Sunday, October 29, 2023

கர்நாடக மாநிலம், ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது.

🛕 ஹாசனாம்பா கோவில்..!!

தீபாவளியில் திறக்கப்படும் கோவில்... 
🌹 கர்நாடக மாநிலம், ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. மேலும், இக்கோவிலின் சிறப்புகளையும், தகவல்களையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. 

10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் :

👉 இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே அதாவது தீபாவளி நாட்களில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

👉 இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது.

வாடா மலர்கள் :

🌹 ஹாசனாம்பா கோவில் மூடப்படும் கடைசி நாளில் அம்மனுக்கு சூட்டப்படும் மலர்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு கோவில் திறக்கப்படும் வரை வாடாமல் இருக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

🌹 இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் கோவில் திறக்கப்படும் நாளில் ஏராளமான பக்தர்கள் வந்து குவிகிறார்கள்.

அணையாத தீபம் :

🔥 ஒவ்வொரு ஆண்டும் ஹாசனாம்பா கோவில் பலி பட்யாமி என்ற தினத்தில் மூடப்படுகிறது. கோவில் மூடப்படும் இந்த நாளில் அங்கு ஒரு தீபம் ஏற்றப்படுகிறது. 

🔥 இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமையன்று கோவில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

மாமியார்-மருமகள் கல் :

👉 இங்கு இருக்கும் மாமியார்-மருமகள் கல்லிற்கு ஒரு குட்டி கதை சொல்லப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் நாள் தவறாமல் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து வழிபட்டு கொண்டு இருந்திருக்கிறாள்.

👉 ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் 'வீட்டில் உள்ள வேலைகளை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்" என்று சொல்லி அந்தப்பெண்ணை அடித்திருக்கிறாள்.

👉 அப்போது அப்பெண் வலியால் சத்தமிட்டாள். அப்போது அம்மன் அவள் முன்பு தோன்றி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோவிலில் காணப்படுகிறது. 

👉 இந்த கல் அம்மன் விக்ரகத்தை நோக்கி ஆண்டுதோறும் அரிசி அளவு நகர்ந்து கொண்டிருக்கிறதாம். இந்த கல் நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

திருடர்கள் கோவில் :

👨 ஒருமுறை நான்கு திருடர்கள் அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல ஹாசனாம்பா கோவிலுக்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாகி போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. 

👨 அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோவிலாக 'திருடர்கள் கோவில்" என்ற பெயரில் இந்த கோவிலின் வளாகத்தில் அமைந்திருக்கிறது.

👉 தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவிலுக்கு ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...