Wednesday, May 31, 2023

குருவார பிரதோஷம் - யாரை, எப்படி வழிபட்டால் என்ன நன்மை நடக்கும்?

🔥🕉️ #குருவார பிரதோஷம் - யாரை, எப்படி வழிபட்டால் என்ன நன்மை நடக்கும்?

🔥#சிவ_ராத்திரிக்கு அடுத்தபடியாக சிவ பூஜை செய்ய உகந்த காலம் பிரதோஷம் ஆகும். சிவனுக்குரிய அஷ்ட விரதங்களில் பிரதோஷ விரதம் மிக முக்கியமானது. இந்த நாளில் விரதமிருந்து சிவாயத்திற்கு சென்று நந்தியை வில்வம், அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவ தரிசனம் செய்வது பல மடங்கு புண்ணிய பலனை தரும்.
    

🕉️🔥#சிவ_பெருமானை பிரதோஷ நாளில் வழிபட எண்ணிய காரியங்கள் ஈடேறும். தொடர்ந்து பிரதோஷ விரதம் இருப்பவர்களுக்கு முக்தி நிலை கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் பிரதோஷ விரதம் இருப்பவர்களுக்கு சிவலோக பதவியும், பிறவா நிலையும் கிடைக்கும்.

🔥#குரு_வார பிரதோஷம்

சிவ பெருமானுக்குரிய மிக முக்கிய விரத நாட்களில் ஒன்று பிரதோஷ விரதம். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் தொலைவதுடன், சகல விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

🔥 #வியாழக்கிழமையில் வரும் பிரதோஷம் என்பதால் இதனை குருவார பிரதோஷம் என்கிறோம். வியாழக்கிழமையில் வரும் பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை மட்டுமல்ல பார்வதி தேவி, முருகன், விநாயகர் ஆகியோரையும் சேர்த்து வழிபடுவது பல மடங்கு நன்மையை பெற்றுத் தரும்.

#பிரதோஷ விரதம் :

ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் திரியோதசி திதிகளை பிரதோஷ நாட்கள் என்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்து சிவ லிங்க அபிஷேகம், ருத்ர அபிஷேகம் செய்வது சிவ பெருமானை வழிபட்டால் தீமை ஒழியும். மகிழ்ச்சி, மன அமைதி கிடைக்கும். கர்ம வினைகள் தீரும்.

🙏🏼🔥#குரு_வார பிரதோஷ நாளில் குடும்பத்துடன் இருக்கும் சிவ பெருமானை வழிபட்டால் சிவனின் அருளுடன் குரு பகவானின் அருளையும் பெற முடியும். 

#அதோடு குருவிற்குரிய தெய்வமான முருகப் பெருமானையும் இந்த நாளில் வழிபடுவது சிறப்புக்குரியது. பகல் முழுவதும் உபவாசம் இருந்து, இரவில் சிவ தரிசனம் கண்ட பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஒரு சிலர் திரியோதசி திதி முடியும் வரையிலும், 24 மணி நேரம் முடிந்த பிறகே விரதத்தை நிறைவு செய்வார்கள்.

🔥#பிரதோஷ விரதம் யார் இருக்கலாம் ?

பிரதோஷ விரதம் வயது வித்தியாசமின்றி, ஆண் - பெண் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த நாளில் நடராஜரை வழிபடுவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அசுரர்களை வெற்றி கொண்டு, தேவர்களை சிவ பெருமான் காத்த பொழுது என்பதால் அனைவரின் வாழ்விலும் வெற்றிகளை பிரதோஷ விரதம் அள்ளி தரும். திருமணம் ஆகாதவர்கள் குரு வார பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் விரைவில் நல்ல வரன் அமையும்.

🔥🕉️ #பிரதோஷ விரதம் இருக்கும் முறை :

* அதிகாலையில் எழுந்து நீராடி, மனை பலகையில் சிவ குடும்ப படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

* நெய் தீபமேற்றி, மலர்கள் சூட்டி, இனிப்பு வகைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

* வில்வ இலைகளை பூஜைக்கு பயன்படுத்துவது மிகப் பெரிய பலனை தரும்.

பிரதோஷ விரத முறை
* சிவ நாமங்களை பாராயணம் செய்ய வேண்டும். சிவ புராணம், திருவாசகம், லிங்க அஷ்டோத்திரம், கோளறு பதிகம், திருநீற்றுப்பதிகம் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

* பால், தயிர், தேன், சர்க்கரை, நெய் ஆகியவற்றை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுக்கலாம்.

* அபிஷேகத்தின் போது கண்டிப்பாக ஓம் நமச்சிவாய நாமத்தை ஜபித்தபடி இருக்க வேண்டும்.

* பிரதோஷ வேளையில் மகாமிருத்ஜ்சய மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது பல வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றி தரும்.

🔥#குரு வார பிரதோஷ விரத பலன்கள் :

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் விரைவில் திருமணம் நடைபெறும். திருமண தடை உள்ள ஆண்கள் நல்ல வாழ்க்கை துணை அமைய சிவ மந்திரத்தை ஜபித்து பிரதோஷ விரதம் இருக்கலாம். வாழ்க்கையில் வெற்றி, நிம்மதி, செல்வம் ஆகியன கிடைக்கும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீரும்.

சொல்ல வேண்டிய மந்திரம் :
"ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கெளரி
நாராயணி நமோஸ்துதே !!"

"ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரொளம் ஸஹ் குரவே நமஹ"

"பத்னி மனோகரமாம் தேஹி மனோவ்ரித்தாதானு - ஸாரிணீம் தாரிணீம் துர்க்காசன்சர் சாகஷ்யாயே குலோத்பவாம்"

"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திரம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்"

ஓம் நமசிவாய நம ஓம் 🙏🏼

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...