Sunday, October 29, 2023

திருவாரூர் தியாகராஜர் கோயில் கிரகணநேரத்திலும் திறக்கபட்டு அபிஷேகமும் நடைபெறும்

திருவாரூர் தியாகராஜர் கோயில்கிரகணநேரத்திலும் திறக்கபட்டு அபிஷேகமும் நடைபெறும் அதனால் தான்.
இவர் உலகத்திற்கு ராஜா 🙏
#ஆரூரா_தியாகேசா

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ கோயில் சைவ சமயங்களில் தலைமை பீடமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு என தனி சிறப்பு உள்ளது'

அதாவது இந்த கோயிலில் அனைத்து நவகிரகங்களும் ஒரே திசையில் தியாகராஜ சுவாமியை நோக்கி அமைந்துள்ளது. தியாகராஜ சுவாமி மகாராஜாவாக இருந்து நவகிரக தோஷங்களை நீக்குவதால் சர்வ தோஷ பரிகார தலமாகவும் இந்த கோயில் உள்ளது.

நடு ராத்திரியில் சந்திரகிரகணம் வந்தாலும் உச்சி வெயிலில் சூரிய கிரகணம் வந்தாலும் நடைகள் திறந்து வைக்கப்பட்டு திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் பூஜைகள் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்து கோயில்களிலும் நடை சாத்தப்படுவது வழக்கம்.

இப்படியிருக்க, திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ பெரிய கோயிலில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சர்வ நவகிரக தோஷங்கள் நீங்கி வளம் பெற சுவாமி தரிசனம் செய்வார்கள்..

இந்த ஆண்டு நாளை 28-10-2023
#திருவாரூர்
அருள்மிகு ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் இரவு 01.05 மணிக்கு மேல் #சந்திரகிரஹணத்தை முன்னிட்டு இரண்டாம் கால அளவில் #அருள்மிகு_தியாகராஜ_சுவாமி கிரஹணகாலத்தில் #மஹா_அபிஷேகம் நடைபெற்றது உள்ளது.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...