Tuesday, January 31, 2023

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான ,கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகத்தியர் வழிபட்ட தலமான#திருச்சோபுரம்#மங்களபுரீஸ்வரர்

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான ,கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகத்தியர் வழிபட்ட தலமான
#திருச்சோபுரம்
#மங்களபுரீஸ்வரர்
(திருச்சோபுரநாதர்)
#சத்யாயதாட்சி அம்மன் (வேல்நெடுங்கண்ணி)
திருக்கோயில் வரலாறு:
புராணக் கதைகளில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கும். ஆனால், அதுபோன்ற கதைகளுக்கு நிகழ்காலத்து சாட்சிகளைப் பார்க்கும்போது, மெய்சிலிர்த்துப் போகிறோம். மங்களபுரீஸ்வரரும் அப்படித்தான் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் அருகே உள்ளது திருச்சோபுரம். இங்குதான் மங்களபுரீஸ்வரர், வேல்நெடுங்கண்ணி அம்பாளுடன் வீற்றிருக்கிறார். திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தபோது, பூலோகம் சமநிலையை இழக்க அகத்தியர் சிவனால் தென்பகுதிக்கு அனுப்பப்பட்ட கதை நமக்குத் தெரிந்ததே.

#மூலவர்: மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர்
#உற்சவர் :சோபுரநாதர்
#அம்மன் : தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி
#தலவிருட்சம் :கொன்றை
#தீர்த்தம் :வங்கக் கடல், கிணற்று தீர்த்தம்
#பழமை :1000 வருடங்களுக்கு முன்
#புராணப் 
பெயர் :திருச்சோபுரம், தியாகவல்லி
#ஊர் :திருச்சோபுரம்
#மாவட்டம் :கடலூர்
#மாநிலம் :தமிழ்நாடு

#பாடியவர்கள்: 
திருஞானசம்பந்தர்

#தேவாரப்பதிகம்:

விடை அமர்ந்து வெண்மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு சடை ஒடுங்கத் தண்புனலைத் தாங்கியது என்னை கொலாம் கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்தத் தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரம் மேயவனே.

–திருஞானசம்பந்தர்

#தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 217 வது தேவாரத்தலம் ஆகும்.

#தலபெருமை:

மஞ்சள் குங்கும வழிபாடு: இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. மஞ்சளும், குங்குமமும் அம்பாள் வழிபாட்டிற்கு உரியது. ஆனால், திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.

அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதாகவும், அதன் காரணமாக சிவலிங்கத்துக்கு மஞ்சள், குங்கும வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம். இதனால், சுவாமிக்கு “மங்கள புரீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவளை “சத்யாயதாட்சி’ என்கின்றனர்.

#தெட்சிணாமூர்த்தி சிறப்பு: 

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.

இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் ஞானம், அமைதி மற்றும் இசைக்கு அதிபதியாக இருப்பதாலும், மூலவர் சோபுரநாதர் மங்களம் தருபவராக இருப்பதாலும் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.

#புதைந்த கோயில்: 

வங்கக்கடலின் கரையில் அமைந்த கோயில் இது. கடலே இத்தலத்தின் தீர்த்தம் ஆகும். மூலஸ்தானத்தில் சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

திருஞானசம்பந்தர் சுவாமியை வணங்கி, பதிகம் பாடியுள்ளார். கோஷ்டத்தின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா இருவரும் அவரை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது. பிரகாரத்தில் கண்ணப்பநாயனார் காட்சியளிக்கிறார். இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற் காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின், ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர்.

#வயிற்றுவலியால் அவதிப்பட்ட அகத்தியர் :

அகத்தியர் தென்புலம் நோக்கி வருகையில் வழி நெடுகிலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுக்கொண்டே வருகிறார். வங்கக் கடலோரம் வருகையில் அகத்தியர் தாங்கமுடியாத வயிற்று வலியால் அவதிப்படுகிறார். தனது வேதனையை எம்பெருமானிடம் சொல்லியபடியே கடற்கரை மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயற்சிக்கிறார்; அவரால் அமைக்க முடியவில்லை.

மூலிகைச் செடிகளைப் பறித்து வந்து சாறு எடுத்து அதை மணலோடு சேர்த்து உதிராத சிவலிங்கத்தை உருவாக்கி அதற்குப் பூஜைகள் செய்து வழிபடத் தொடங்கினார். சற்று நேரத்தில் வயிற்று வலி குணமானது. அப்போது அங்கே சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி கொடுத்தனர்.

கடல் மணலையும் மூலிகைச் சாற்றையும் கலந்து அன்றைக்கு அகத்தியர் சிவலிங்கம் படைத்த இடம்தான் திருச்சோபுரம். இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் ஒழுங்கற்ற வடிவில் உள்ளது. அகத்தியர் பிடித்து வைத்த சிவலிங்கம்தான் இப்போதும் இந்த ஆலயத்தில் வழிபடப்படுபவதாக நம்பிக்கை உள்ளது.
 அதற்கு அடையாளமாக அகத்தியரின் கைத்தடங்களைக் காட்டுகின்றனர் பக்தர்கள்.

இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் இலிங்கமாகக் காட்சி தருகிறார். இலிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். இலிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது.

அகத்திய முனியின் வேண்டுகோளை ஏற்று, பார்வதி தேவியும் இந்த சிவலிங்கத்தில் ஐக்கியமாகி இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால்தான், இங்கே சிவனுக்கு, மஞ்சளும் குங்குமமும் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மங்களபுரீஸ்வரர் மேற்கு நோக்கி அமர்ந்திருக்க. வேல்நெடுங்கண்ணி அம்பாள் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். ஒரே இடத்தில் நின்று சிவனையும் அம்பாளையும் தரிசிக்கும்படியாக சந்நிதிகள் அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.

திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவி தியாக வல்லி என்பவர் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததால் இவ்விடத்திற்குத் தியாகவல்லி என்ற பெயரும் உண்டு. முன்பொருமுறை இப்பகுதி கடல் கொள்ளப்பட்டு கோயிலும் மணலுக்குள் புதைந்து போனது. பிற்பாடு ராமலிங்க சிவயோகி என்வரால் இத்திருத்தலம் மீண்டும் வெளியில் வந்ததாம். இதனால், இத்திருக்கோயிலை தம்பிரான் கண்ட கோயில் என் றும் சொல்கிறார்கள்.

#இசை தட்சிணாமூர்த்தி:

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்திருத்தலத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. 

இங்குள்ள தட்சிணாமூர்த்தி ஸ்வர மூர்த்தியாய் அமர்ந்திருக்கிறார். தட்சிணாமூர்த்தி சிலையைத் தட்டினால் சப்த ஸ்வரங்களையும் கேட்க முடியும். இசைப் பயிற்சியில் இருப்பவர்கள் இவரை வணங்கினால் இசையில் பிரகாசிக்கலாம். இதேபோல், மங்களபுரீஸ்வரருக்கு மஞ்சளும் கும்குமமும் வைத்துப் பூஜை செய்தால் மனக்குறைகள் எதுவாக இருந்தாலும் போக்கி வைப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

வங்கக்கடலின் கரையில் அமைந்த கோயில் இது. கடலே இத்தலத்தின் தீர்த்தம் ஆகும். மூலஸ்தானத்தில் சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். கோஷ்டத்தின் பின்புறம் உள்ள இலிங்கோத்பவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா இருவரும் அவரை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது. பிரகாரத்தில் கண்ணப்பநாயனார் காட்சியளிக்கிறார். இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற் காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின், ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர். பிரகாரத்தில் சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர இலிங்கம், கண்ணப்பர், திரிபுவனசக்கரவர்த்தி, அவர் மனைவி வழிபட்ட இலிங்கம், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

இப்பகுதி ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்ததாம். இங்கு வந்த 'மதுரை இராமலிங்க சிவயோகி ' என்பவர் இம்மேட்டைக் கண்டு, மணலில் புதைந்திருந்த கோயிலின் விமானக்கலசம் மட்டும் மேலே தெரிய; அவர் உடனே அப்போது கடலூரிலிருந்த சேஷாசல நாயுடு, இராமாநுஜலு நாயுடு, ஆயிரங்காத்த முதலியார், நஞ்சலிங்க செட்டியார் ஆகியோரை அணுகி; செய்தி சொல்லி, அவர்களின் ஆதரவோடு, மணல் மேட்டைத் தோண்டிக் கோயிலை கண்டுபிடித்துக் கட்டுவித்தார் என்றொரு செய்தி சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக; இன்னும் அம்பாள் கோயில் தெற்குப் பகுதியில் மண்மேடிட்டுப் புதைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். இதனால் இக்கோயிலுக்கு 'தம்பிரான் கண்ட கோயில்' என்ற பெயரும் மக்களால் வழங்கப்படுகிறது.

 "கடலுக்கு மேற்கில், தொண்டமாநத்தத்திற்கு கிழக்கில் பெண்ணையாற்றுக்குத் தெற்கில் வெள்ளாற்றுக்கு வடக்கில் உள்ள நிலங்கள் இக்கோயிலுக்குரிய பட்டா நிலங்களாக இருந்தனவென்றும், அவைகளை அரசு எடுத்துக்கொண்டு அதற்குரியதாக ஆண்டுதோறும் கோயிலுக்கு ரூ.600/- (ரூபாய் அறுநூறு மட்டும்) தருவதாகவும் தெரிகிறது."
பிற்காலத்தில், தொண்டை மாநத்தத்தைச் சேர்ந்த மு. துரைசாமி ரெட்டியார் என்பவர் கோயிலில் ஆராதனைக்காக, வீடுகளை விட்டு அதன் வருமானத்தில் ஆராதனை நடத்துமாறு உயில் சாசனம் எழுதி அதை 26 - 08 - 1912-ல் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்துள்ள கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது.

 சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு நிலம் விட்ட செய்தியையும்; தொண்டைமாநல்லூரைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றன.

சுந்தரரின் 'திருவிடையாறு' தலப்பதிகத்தில் - ஊர்த்தொகையில் இத்தலம் குறிக்கப்படுகிறது.
 

திருவிழா:

சிவராத்திரி, திருக் கார்த்திகை, அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம்.

பிரார்த்தனை:

இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

விஞ்ஞானம் அடிப்படையில்: தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது.

#அமைவிடம் 

மாநிலம் : தமிழ் நாடு கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் புகை வண்டி நிலையம், என்று கைகாட்டி உள்ள பாதையில் (இடதுபுறம்) திரும்பிச் (மங்களபுரீஸ்வரர் - தியாகவல்லி என்று பெயர்ப் பலகை உள்ளது) சென்று, 'இரயில்வே' கேட்டைக் கடந்து நேரே மேலும், சென்று உப்பங்கழியின் மேல்கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக அக்கரையை அடைந்து கோயிலை அடையலாம். (கோயிலுக்குச் செல்லும் வழி நொய்ம்மணலாக இருப்பதால் காலையில் 10 மணிக்குள்ளும், மாலையில் 4 மணிக்குப் பிறகும் செல்வது நலம்.

திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...