Wednesday, December 28, 2022

*"பர்வதமலை"* தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬

*⛰️பர்வதமலை கிரிவலம்*
*"பர்வதமலை"* தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

ஆதி சிவன் கைலாச மலையிலிருந்து இறங்கி தென் பகுதியில் நுழைந்த போது அவர் முதலில் கால் பதித்தது இங்குதான். 

அதற்கான தடயங்களாக இறைவனின் பாதங்கள் இங்கு இன்றும் இருக்கின்றன. 

°ஆஞ்சநேயர் தூக்கி வந்த சஞ்சீவியின் மலையின் சில பாகங்கள் இங்கும் விழுந்துள்ளதால் இதற்கு பர்வத சஞ்சீவி மலை என்று பெயர்.

° கடல் மட்டத்தில் இருந்து 4560 அடி உயரமுள்ள இந்த மலையை ஏறி இறைவனை பார்ப்பது என்பது சிவன் மீது தீரா பற்றும் மற்றும் வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

*பர்வதமலை சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலம் ஆகும்.*

°திருவண்ணாமலை மாவட்டம் போளூர்  To செங்கம் போகும் பாதையில் உள்ளது.

பர்வதமலையில் உள்ள குகையில் விடோபானந்தா சுவாமிகள் சுமார் 14 வருடம் கடும் மௌன தவம்  புரிந்தார்.

இந்த மலை நந்தி வடிவில் இருப்பதால் நந்தி மலை என்றும்,

சிங்க வடிவில் இருப்பதால் சிங்க மலை என்றும் கூறுவர்.

இங்குள்ள சக்திகளில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த இறைவனையும் இறைவியியையும் உருவாக்கி வழிபட்டவர் சித்தர் போகர்.

இன்றளவும் சித்தர்களும் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து இங்குள்ள இறைவனையும் இறைவியையும் சூட்சு ரூபத்தில் வழிபடுகின்றனர்.

நந்தியால் சுமக்கப்பட்டுள்ள இறைவனும் இறைவியும் பார்க்கும் அனைவரின் உயிரிலும் கலக்கின்றனர். அதனால்தானோ என்னவோ இந்த கோயிலில் எங்கு திரும்பினாலும் நந்தி சிலைகள்தான் காணப்படுகின்றன.

சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலம்  இது. 

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 1ம் நாள் இங்கு பல்லாயிரக்கணக்கானோர் ( சுமார் 1 லட்சத்திற்கும் மேல் ) கிரிவலம் வருகின்றனர்.  

தன்னுடைய தோஷங்களை நீங்க சிவனை பிரார்த்தித்து கிரிவலம் வந்தால் அத்தனை தோஷங்களும் நீங்குகிறது என்பதால் ஒவ்வொரு வருடமும் கிரிவலம் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. 

காஞ்சி மகாபெரியவர் அவர்கள் மலை ஏற வந்த போது அந்த மலையே சிவனாக காட்சி அளித்ததால் மலையேறாமல் கிரிவலம் சென்றார்கள்.

*சிவாலயம் செல்வோம்...*

*சிவனருள் பெறுவோம்...*

🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...