Wednesday, May 26, 2021

திருமுறை

#தினம்_ஒரு_திருமுறை_சிந்தனை -20
சிவாயநம

நம்பியாரூரர் மலரடி போற்றி..

சிவபெருமான் கடன்பட்டிருக்கிறாராம்..
அது என்ன கடன் தெரியுமா!!!

வாருங்கள் பார்க்கலாம்..

அக்கையார் திலகவதியம்மையாரின் கடும் விண்ணப்பதிற்க்கும், அன்பிற்கும், திருவலகிட்டும், மெழுக்குமிட்டும், பூமாலை புனைந்தேத்தி அன்பு செலுத்தியமைக்கும்..
அவர்தம் உடன்பிறந்தவரை..
சூலைமடுத்து ஆட்கொண்டு அருள்செய்த வீரட்டானப் பெருமான் தான் அக்கடன் பட்டவராம்..சிவசிவ..

திலகவதியாரிடம் இருந்து 
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப பெருவாழ்வு வந்தது எனப் 
மருள்நீக்கியார் பணிந்து ஏற்று உருவார அணிந்தபின்..

கூற்றாயினவாறு என்று எடுத்தோதிய திருப்பதிகத்தில்..

அப்பனே வீரட்டானத்துறை அம்மானே..அடியேன் இதற்கு முன்னர் அடியேன் உமது அன்பினையும், பெருமையையும், அடியேற்கு எளிவந்த கருணையையும் உணராமல்..
உமது திருவடியினை பணிந்து வாழும் பெரும்புகழினை இழந்திருந்தேன்..

இறைவா உமது திருவடியின்கீழ் உன்புகழ்பாடி,உள்ளம் குழைந்து, திருமேனி விதிர்விதிர்த்து,அங்கம் தடுமாறி, நாக்குழைந்து பாடும் வாழ்வே அடியேனுக்கு புகழினை தரும்..
இத்தகைய வாழ்வினை அடியேன் என் அறியாமையினால் இழந்திருந்தேன்..

பின்னர் இக்கொடுமையான சூலைநோயை பெரும் கருணையினால் நீர் எனக்களித்து இக்கடையவனை ஆட்கொண்டீர்..

பின்னர் அடியேன் உமது எளிவந்த கருணையினால் உமக்கே அடிமையானேன்..

பெருமானே!!
கெடிலநதிக்கரையில் அமர்ந்துள்ள அதிகை வீரட்டானப் பெருமானே!! இந்த கொடுமையான சூலைநோய் அடியேனை வாட்டி வதைக்கிறது.. இந்நோயிலிருந்து உமது அடியவனான என்னை நீர்தான் காத்தருள வேண்டும்..

அழகிய வெண்மை நிறம்கொண்ட அன்னப்பறவையின் நடையை ஒத்த அதிகை வீரட்டானத்துறை இறைவனே,என் அம்மானே!!

எம்பெருமானே!!அதிகை ஈசனே!!
நீரே கதியென்று உமது திருவடியினை சரண் அடைந்தவர்களின் பொல்லா வினைகளை தீர்ப்பது 
தேவாதி தேவர்களுக்கும் தலையானவரே அது உமது கடனல்லவா..

அந்த கடனை தீர்த்தருளுங்கள்.. அடியேனை வதைக்கின்ற இந்த சூலையை போக்கியருளுங்கள் எம்பெருமானே..
என்று அப்பர் சுவாமிகள் தமது முதல் பதிகத்தில் பாடியருளியுள்ளார்..

நாம் இறைவனிடம் உண்மையான, வியாபாரம் இல்லாத பக்தி செலுத்தினால் பெருமான் நம்மை நாடிவந்து கடன்பட்டவர் எவ்வாறு அதனை செலுத்த முயல்வாரோ அது போல நம் வினைகளை போக்கி திருவருள் செய்வார்..

அப்பாடல்..

"முன்னம் அடியேன் அறியாமையினான்
முனிந்து என்னை நலிந்து முடக்கியிட

பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன்;

சுடுகின்றதுசூலை தவிர்த்துஅருளீர்;

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதுஅன்றோ

தலைஆயவர்தம் கடன்ஆவதுதான்? 

அன்னம்நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!!!"

நான்காம் திருமுறை முதல்பதிகம் 4ம் பாடல்..

                           சிவாயநம

பெட்டப் பிணமென்று 
  பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் 
  ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...