Monday, January 30, 2023

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் அறியப்படாத சிறப்பம்சங்கள் என்ன?

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் அறியப்படாத சிறப்பம்சங்கள் என்ன?
ரகசிய ஊர்
பாலாஜிக்கு தேவையான அனைத்து அபிசேக பொருட்களும் இது நாள் வரைக்கும் யாருக்குமே சொல்லப்படாத கிராமத்தில் இருந்து தான் வருகிறது. பூ, பால், பழம், நெய், மோர், துளசி எல்லாமே அங்க இருந்து தான் வருகிறது. ஆனால் வெளியில் இருந்து அந்த ஊருக்கு யாரும் போகவும் முடியாது. அனுமதியும் இல்லை. திருப்பதியில் இருந்து வெறும் 20 கி.மீ.ல் தான் அந்த ரகசிய கிராமம் இருக்கிறது.
கருவறை
கோயிலின் கருவறையில் சிலையை வைத்து வழிபடுவது தான் ஐதீகம். ஆனா இந்த கோவிலில் இருக்குற திருப்பதி மூலவர் கருவறைக்கு வலது புறமா இருந்து தரிசனம் தருவார்
மொட்டை
திருப்பதி அவருடைய இளமை காலத்தில் மிகவும் அழகாவும், அதே நேரத்தில் நீண்ட அழகான தலைமுடியை கொண்ட கடவுளாகவும் இருந்திருக்கின்றார். பூமிக்கு வந்த கொஞ்ச நாளலில் அவருக்கு கொஞ்சம் முடி கொட்ட ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட அவரின் பக்தை
காந்தர்வ இளவரசி நீல தேவி தன்னுடைய தலைமுடியை கொஞ்சம் வெட்டி தன்னுடைய கடவுளுக்கு கொடுத்துள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட திருமால், தன்னுடைய வரம் வேண்டி, திருப்பதி ஸ்தலத்தில் வந்து மொட்டியிட்டு வேண்டிக் கொள்பவர்கள் அனைவருக்கும் வேண்டியதை தருவேன்” அப்டின்னு சொல்லியிருக்காரு.
விடாது ஒலிக்கும் அலைச்சத்தம்
கடவுளின் கர்பகிரகத்தில் நிற்காமல் நீண்டு நீண்டு ஒலிக்கும் கடல் அலைகள் என்பது பல ஆண்டுகளாக பக்தர்களாலும் மக்களாலும் நம்பப்பட்டு வருகிறது.
அணையவே அணையாத விளக்கு
கடவுளின் முன்னால் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டே தான் இருக்கும். இந்த விளக்குகளை எப்போது யார் ஏற்றினார்கள் என்பது இது வரை யாருக்கும் தெரியாது.
சிலை
திருப்பதி ஏழுமலையான் சிலையின் பின்புறமாக எப்போதும் ஈரம் கசிந்து கொண்டே இருக்குமாம். ஏன் என்ற காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கோவிலுக்குள் இருக்கும் பூசாரிகள், அந்த இடத்தினை ஈரமின்றி வைத்திருப்பதையே ஒரு வேளையாக வைத்திருக்கின்றார்கள்.
சூடாகவே இருக்கும் அணிகலன்கள்
பெருமாளின் கழுத்தில் அணி்விக்கப்படும் நகைகள் மற்றும் ஆபரணங்களை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சுத்தம் செய்வதற்காக கழற்றுவது வழக்கம். அப்படி சிலையில் கழுத்தில் இருந்தும், இதர பகுதிகளில் இருந்தும் கழட்டப்படும் அணிகலன்கள் எப்போதுமே சூடாகவே இருக்கும்.

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...