Wednesday, December 28, 2022

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள #நரசிங்கபுரம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
           🙏#தினம்_ஒரு_திருத்தலம்...🛕*_ 
  #இடது_கையால்_தாயைஅணைத்தபடி  
                      #நரசிம்மர்... 16 நாகங்கள்...!!

#அருள்மிகு_லட்சுமிநரசிம்மர்திருக்கோயில்...!!

🌺 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

🍒திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள #நரசிங்கபுரம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

🌺 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

🌺திருவள்ளூரில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் என்னும் ஊர் உள்ளது. நரசிங்கபுரத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

🌺 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

🍂 இத்தல மூலவரான லட்சுமி நரசிம்மர் #ஏழரை_அடிஉயரத்துடன்_வலதுகாலை கீழே வைத்து, இடது காலை மடித்து, சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி, வலது கரத்தை #அபயஹஸ்தமாக காட்டி மிக அழகாக காட்சி தருகிறார்.

#சிரித்த_ முகத்துடன் பெருமாள் காட்சியளிக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பது போல் காட்சியளிப்பது தனிச் சிறப்பம்சமாகும்.

#ஐந்துநிலை_கொண்ட_கிழக்கு_கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடமும், துவஜஸ்தம்பமும் இக்கோயிலில் அமைந்துள்ளது.

🍂கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்த தேசிகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

🍂பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி ஆகியோர் காட்சி தருகின்றனர்.

🍂மேற்கு பிரகாரத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம்.

🍂 *வேறென்ன சிறப்பு?* 

#வசீகரமானசிரிப்புடன்_5அடிஉயரமுள்ளமரகதவல்லித்_தாயார்_அபயஹஸ்த_முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.

🍂இத்தல பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சன்னதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கூடிய கல்யாண மண்டபமும் அமைந்துள்ளது.

🍂4 அடி உயரத்தில் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார், 16 நாகங்களை அணிகலனாக கொண்டு இங்கு காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

🍂மூலவரான நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்களில் வணங்கினால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

🌺 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

🌺நரசிம்ம ஜெயந்தி இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

🌺ஆனி பிரம்மோற்சவம் 10 நாட்கள், கருட சேவை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் ஆகியவையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🌺 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

🌺நாகதோஷம் நீங்க, கடன்களை அடைக்க, நோய்களில் இருந்து விடுபட, திருமணத்தடை நீங்க மற்றும் சகல தோஷங்களும் நிவர்த்தியாக இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

🍂இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🍂இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் மூலவர் மற்றும் தாயாருக்கு அபிஷேகம் செய்தும், திருமஞ்சனம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...