Tuesday, May 9, 2023

அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்

அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.
     “ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்
     பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ? 
     ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை
     நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ?” (தாயுமானவர்)

அகல், எண்ணெய், திரி, சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு. நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலக்ஷ்மி குடியிருப்பாள்.

எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்கு காரணமும் உண்டு. அதாவது அகல் விளக்கு ஒரு ஏழை ஒருவனால் ஐம்பூதங்களைக் [மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்] கொண்டு செய்யப்படுகிறது. 

அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான். அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள்.

அகல் விளக்கின் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.
 
1. அகல் விளக்கு - சூரியன்

2. நெய்/எண்ணெய்-திரவம் - சந்திரன்
 
3. திரி - புதன்
 
4. அதில் எரியும் ஜுவாலை - செவ்வாய்

5. இந்த ஜுவாலையின் நிழல் கீழே - ராகு

6. ஜுவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு
 
7. ஜுவாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி - சனி
 
8. வெளிச்சம் பரவுகிறது-இதுஞானம் - கேது
 
9. திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - சுக்கிரன் (ஆசை)

அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம். ஆசைகள் நம்மை அழிக்கிறது ;  மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை  மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

இன்னுமொரு காரணம்,

அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும் பிழைக்கிறது. நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம். இதுவும் புண்ணியக் கணக்கில் போய் சேரும்.

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...