Saturday, October 7, 2023

வித்தியாசமான சிற்பம் படேஸ்வர் சிவாலயத்தில் நந்தியின் மீது சிவலிங்கத்தின் பாணம்

அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய 
 வித்தியாசமான சிற்பம் படேஸ்வர் சிவாலயத்தில் நந்தியின் மீது சிவலிங்கத்தின் பாணம் மட்டும் அமைந்த அமைப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகே, சதாராவில் இருந்து கோல்காபூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, படேஸ்வர். இங்குள்ள சிவன் கோவில் அபூர்வமான சிற்ப வடிவமைப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. 

அதில் ஒன்றுதான் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தி மீது அமைந்த சிவலிங்கம். பொதுவாக சிவலிங்கமான ஆவுடையாரின் மீது அமைக்கப்பட்டிருக்கும். தனியாக பாணம் மட்டும் அமைந்த லிங்கங்களும் நிறை இடங்களில் இருக்கின்றன. ஆனால் இந்த படேஸ்வர் சிவாலயத்தில் ஆவுடையார் மீது நந்தி ஒன்று படுத்திருக்க, அந்த நந்தியின் மீது சிவலிங்கத்தின் பாணம் மட்டும் அமைந்த அமைப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. தர்மத்தின் வடிவமான நந்தியின் மீது அமர்ந்துதான், சிவபெருமான் அனைத்து உலகையும் சுற்றி வருகிறார். அவரது வாகனமான நந்தியை, தர்மத்தின் மறு உருவமாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அதனை மெய்ப்பிக்கும் வகையில்தான் இந்த நந்தி மீதுதான சிவலிங்க அமைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...