் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது வியக்க வைத்தது.

இந்த விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பை அறிந்துதான் அந்த கண் பார்வை அற்றவர்களும் வந்திருக்கிறார்கள்.

இறைவனை அவர்களால் பார்க்க முடியாவிட்டாலும் இறைவனின் அருட்பார்வை அவர்களுக்குக் கிடைக்கும் அல்லவா.

எனவே, இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள் உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள்.

விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.

 திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனின் விஸ்வரூப தரிசனம் எப்படி இருக்கும் தெரியுமா?

குழந்தையாக இருந்த முருகன் தேவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த செய்தி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்தில் சூரபத்மனுக்கும் விஸ்வரூப தரிசனம் தந்த பின்னரே அவனை ஆட்கொண்டு அருள்புரிந்தார்.

இந்த தரிசனத்தின்போது முருகனின் சேனை தலைவர் வீரபாகு முருகனின் உடலில் பதினான்கு உலகங்களையும் தரிசிக்கும் பேறு பெற்றார்.

இதன் அடிப்படையில் தினமும் காலை 5 மணிக்கு திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

செந்திலாதிபன் சுப்ரபாதம்:

இந்த தரிசனத்தின்போது வள்ளியம்மன் கோயிலில் செந்திலாதிபன் சுப்ரபாதம் பாடப்படும். அதன்பின் பள்ளியறை தீபாராதனையும் கருவறையில் மூலவருக்கு பூஜையும் நடைபெறும்.

அதன் பின் கொடிமரத்தடியில் பள்ளியறையில் வைத்த பாலும் கற்கண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

விஸ்வரூப தரிசனம் கண்டவர்களுக்கு வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி சுபயோகம் உண்டாகும். அதிகாலை விஸ்வரூப தரிசித்தின்போது பன்னீர் இலை விபூதி பிரசாதம் கொடுப்பது வழக்கமாகும்.

பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை வாங்குவதற்காகவே விஸ்வரூப தரிசன நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் சுப்பிரமணியர் சன்னிதி முன்பாக காத்திருப்பார்கள்.

பன்னீர் இலை விபூதியை நோய் தீர்க்கும் அருமருந்தாகப் பயன்படுத்துவதால் அதற்காகவே அனேக பக்தர்கள் காத்திருப்பார்கள்.

பழனியில் அதிகாலை முருகன் மீது வியர்வை துளிகள் இருப்பதைக் காண முடியும். காலையில் மூலவர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் முழுவதும் களையப்பட்டு சிறு வில்லையாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

இது தீராத நோயையும் தீர்க்கும் அருமருந்தாகும்.

சந்தனம் களையப்பட்ட பிறகு நடத்தப்படும் தரிசனத்திற்கு விஸ்வரூப தரிசனம் என்று பெயர்.

ஸ்ரீரங்கம் தலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை விசுவரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும்.

இந்த நேரத்தில் ஸ்ரீ ரங்கநாதரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

 திருமணமாகாதவர்களுக்கு சுக்ர தோஷம் விலகி, உடனே திருமணம் கைகூடும்.

சிறப்புகள் பல பெற்ற எந்தக் கோயிலிலும் காலையில் விஸ்வரூப தரிசனத்தை தரிசித்தால் எண்ணற்ற பலன்களை பெற்று வாழ்வில் சிறக்கலாம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, July 4, 2025

முருகப்பெருமான் வழிபட்ட பஞ்ச கடம்ப ஆலயங்கள்

முருகப்பெருமான் வழிபட்ட பஞ்ச கடம்ப ஆலயங்கள் 02 : அகர கடம்பனூர் மற்றும் கடம்பூர் வாழ்க்கை ஆலயங்கள்.
முருகப்பெருமான் தான் சூரபத்மனைக் கொன்ற சாபம் தீர சிவனை வணங்கிய தலங்களில் இந்த ஐந்து கடம்ப ஆலயங்களும் முக்கியமானவை என்பதைக் கண்டோம்.

இவை முருகன் சக்தியிடம் வேல் வாங்கிய அந்த சிக்கல் பக்கம் அமைந்துள்ளன. முருகப்பெருமான் எங்கே தன் யுத்தத்தின் தொடக்கத்தை கண்டாரோ அங்கே அந்தப் போருக்கான பிராயசித்தமும் தேடினார். கீழ்வேளூரில் சிவனை வணங்கி அந்த ஆலயத்தினைச் சுற்றி கடம்பமரத்தடியில் ஐந்து லிங்கம் ஸ்தாபித்து வணங்கினார்.

ஒருவகையில் இவை பஞ்சலிங்க தத்துவம் கொண்டவை. பஞ்சலிங்கங்கள் என்றால் சிவனின் ஐந்து தொழில்களையும் ஐந்து பூத தத்துவத்தையும் ஒருசேர சொல்லும் தத்துவம் கொண்டவை.

அவ்வகையில் முதல் ஆலயமாக ஆழியூர் உண்டு. அங்குக் கங்காளநாதராக அதாவது எலும்பினைப் பெற்றுக்கொள்ளும் வடிவமாக சிவன் உண்டு.

ஆழி என்றால் கடல் அவ்வகையில் அந்த ஆலயம் சிவனின் பஞ்சபூத வடிவமான நீர் தத்துவத்தைச் சொல்லி போதித்த ஆலயம். அப்படியே அவரின் ஐந்து தொழில்களில் ஒன்றான அழித்தல் தொழிலையும் சொன்னது.

கங்காள நாதர் என்றால் எலும்பினைத் தாங்குபவர். அதாவது, ஒருவன் காலம் முடிந்து எது அழியாததோ அந்த அவன் ஆத்மா சிவனோடு கலக்கின்றது, வாழ்வின் முடிவில் அவன் அடைவது சிவனே என்பதைச் சொல்லும் தத்துவம்.

எல்லாம் சிவனில் முடிகின்றது என்பதைச் சொல்லும் தத்துவம் அது. சிவன் நம் கர்மவினைகளை எல்லாம் ஏற்றுக்கொள்கின்றார், எல்லாம் அவரில் கரைகின்றது என்பது அந்தத் தத்துவம்.

அவ்வரிசையில் இரண்டாம் ஆலயம் இந்த அகர கடம்பனூர் எனும் ஊரில் இருக்கும் கைலாச நாதர் ஆலயம், இது ஆழியூருக்கு வெகு அருகில் உண்டு.

இந்த அகர கடம்பனூர் என்பது இப்போது கோயில் கடம்பனூர் என அழைக்கப்படுகின்றது. இது ஒரே ஒரு பிரகாரம் கொண்ட ஆலயம், இறைவன் கைலாச நாதர், அன்னை சௌந்தர நாயகி.

இவர்களோடு முருகப்பெருமான் அழகே உருவான வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கின்றார்.

அகரம் என்றால் சிவன் என்பதை அவரே மூலம் என்பதை உணர்ந்தால் இந்த ஆலயத்தின் சிறப்பு விளங்கும், "அ" என்பது எழுத்துக்கு மட்டும் முதல் அல்ல, எது மூலமோ அது அகரம்.

தமிழ் அச்சிறப்பைச் சிவபெருமானின் அடையாளமாக பெற்றது. ஓங்காரமான ஓம் எனும் ஒலி அ+உ+ம் எனக் கூடிவரும், அந்த அ என்பது மூலம், அந்த மூலமே சிவம்.

இதையே சிவஞான சுவாமிகளின் பாடல்  சொல்லும்,
"பகவதி கரவணை மிசைதுயில்‌ பயிலு 
மிகலறு குமரனை யினிதமுள்‌ புரிக 
அகரமு முகரமு மகரமு மாகித்‌ 
திகழுறு பிரணவ மெழுசிறு களிறே"

என்பது அகரம், உகரம், மகரமே பிரணவம். அந்தப் பிரவணமே மூல சக்தி. அது ஆதிசக்தியிடம் இருந்து வந்தது என்பதைச் சொல்கின்றது.

திருமூலர் சொல்வார்.

"அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம தாமே"

"அகர வுயிர்போ லறிவாகி வெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து"

என்பது  உமாபதி சிவாச்சாரியார்.

"தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான் 
அகர முதலானை யணியாப்ப னூரானைப் 
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே"
என்பது ஞானசம்பந்தர் பாடல்.

இதையே வள்ளுவன் சொன்னான். 

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

இதைத்தான் இறைவனை அடையும் வழியின் தொடக்கம் என்றார்கள்  இந்துக்கள். அதைத்தான் வள்ளுவனும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவனை அடையும் வழி, அவனே உலகில் முதன்மையானவன் எனச் சொன்னான்.

("அகர முதல" என்பது "அகர முகர" என்றுதான் இருந்திருக்க வேண்டும். பின்னாளில் அது மாறியிருக்கலாம் என்பாரும் உண்டு, அப்படி ஒரு வாதம் உண்டு. )

அகரம் உகரங்கள் எனும் உயிர்சக்தி 'ம்' எனும் மெய்சக்தியுடன் கூடி 'ஓம்' என்றாகி படைப்பைத் தொடங்கின. எல்லாப் படைப்புக்கும் எல்லா உயிர்க்கும் அதுவே மூலம்.

ஆக, 'அ' என்றால் தொடக்கம், மூல தொடக்கம். அந்த அகரத்தைக் கொண்டு அகர கடம்பனூர் என எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது சிவன், எல்லாம் அவரிடம் இருந்தே தோன்றுகின்றது எனும் தத்துவத்தைச் சொல்லும் ஆலயம் இது.

எது மூலமோ அது சிவன், அந்தச் சிவன் நம்மை நம் பாவங்களைத் தீர்த்து சாபம் தீர்த்து தாயினைப் போல் அணைத்துக் கொள்வார், அவர் புதுவாழ்வு தருவார் என்பது இதன் தாத்பரியம்.

இங்குக் கைலாசநாதர் எனச் சிவன் அமர்ந்திருக்கின்றார், அது ஒருவகையில் அவரின் படைப்புத் தொழிலைக் குறிப்பது. கைலாசம் என்பது சிவனின் இருப்பிடம் அங்கிருந்தே சிவன் படைப்புத் தொழிலுக்கு மூலமாய் அமர்ந்திருக்கின்றார்.

உலகின் எல்லா முடிவும் படைப்பும் தீர்மானமும் இயக்கமும் அங்கிருந்தேதான் வருகின்றன. அந்தப் படைப்புத் தொழில் தத்துவத்தைச் சொல்லும் இந்த ஆலயம் சிவனின் பஞ்சபூத தத்துவத்தையும் சொல்கின்றது.

அதன்படி இது மண் எனும் பஞ்சபூத தத்துவம் கொண்ட தலம் இது. மண் என்பது நீரில் இருந்தே உருவாகும், மண்ணே எல்லா உயிரின் தோற்றத்துக்கும் இயக்கத்துக்கும் அடிப்படை ஆதாரம், மண் என்பதே எல்லா உயிர்கள் தோன்றவும் வாழவும் ஆதாரம்.

சுருக்கமாகச் சொன்னால் மானுடர் கர்மா தீர மண்ணே ஆதாரம். கர்மா கழிக்க ஆத்மா மானிட உடலில் தங்கி உலாவும் இடம் இந்த மண்ணே, மண்ணே கர்மம் தீர முதல் அடிப்படை ஆதாரம்.

இந்த மண்மேல் தங்களுக்கு அதிகாரம் கொடுத்தவர் சிவன் எனப் பல்லவர்கள் எழுப்பிய ஆலயம் கைலாசநாதர் ஆலயங்களாகவே இருந்தன. அந்தப் பின்னணியில் இந்தத் தத்துவமும் நுணுக்கமாக இருந்தது.

அவ்வகையில் அந்த ஞான தாத்பரியத்தில் இந்த ஆலயம் இந்த மண்ணில் செய்யும் அத்தனை கர்மத்தையும் ஏற்றுக்கொண்டு புதிய பிறப்பாக, புதிய படைப்பாக நம்மை மாற்றும், முருகப்பெருமானுக்கு இந்த ஆலயம் செய்த அருள் இது.

கர்ம வினையினை நீக்கிப் புதிய வாழ்வினைப் புதுபிறப்பாக தரும் சக்திமிக்க ஆலயம் இந்த அகர கடம்பனூர் ஆலயம். எல்லாமே புதிதாக இங்கிருந்து தொடங்கும்.

அடுத்த ஆலய கடம்பூர் வாழ்க்கை எனும் ஊரில் அமைந்திருக்கும் விஸ்வநாதர் ஆலயம்.

இது அகர கடம்பனூரில் இருந்து அண்மித்திருக்கின்றது. இது கிழக்கு நோக்கிய ஆலயம் முகப்பில் விநாயகர், முருகன் மற்றும் நாயன்மார்கள் சூழ ரிஷபரூடர் சிலைகள் உண்டு.

பலிபீடமும் நந்தி மண்டபமும் கருவறையை நோக்கியவாறு அமைந்துள்ளது, கருவறையில் மகா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை உண்டு.

மூலஸ்தான தெய்வம் இங்கு விஸ்வநாதர் அல்லது சகலநாதர் எனக் கிழக்கு நோக்கி  இலிங்க வடிவில் வீற்றிருக்கிறார். தாயார் கற்பகவல்லி, அவள் மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறாள். இங்கு வரதராஜப் பெருமாளுக்குத் தனிச் சன்னதி உள்ளது. 

இந்த ஆலயம் விஸ்வநாதர் என சிவன் அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலயம், அவ்வகையில் இது அக்னி தலம்.

காசி என்பது முக்தி தலம், அங்குதான் விஸ்வநாதாராக சிவன் அமர்ந்து எல்லா ஆத்மாவுக்கும் முக்தி நிலை வழங்கிக்கொண்டிருகின்றார். அதாவது, முழு கர்மமும் தீர்த்துத் தன்னுள் ஏற்று அருள்பாலிக்கும் தன்மையில் அவர் விஸ்வநாதர் அதாவது உலக உயிர்கலெல்லாம் அடைக்கலமானவர் என வணங்கப்படுகின்றார்.

காசி என்பது ஞானம் வழங்குமிடம் ஞான ஒளியினைத் தரும் ஸ்தலம் என்பதால் அந்த விஸ்வநாதர் பெயரில் அருள்பாலிக்கும் சிவன் இங்கும் ஞான அக்னி தருகின்றார், ஞான ஜோதியினைத் தரும் நெருப்புத் தலம் இது.

சிவபெருமானின் ஐந்து தொழில்களில் ஒன்று அருளல். அதாவது, முக்தி நிலையினை அருள்பவர். ஒருவரின் வினை எல்லாம் போக்கி ஞானம் தந்து முக்தி நிலை தருபவர், காசியில் விஸ்வநாதராக நின்று அவர் தரும் 
முக்தியினை இங்கும் அருள்கின்றார்.

ஆம். இந்தத் தலம் அக்னி தத்துவத்தோடு முக்தி நிலையினை அருளும் ஆலயம். சிவன் இங்கு எல்லா ஆத்மாவுக்கும் முக்தி கொடுக்கும் தத்துவ சொரூபமாக அருளல் தொழிலைச் செய்கின்றார்.

முருகப்பெருமான் சிவனிடம் தன் கர்மங்களை அழிக்கச் சொன்ன இடம் ஆழியூர். தன்னைப் புதுப்பிறப்பாக படைக்க சொன்ன இடம், தொடக்கத்திலிருந்த புண்ணிய நிலையினைத் தர வேண்டிய இடம் அகர கடம்பனூர், அவர் முக்தி வேண்டிய இடம் இந்தக் கடம்பூர் வாழ்க்கை எனும் விஸ்வநாதர் ஆலயம்.

இப்படி முருகப்பெருமானே நமக்கு வழிகாட்டினார். இந்த மூன்று ஆலயங்களும் முருகனை நினைந்தபடி சிவபெருமானை வழிபட்டால் இந்த மூன்று வரங்களையெல்லாம் தரும். இது சத்தியம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

உத்தமசோழன் புதுப்பித்த கருந்திட்டை குடியான் மகாதேவர் கோயில்.

உத்தமசோழன் புதுப்பித்தகருந்திட்டை குடியான் மகாதேவர் கோயில்
முற்காலச் சோழர்களின் கோயில்கள் வரிசையில் பரந்தகச்சோழன்காலத்தியதாக உள்ளகட்டிடக்கலை சிறப்புகளுடன் திகழும் இக்கற்றலியை செம்பியன்மாதேவியாரின் திருமகன் மதுராந்தக உத்தம சோழன் புதுப்பித்தான் என சான்றிதழ் அடிப்படையில் அறிஞர்கள்குறிப்பிட்டுள்ளனர்.

வடவாற்றின்வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது கோயிலின் கீழ்புறம் அழகிய திருக்குளம் விளங்க இரண்டு திருச்சுற்றுகள் திருமதிகள் சிறிய கோபுரங்கள் அழகிய ஒரு தலை விமானங்கள், திருமண்டபங்கள்ஆகியவற்றுடன் மூலவர் கிழக்கு நோக்கியும் உமையம்மை தெற்கு நோக்கியும் காட்சிதருமாறுஇவ்வாலயம் விளங்குகின்றது. 
சோழர் காலத்தில் இவ்வாலயம் இரண்டாம் முறை புதுப்பிக்கப்பட்ட போது சில புதிய மாடங்களும்சிற்பங்களும் அங்கு இடம் பெற்றன. கருவறை அர்த்தமண்டபம் ஆகியவற்றின்புறச்சுவர்களில் லிங்கத்தை வணங்கும் கோலத்தில் திருஞானசம்பந்தர், நடராஜர், திருநாவுக்கரசர் பிச்சாடனார் ,விநாயகர், தென்முகக் கடவுள் அகத்தியர் மாதொருபாகர் பிரம்மன் திருமால் ஆகியோருடன்லிங்கோத்பவர் கங்காள மூர்த்தி வீணாதாரர் காலகாலர் துர்க்கை கந்தவேல் ஆகிய தெய்வத் திரு உருவங்கள்இடம்பெற்றுள்ளன.

கோஷ்ட தெய்வங்களில் ரிஷி பத்தினி ஒருத்தி யிடம் பிச்சையை ஏந்தியவராகக்காணப்படும் கங்காள மூர்த்தியும் (பிச்சாடனார்)ஆடவல்லபெருமானும் கங்காதரரும் காலகாலரும், உமையொருபாகரும் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்பங்களாககாணப்படுகின்றனர். பொதுவாக அர்த்தனாரி சிற்பங்களில் பெருமானாரின் இடபாகத்தில்தான் உமை பாகம் காண பெறும் இங்கு வலபாகத்தில் உமாதேவி ஒரு பாதிவுடலுடன் காட்சி நல்குகின்றாள்.

இச் சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டின் சோழர்கள் பாணியில்அமைந்தனவாகும். மதுராந்தக உத்தமசோழனின் பத்தாம் ஆட்சி ஆண்டு ஆகிய கி.பி 980இல் அருணி விமலை பிராட்டி என்னும் நங்கை ஒருத்தி துவாரபாலகர் சிற்பங்களை தன் நன்கொடையாகஅமைத்தாள்என்பதைஇவ்வாலயத்து கல்வெட்டு சாசனம் ஒன்று கூறுகின்றது..

மதுராந்தக உத்தமர் சோழனின் மகனான மதுராந்தகன்கண்டராதித்தன் இத்திருக்கோயில் இறைவன் முன்பு திருவிளக்குஎரிப்பதற்காக 96 ஆடுகளை முதலீடாக அளித்ததை ஒரு சாசனம் விவரிக்கின்றது. கிழவன் ஆனைக்காவன் என்பவனின் தாயார் 
தன் பெயரில் கோயில் திருப்பணிகளுக்காக 
ஒரு பெரிய கற்களை அளித்தாள் என்பதை இவ்வாலயத்து கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது. 

மாமன்னன் ராஜராஜ சோழனின் தமக்கையார் நல்லூர் நாட்டு ராஜகேசரி என்னும் ஊரிலிருந்து இக்கோயிலுக்காக மன்னரின் ஆணைப்படி நிலமொன்றினை விற்று கொடுத்தது பற்றி விவரிக்க பெற்றுள்ளது. ராஜராஜ சோழனின் குதிரை படை வீரர்களான இத்தாதர முத்தரையர் என்பவனும், காரி குளிர்வாகை என்ற மற்றொரு போர் வீரனும் விற்போர் புரிந்த போது காரி குளிர்வாகை என்பவனின் தோளில் அம்பு பாய்ந்து இறந்து விட்டான் என்றும் அவன் ஆன்மா சாந்திக்காக அவன் உறவினர்கள் கருந்தித்திட்டைக் குடி மகாதேவர் முன்பு நந்தா விளக்கு எரிப்பதற்காக அறக்கொடை ஒண்றினை முதலீடு செய்தனர் என்ற தகவலைஇக்கோவிலுள்உள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. 

கங்கைகொண்ட முதலாம் ராஜேந்திர சோழன் பெயரால் 'ராஜேந்திர சோழன் பட்டம் 'என்று மன்னர் பெயரில் அணிகலன் ஒன்றும், பல்வேறு விதமான அணிகலன்களும், இக்கோயில் ஈசனுக்காக வழங்கப்பெற்றமை ஒரு சாசனம்எடுத்துரைக்கின்றது.இவ்வாறுஇவ்வாலயத்துசுவர்களில்காணப்பெறும்கல்வெட்டுக்கள்
அனைத்தும் 1100 ஆண்டுகள் கால வரலாற்று நிகழ்வுகளை சுமந்து கொண்டு நிற்கின்றன. 

தஞ்சாவூருக்கு செல்வோர் புறநகரான கரந்தைக்குச் சென்று கருந்திட்டை குடி மகா தேவரை வணங்கி அங்குள்ள கலைநயம் வாய்ந்த கோஷ்ட சிற்பங்களைகண்
குளிர காணுங்கள். அவ்வாலயத்து வரலாற்று சிறப்புகளை அறிந்து ஈசனை போற்றுங்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்.

*ஆனி மாதம் தசமி திதி, சித்திரை நட்சத்திரம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்.*
நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்த *சுதர்ஸனருக்கு* இன்று திருநாள்

 வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்த சுக்ராச்சாரியாரின் எண்ணத்தை திசை திருப்பிய *சக்கரத்தாழ்வாருக்கு* திருநாள்

ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்ட *திருவாழியாழ்வானுக்கு*  திருநாள்

சிசுபாலனை அழிக்க ஸ்ரீகிருஷ்ணருக்கும் கஜேந்திர மோட்சத்தில் முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றிட திருமாலுக்கும் ஆயுதமான *திகிரிக்கு*  திருநாள்
வேதசத்சங்கம்

 புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திடவும், மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திடவும், கிருஷ்ண பரமாத்மாவுக்கு கைங்கர்யம் செய்த *ஹேதிராஜனுக்கு*  திருநாள்.

 துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து ,விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி ,துர்வாசரின் கர்வத்தை அடக்கிய *சக்கரராஜனுக்கு*  திருநாள்.

 சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலது கையிலும், இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ள ஸ்ரீ *சுதர்சனாழ்வாருக்கு*  திருநாள்.

 தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருக்கும் ஸ்ரீசுதர்சன்னுக்கு  திருநாள்.

*வாணீ பௌராணிகீயம் ப்ரதயதி மஹிதம் ப்ரேக்ஷ்ணம் கைடபாரே:* எம்பெருமானுடைய ஸ்ங்கல்பமேதான் திருவாழியாழ்வான் என்று ஸ்ரீஸுதர்சநசதகமும், *சக்ர ரூபஸ்ய சக்ரிண* அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனின் வாக்கும் போற்றும் ஸ்ரீ சக்கரத்திற்கு  திருநாள்.

பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என ‘திரிகரண சுத்தியுடன் , வடிவார்சோதி வலத்துறையுஞ் சுடராழிக்கு பல்லாண்டு மின்னும் ஆழியங்கையனான மஹோபகாரகனான ஸர்வேச்வரனுக்கும் பல்லாண்டு என்று பல்லாண்டு பாடுவோம், ஆயுள், ஆரோக்யம் என்று சகல சுகங்களும் பெறுவோம்.

 சுதர்சனம் - சக்கரம்

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!

தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும்,
வல்லமை பொருந்தியதும், 
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, July 3, 2025

வளர்பிறை அஷ்டமி விரத பூஜை


🌹வளர்பிறை அஷ்டமி விரத பூஜை 
******************************************
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட  சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. 
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெரு மான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத் து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக் கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

🌹பைரவரை வணங்கினால் நன்மைகள்
*************************************************
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு கால த்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர் பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவ ப்பெருமானை வழிபடலாம். 

நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவா க்கியிருந்த கர்ம வினைகள் கரையத் துவங்கு ம், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும். 

அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, அக்கா, அண்ண ன், தம்பி, தங்கை, கணவன், மனை வி இவர்க ளிடையே இருந்து வரும் காழ்ப்பு ணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்.

🌹பைரவரின் அருள்
*************************
சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவ ரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமை யான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

🌹சனியால் பாதிப்பு இருக்காது
**************************************
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக் கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தா ல் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பிரமாணம் பெற்றுக் கொண்டார்

🌹மனம் தெளிவடையும்
*****************************
அஷ்டமச்சனியால் துன்பப்படும் ரிஷப ராசியி னர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை /தொழிலை அடைவார்கள். கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மிதுனம் ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள். அர்த்தாஷ்டம ச்சனியால் தடு மாறும் கன்னி ராசியினர் தெளிவடைவார்கள்.

🌹ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்
****************************************
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெரு மானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவல கத்திலோ அல்லது வணிக நிறுவனங்களி லோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறுவாரங்கள் 48 நாட்கள் விரதமி ருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷ ண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

🌹தைரியம் பிறக்கும்
**************************
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்க ளுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். 

எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்து ம் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர் கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபா டு செய்யக் கூடாது மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.

🌹பொன்னும் பொருளும் கிடைக்கும்
*********************************************
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திரபிரபை சூடி திருக்கழுத்தில் நாகபர ணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர் ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந் து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவ பெருமானின் இடையை தழுவியவா று மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத் துட ன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னை யும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் எழுந்தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமியில் வழிபட துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்..

♦️ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....
♦️ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ...
♦️ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி....
🌹02.07.2025... நேசமுடன் விஜயராகவன்....
******************************************
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட  சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. 

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெரு மான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத் து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக் கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

🌹பைரவரை வணங்கினால் நன்மைகள்
*************************************************
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு கால த்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர் பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவ ப்பெருமானை வழிபடலாம். 

நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவா க்கியிருந்த கர்ம வினைகள் கரையத் துவங்கு ம், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும். 

அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, அக்கா, அண்ண ன், தம்பி, தங்கை, கணவன், மனை வி இவர்க ளிடையே இருந்து வரும் காழ்ப்பு ணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்.

🌹பைரவரின் அருள்
*************************
சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவ ரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமை யான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

🌹சனியால் பாதிப்பு இருக்காது
**************************************
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக் கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தா ல் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பிரமாணம் பெற்றுக் கொண்டார்

🌹மனம் தெளிவடையும்
*****************************
அஷ்டமச்சனியால் துன்பப்படும் ரிஷப ராசியி னர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை /தொழிலை அடைவார்கள். கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மிதுனம் ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள். அர்த்தாஷ்டம ச்சனியால் தடு மாறும் கன்னி ராசியினர் தெளிவடைவார்கள்.

🌹ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்
****************************************
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெரு மானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவல கத்திலோ அல்லது வணிக நிறுவனங்களி லோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறுவாரங்கள் 48 நாட்கள் விரதமி ருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷ ண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

🌹தைரியம் பிறக்கும்
**************************
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்க ளுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். 

எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்து ம் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர் கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபா டு செய்யக் கூடாது மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.

🌹பொன்னும் பொருளும் கிடைக்கும்
*********************************************
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திரபிரபை சூடி திருக்கழுத்தில் நாகபர ணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர் ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந் து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவ பெருமானின் இடையை தழுவியவா று மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத் துட ன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னை யும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் எழுந்தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமியில் வழிபட துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, July 2, 2025

தஞ்சை தெற்கு வீதி தக்ஷ்ண காசிவிஸ்வநாதர்.

தஞ்சை மாவட்டம், தஞ்சை - தக்ஷ்ண காசிவிஸ்வநாதர் திருக்கோயில் 
தஞ்சைத் தெற்கு இராஜவீதியின் மத்தியில் தெற்கு வீதி-எல்லையம்மன் கோயில் தெரு சந்திப்பில் அமைந்துள்ளது. 
தரை மட்டத்தில் இருந்து உயர்ந்த  மேடை போன்ற பகுதியின் மீது 
தக்ஷிண காசி விஸ்வநாதசுவாமி கோயில் அழகுற அமைந்துள்ளது. வடக்கில் இருக்கும் காசி திருக்கோயிலுக்கு இணையான பலன்களை வாரி வழங்கும் திருக்கோயில் என்பதால் இதனை தக்ஷ்ண காசி என குறிப்பிடுகின்றனர். 
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 
கிழக்கு நோக்கிய இக்கோயிலுக்கு தெற்கு வீதியில் ஒரு வாயிலும், எல்லையம்மன் கோயில் தெருவில் மற்றொரு வாயிலும் அமைந்துள்ளன. தெற்கு வீதி வாயிலாகச் சென்றால் அம்மன் சன்னதியையும், எல்லையம்மன் கோயில் தெரு வாயிலாகச் சென்றால் காசி விசுவநாதர் சன்னதியையும் காணலாம். மக்கள் தெற்கு வாயிலையே பிரதானமாக கொண்டுள்ளனர். 
இக்கோயிலின் மூலவராக காசி விசுவநாதர் உள்ளார். மூலவர் கருவறையின் வெளிப்புறத்தில் இரு புறமும் சிறிய கருங்கல் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை வாயிலில் சிறிய விநாயகரும் உள்ளார்.  எதிரில் நந்தி, பலிபீடம் காணப்படுகின்றன. மூலவர் சன்னதியின் வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது.
இக்கோயில் ராஜகோபுரம், மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. திருச்சுற்றில் நால்வர், சித்தி விநாயகர், நந்தியுடன் கூடிய அரங்குல நாதர், பெரிய நாயகி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளனர். அடுத்து கஜலட்சுமி உள்ளார். அடுத்துள்ள பாலதண்டாயுதபாணியின் முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன. தொடர்ந்து வடகிழக்கில் பைரவர், சனி, சூரியன், நாகலிங்கம், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கையும் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. 
அனைத்து விழாக்களும் சிறப்பாக நடந்து வருகின்றன. பங்குனியில் பால தண்டாயுதபாணிக்கு பால் காவடி எடுத்து வரும் விழா நடைபெற உள்ளது என வாயிலில் ஒரு பெரிய விளம்பர பதாகை நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. 
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல்- குறள்

சமைத்த கூழே ஆனாலும், தன் முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. எனும் பொருள் போல சிறிய கோயில்; மனம் ஒன்றிய பக்தர்கள்;  என விஸ்வநாதர் இருக்கை கொண்டுள்ளார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் வரலாறு

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு அட்டவீரட்ட திருத்தலங்களில்
இரண்டாவது தலம் #திருக்கோவிலூர்
#வீரட்டேஸ்வரர் கோயில் வரலாறு.[223]
மூலவர் :#வீரட்டேஸ்வரர்
அம்மன் :#சிவானந்தவல்லி

       பெண்ணையாற்றின் தென்கரையில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. திண்டிவனம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன. மற்றொரு பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது.
#தலவரலாறு
திருக்கோவலூர் என்பது மருவி இன்று திருக்கோயிலூர் என்று வழங்குகின்றது.

இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த 
அட்ட வீரட்ட தலங்களில் 2-வது வீரட்டான திருத்தலம் இது. வாஸ்து சாந்தி எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது. சுக்கிரன் சாபவிமோசனம் பெற்ற தலம். அம்பாள் திருபுர பைரவி உற்பத்தி தலம். சப்தமாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைவரர்கள் மற்றும் 64 பைரவிகள் உற்பத்தியான தலம். சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத் தலங்களில் இது 223வது தேவாரத் தலம் ஆகும்.
ஈசனின் மனைவியான பார்வதி, ஈசனின் இரு கண்களையும் (சூரியன், சந்திரன்) விளாயாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள் (அஞ்ஞானம்). அந்த அசுரனான அந்தகாசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க, அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தியாகி போர் தொடர்நது கொண்டே இருக்கிறது. பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனி; தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறார். வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக் கோடுகளாகி எட்டுத் திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அந்த பதங்களில் இருக்கச் செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இதுவே இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களிலும், வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோஷ நிவர்த்தி ஆகும். இவ்வாறு அந்தகாசூரனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேஸ்வரர் ஆவார்.

தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்வதற்காக ஈசனை உருகி வேண்டிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதையடுத்து ‘அயிராவணம்’ என்னும் யானையை ஈசன் அனுப்பினார். அதில் ஏறிய சுந்தரர் கயிலாயம் புறப்பட்டார். 

அவரோடு, அவரது நண்பரான சேரமான் பெருமானும், குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, குதிரையில் ஏறி கயிலாயம் சென்றார். இருவரும் வானில் சென்றபோது, கீழே திருக்கோவிலூர் என்ற சிவதலத்தில் வீற்றிருக்கும் தல விநாயகரை, அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார்.

அவரிடம் சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் கயிலாயம் செல்கிறோம். நீயும் வருகிறாயா?’ என்று கேட்டனர்.

கயிலாயம் செல்லும் எண்ணம் யாருக்குத்தான் இருக்காது! ‘நானும் வருகிறேன்’ என்று கூறிய அவ்வை, விநாயகர் வழிபாட்டை அவசரம் அவசரமாக முடிக்க எண்ணினார்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அது விநாயகரின் குரல். ‘அவ்வையே! நீ எனது பூஜையை வழக்கம்போல் பொறுமையாகவே செய். வழிபாடு முடிந்ததும், சுந்தரர், சேரமான் இருவருக்கும் முன்பாக உன்னை கயிலாயத்தில் சேர்க்கிறேன்’ என்றார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அவ்வை, ‘சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட...’ எனத் தொடங்கும் ‘விநாயகர் அகவல்’ பாடி விநாயகரை வழிபட்டார்.

அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ பாடி முடித்ததும், அவர் முன் விநாயகர் தோன்றி, தனது துதிக்கையால் அவ்வையை ஒரே தூக்கில் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்ப்பித்து விட்டார். விநாயகர் துதிக்கையால் அவ்வையாரை திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்த பிறகுதான், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் வந்தடைந்தனர் என்பது வரலாறு.
👉அவ்வையாரை இத்தல விநாயகர், விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்ததால், ‘பெரிய யானை கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். இவ்விநாயகர் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்தல ஈசன் வீரட்டேஸ்வரர்.

👉வீரட்டேஸ்வரர் கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது.

👉சுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது.
👉 வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர்.
 👉சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது.
👉ஒளவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர்.ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார்.இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன.

👉தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.

அம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ளது.
குருபூசை நாள்        : கார்த்திகை - உத்திரம்

சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த பெருமையை உடைய நரசிங்கமுனையரையர் அவதரித்தத் தலம். (நரசிங்க முனையரைய நாயனார் வேறு.)

திருமுறை கண்ட இராஜராஜ சோழன் அவதரித்த பதி.

🙏ஔவையார் இத்தல விநாயகரைப் பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.

👉சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் பாடல் பெற்ற தலம். சப்த கன்னிகளும், 64 வித பைரவர்களும் தோன்றிய தலம். பைரவ உபாசகர்களுக்கு முதன்மையான கோவில் இது என பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஆலயம். இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.

திருவிழா: 

மாசிமகம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம்

கார்த்திகை – 3 ம் சோம வாரம் சங்காபிசேகம்.

திறக்கும் நேரம்

காலை 6 மணி - மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணி - இரவு 8:30 மணி

அமைவிடம்

 அ/மி. வீரட்டேசுவரர் திருக்கோயில், 
 திருக்கோயிலூர் - 605 757.
 விழுப்புரம் மாவட்டம். 
தொலைபேசி : 04153 - 224036, +91-93448 79787.

மாநிலம் : தமிழ் நாடு 
விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பேருந்து வசதி உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, July 1, 2025

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மட்டுமே ஆச்சரியமான விஷயங்கள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மட்டுமே உரித்தான ஆச்சரியமான விஷயங்கள்!_*


* 🍁🍁🍁சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழி திருவாதிரை, மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்து நாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத் திருவிழா. ஆனி உத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும்.

அன்று பகல் ஒரு மணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில்தான் நடராஜர் சன்னிதிகளில் ஆனி திருமஞ்சனம் நடைபெறுகிறது. பக்தர்கள் நடராஜரை தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனி திருமஞ்சனம் மிக நல்ல நாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரை தரிசிக்க வேண்டும். சிவத் தலங்களில் சிதம்பரம் நடராசர் கோயிலில்தான் மூலவரும் உத்ஸவரும் ஒன்றாக இருப்பார்கள்.

கருவறையில் நடராஜர் சிலை இருக்கும் இடத்தில், திரை மட்டும் இருக்கும். அந்தத் திரை விலகும்போது, அங்கு எதுவும் இருக்காது. இந்த இடத்திற்கு, ‘சிதம்பர ரகசியம்’ என்று பெயர். இது ஆகாயத்தைக் குறிப்பதாகவும், கடவுள் எங்கும் நிறைந்திருப்பதை உணர்த்துவதாகவும் கருதப்படுகிறது. தங்கத்தால் ஆன சிவலிங்கம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும், சிதம்பர ரகசியத்திற்கு கீழே ஓர் அடி உயரம் உள்ளதாக உள்ளது. இது ஏகமுக சிவலிங்கம். இந்தத் தங்கத்தாலான சிவலிங்கத்திற்கு உச்சி வேளையில் ஒரு கால பூஜை மட்டும் தீட்சிதர் ஒருவரால் செய்யப்படுகிறது.

பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயம் ஆகியவை சரியாக ஒரே நேர்க்கோட்டில், சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளன.

மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிகின்றது.

விமானத்தின் மேல் இருக்கும் பொற் கரை 21,600 தங்கத் தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது.

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக் குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

பொதுவாக, சிவாலயங்களில் மூலவர் கருவறையை விட்டு எங்கும் வெளியே வருவதில்லை. ஆனால், சிதம்பரத்தில் மட்டும் ஆண்டுக்கு இரண்டு முறை, ஒன்று ஆனி திருமஞ்சனம் மற்றொன்று ஆருத்ரா தரிசனம் சமயத்தில் மூலவர் நடராஜ மூர்த்தியே சன்னிதியில் இருந்து வெளியே வந்து தேரில் எழுந்தருளி நகரின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும். எல்லா சிவ கலைகளும் இரவில் சிதம்பரம் வருவதாக ஐதீகம். எனவே, இங்கு அர்த்த ஜாம பூஜை தாமதமாகவே நடத்தப்படுகிறது.

சில கோயில்களில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் தனித்தனியே தரிசிக்கலாம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரே இடத்தில் இருந்து இந்த மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்ய முடியும். நடராஜர் சன்னிதி அருகில் திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி இருக்கிறது. இப்பெருமாளின் நாபிக்கமலத்தில் பிரம்மா இருக்கிறார். இரு சன்னிதிகளுக்கும் முன்பு நின்று கொண்டால் ஒரே நேரத்தில் நடராஜர் மற்றும் பெருமாள் அவரது நாபியில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் தரிசனம் செய்யலாம்.

உலகிலேயே மிகச் சிறந்த கோயில் மணி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிகண்டி பூரணம் மணிதான். இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி, எளிதில் நம்மை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது. இதற்கு இணையான மணி, உலகத்தில் வேறெங்கும் கிடையாது.59 நொடிகள் ஒலிக்கும் இந்த சிகண்டி பூரணம் மணி ஓசையைக் கேட்டால், உங்கள் ஆயுளில் 12 விநாடிகள் அதிகரிக்கும். இதற்கு, ‘சிகண்டி பூரணம்’ என்று பெயரிடப்பட்டது சித்தர்கள்தான். வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி, அனுக்கிரகம் அளித்ததுதான்.

ஓம் நமசிவாய
 படித்து
 பகிர்ந்தது 
இரா 
இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

ஆடலரசனுக்கு ஆனி திருமஞ்சனம் என்ன சிறப்பு



*ஆடலரசனுக்கு ஆனி திருமஞ்சனம் அப்படி என்ன ஸ்பெஷல் வாங்க பார்ப்போம்...?
✨ஆனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் நடராஜ மூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்கு ஆனி திருமஞ்சனம் என்று பெயர். இது ஆனி உத்திரத் திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது. ஆனி திருமஞ்சனம் நடைபெறும் சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண சிவன் சன்னதியில் எழுந்தருள்வதாக ஐதீகம்.

✨திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். இதுபோன்று பல்வேறு இடங்களில் புகழ்பெற்ற அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு ஆனி உத்திர தினத்தில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் போன்றவை விசேஷமாக நடைபெறும்.

✨ஆனி மாதம் வேனிற் காலம் தொடங்கும் அற்புத மாதமாகும். நாடெல்லாம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் ஆனி மாதம் திருமஞ்சன விழா கொண்டாடுவதாக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

✨ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இந்த விழா, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

6 அபிஷேகங்கள்:

✨ஆடல் அரசனான நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த உற்சவங்களில் ஆனி உத்திர திருமஞ்சனமும் ஒன்று. அதாவது நடராஜ பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். 

✨சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி ஆருத்ரா அபிஷேகம், மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்களில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். 

✨இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும்.

✨இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

✨இதில் ஆனி மாத வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் அபிஷேகத்திற்கு ஆனி உத்திர திருமஞ்சனம் என்று பெயர். இதை மகாஅபிஷேகம் என்றும் சொல்லுவதுண்டு. அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த உற்சவம் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.

ஆனித் திருமஞ்சனத்தின் முக்கியத்துவம்:

💫ஆனித் திருமஞ்சனம், சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை நினைவுபடுத்தும் ஒரு புண்ணிய நாளாகக் கருதப்படுகிறது. சிவனின் இந்தத் தாண்டவம், ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. 

💫வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

💫அண்ட சராசரங்களின் இயக்கத்திற்குக் காரணமான சிவனை இந்த நாளில் வழிபடுவது, சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிதம்பரத்தின் சிறப்பு:

💫ஆனித் திருமஞ்சனம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் ஆலயம்தான். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகப் போற்றப்படும் சிதம்பரம், நடராஜப் பெருமானின் மூல இருப்பிடமாகக் கருதப்படுகிறது. 

💫சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நாளில், நடராஜப் பெருமானின் திருமேனிக்குச் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, தேரோட்டம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் காட்சியைக் காண கூடி, பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்வார்கள்.

நடராஜருக்கு அபிஷேகம் ஏன்?

💫அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது.

💫நடராஜப் பெருமானுக்கு செய்யப்படும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தை கண்டால், பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.

💫சிதம்பரம் செல்ல முடியாதவர்கள் திருமஞ்சனத்திற்கு தேவைப்படும் சிவனுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களில் உங்களால் முடிந்ததை வாங்கி கொடுக்கலாம்.

💫சந்தனம், பால், புனுகு, பன்னீர், விபூதி, வில்வம் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம்.

இந்த நன்னாளில் சிவனை தரிசிப்பதால்..

🙏கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். 

🙏கணவன் மனைவிக்குள் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

🙏குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🙏உடல்நல பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

🙏பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு, மோட்சத்தைப் பெறலாம்

🙏அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்.

🙏ஆடவர்களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும் கூடும். 

🙏நீண்டநாள் பிரச்சனைகள் அகன்று தரிசனத்தால் தனலாபமும், நினைத்த காரியமும் கைகூடும்.

ஓம் நமசிவாய 
திருச்சிற்றம்பலம்...🙏 பார்ப்போம்...?

✨ஆனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் நடராஜ மூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்கு ஆனி திருமஞ்சனம் என்று பெயர். இது ஆனி உத்திரத் திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது. ஆனி திருமஞ்சனம் நடைபெறும் சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண சிவன் சன்னதியில் எழுந்தருள்வதாக ஐதீகம்.

✨திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். இதுபோன்று பல்வேறு இடங்களில் புகழ்பெற்ற அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு ஆனி உத்திர தினத்தில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் போன்றவை விசேஷமாக நடைபெறும்.

✨ஆனி மாதம் வேனிற் காலம் தொடங்கும் அற்புத மாதமாகும். நாடெல்லாம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் ஆனி மாதம் திருமஞ்சன விழா கொண்டாடுவதாக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

✨ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இந்த விழா, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

6 அபிஷேகங்கள்:

✨ஆடல் அரசனான நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த உற்சவங்களில் ஆனி உத்திர திருமஞ்சனமும் ஒன்று. அதாவது நடராஜ பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். 

✨சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி ஆருத்ரா அபிஷேகம், மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்களில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். 

✨இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும்.

✨இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

✨இதில் ஆனி மாத வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் அபிஷேகத்திற்கு ஆனி உத்திர திருமஞ்சனம் என்று பெயர். இதை மகாஅபிஷேகம் என்றும் சொல்லுவதுண்டு. அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த உற்சவம் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.

ஆனித் திருமஞ்சனத்தின் முக்கியத்துவம்:

💫ஆனித் திருமஞ்சனம், சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை நினைவுபடுத்தும் ஒரு புண்ணிய நாளாகக் கருதப்படுகிறது. சிவனின் இந்தத் தாண்டவம், ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. 

💫வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

💫அண்ட சராசரங்களின் இயக்கத்திற்குக் காரணமான சிவனை இந்த நாளில் வழிபடுவது, சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிதம்பரத்தின் சிறப்பு:

💫ஆனித் திருமஞ்சனம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் ஆலயம்தான். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகப் போற்றப்படும் சிதம்பரம், நடராஜப் பெருமானின் மூல இருப்பிடமாகக் கருதப்படுகிறது. 

💫சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நாளில், நடராஜப் பெருமானின் திருமேனிக்குச் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, தேரோட்டம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் காட்சியைக் காண கூடி, பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்வார்கள்.

நடராஜருக்கு அபிஷேகம் ஏன்?

💫அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது.

💫நடராஜப் பெருமானுக்கு செய்யப்படும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தை கண்டால், பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.

💫சிதம்பரம் செல்ல முடியாதவர்கள் திருமஞ்சனத்திற்கு தேவைப்படும் சிவனுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களில் உங்களால் முடிந்ததை வாங்கி கொடுக்கலாம்.

💫சந்தனம், பால், புனுகு, பன்னீர், விபூதி, வில்வம் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம்.

இந்த நன்னாளில் சிவனை தரிசிப்பதால்..

🙏கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். 

🙏கணவன் மனைவிக்குள் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

🙏குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🙏உடல்நல பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

🙏பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு, மோட்சத்தைப் பெறலாம்

🙏அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்.

🙏ஆடவர்களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும் கூடும். 

🙏நீண்டநாள் பிரச்சனைகள் அகன்று தரிசனத்தால் தனலாபமும், நினைத்த காரியமும் கைகூடும்.ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் - 2025-2026 இல் 6 தேதிகள் - சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மகா அபிஷேகம் தேதி
நடராஜர் அபிஷேகத்தின் 6 தேதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2 ஜூலை, 2025 - புதன் - ஆனி திருமஞ்சனம்

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் அபிஷேக நேரம்: ஜூலை 2ம் தேதி ராஜசபையில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை.

ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம்
- ஜூலை 1, 2025 அன்று மதியம் 12.42 மணிக்கு தொடங்குகிறது - செவ்வாய் மதியம்
- ஜூலை 2, 2025 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு முடிவடைகிறது - புதன்கிழமை மதியம்

குறிப்பு:
- திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் சபாபதி அபிஷேகம் ஜூலை 1ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
- மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், ஸ்ரீ நடராஜர் பிரதோஷ கால அபிஷேகம் ஜூலை 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது.

- சிதம்பரத்தில் ஆனைத் திருமஞ்சனம், ஆனி உத்திர தரிசனம் ஜூலை 2ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஈசனால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட காரைக்காலம்மையாரின் மாங்கனி விழா

*ஈசனால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட காரைக்காலம்மையார் பெருமையைப் போற்றும் மாங்கனி திருவிழா!*  அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகச்...