Wednesday, May 26, 2021

காஞ்சி பெரியவா

நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா சரணம் நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர "மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை"-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.

(மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள் மாமரம் பற்றி எளிய.விளக்கமளித்த-

கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய நிபுணரான நம். பெரியவா!

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.
மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன் ஒருவன் பெரியவாளிடம் வந்தான்.

"மாஞ்செடி நட்டு வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய்விடுகிறது; காய்ப்பதே இல்லை" என்று வருத்தத்துடன் கூறினான்.

பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.

பெரியவாள், இரு தரப்பினரையும் சமமாகப் பார்த்து அவரவர்களுக்கு உரிய விதத்தில் பதில் சொல்லுவார்கள்.

"காய்க்காத மாமரத்தின் பக்கத்தில் இன்னும் சில மரங்கன்றுகளை நடு. அந்தக் கன்றுகள் வளர்ந்து பூக்கத் தொடங்கியதும், எல்லா மரங்களும் காய்க்க ஆரம்பிக்கும்" என்றார்கள் ,பெரியவாள்.

அப்போது விவசாயத்துறை அதிகாரி ஒருவர் அங்கே இருந்தார்.பெரியவாளின் அறிவுரைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார். அவர் சொன்னார்.

"சில மாமரங்களில் பெண் பூ நிறைய இருக்கும். ஆண் பூ அதிகம் இருக்காது. வேறு சில மரங்களில் ஆண் பூ நிறைய இருக்கும். பெண் பூ குறைவாக இருக்கும். மகரந்தைச் சேர்க்கை ஏற்படாமல் பூக்கள் கருகிப் போய் உதிர்ந்துவிடும். பல மரங்கள் இருந்தால் இந்தக் குறையினால் பாதிப்பு ஏற்படாது. தேனிக்கள் எல்லா மரங்களையும் மொய்க்கும். மகரந்தசேர்க்கை ஏற்படும்.மரங்கள் காய்க்க ஆரம்பித்துவிடும்"

பெரியவா சரணம்

""குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.""

காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக, உடல் தளர்ச்சி பெற்ற நிலையில், ஒருநாள் மாலையில், தனது சிஷ்யர்களை அழைத்து தான் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும், அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.

இதைக்கேட்ட சிஷ்யர்களுக்கு கலக்கம். பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக, சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர், காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர்.
சிஷ்யர்கள் வியப்பின் உச்சிக்கே போய்விட்டனர். மகாபெரியவரிடம் சென்று விபரத்தைக் கூறவும், அவருக்கும் பேரானந்தம். தீட்சிதர்களை அருகில் வருமாறு சைகையால் அழைத்து, பிரசாதத்தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து, தலையில் வைத்துக்கொண்டார்.

குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. “தேடி வந்த சிதம்பரம்’ படத்தை நாமும் வணங்கி நற்பலன் பெறுவோம்.

----------------------------------------------------------

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்

"இது எப்படி மகா பெரியவாளுக்குத் தெரியும்?"

கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய
நிபுணர் பெரியவா.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...