Monday, December 25, 2023

திருவாதிரைத் திருவிழாக் கோயில்கள்*

*திருவாதிரைத் திருவிழாக் கோயில்கள்*     
                                                                                                   *திருவுத்தர கோச மங்கை  மங்களேஸ்வரர் திருக்கோயில்* :     
     
   அறுபத்தாறு முனிவர்களுக்கு இருபத்தெட்டு ஆகமங்களையும் அவற்றின் பொருளையும் ஆகமேசுவரன் உரைத்த மங்களமான திருக்கோயிலில் *மரகத  நடராஜருக்கு  அபிஷேகம் நடப்பது மார்கழித் திருவாதிரை யன்று மட்டுமே*. 

 எதிரே பெரிய  நந்தி கொடிக் கம்பம் பலிபீடம்  ஆகியவற்றுடன்  *தனிக் கோயில் போல் சிறப்புறும்  பெரிய நடராசர் சந்நிதியில்*   வருடம் முழுவதும் சந்தனக் காப்புடன் இருக்கும் மரகத நடராஜருக்கு  மார்கழித் திருவாதிரையில்   இரவும் பகலும்  நாள் முழுவதும்  அபிஷேகம் நடை பெற்று மீண்டும் சந்தனக் காப்பு சார்த்தப்படும்.  

        🌙  *திருவுத்தர கோச மங்கைக் கோணார் பிறைச் சென்னிக் கூத்தன் குணம்  பரவி*   (திருவாசகம்)         
     
  என்று மாணிக்க வாசகர்  எட்டு  குண  மரகத நடராசரைப் போற்றுகிறார். 

நடராஜர் பிரகாரத்தில்   *மாணிக்க வாசகருக்குத் தனிச் சந்நிதி*  உள்ளது.     

நடராசர் சந்நிதி மண்டபத்திலிருந்து  துளை வழியே  ஒரு புறம்  மாணிக்க வாசகரையும் மறு புறம் நேர் எதிரே அவருக்கு *ஜோதியாகக் காட்சி அளித்த மங்களேஸ்வரரையும்* காணலாம்.       

இந்த ஈஸ்வரன்   சந்நிதி மாடச் சந்நிதியாக உயரமாக நடராசர் பிரகாரத்தில் உள்ளது.   

☸️      *உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தக  வேடம் காட்டிய இயல்பும்*      

  ⚜️          *தங்கு உலவுச் சோதித்   தனி உருவம் வந்து அருளி* (திருவாசகம்)        

       என   மாணிக்க வாசகருக்கு மங்கள நாதர்   *ஆட்கொண்டு அருளிய தனித்த  தட்சிணா மூர்த்தியாகவும்*       *ஜோதி வடிவமாகவும்   காட்சி அருளினார்*  என்ற  வரலாறு தெரியாத ஆலய நிர்வாகம் *தனி உருவமான  சிவ லிங்கத்திற்கும் தட்சிணா மூர்த்திக்கும்  மாறாக*  உமையோடு இருக்கும்  உமா மகேஸ்வரரைத்  தவறாக வைத்துள்ளது.  

நடராசர் பிரகாரத்தில் பதினோரு  ருத்திரர்கள் பூஜித்த பதினோரு லிங்கங்கள் உள்ளன.  

மரகத நடராஜர் சந்நிதியில்  ஸ்படிக லிங்கமும் மரகத லிங்கமும் உள்ளன. 

*மாணிக்க வாசகர் சந்நிதி* வெளிப் பிரகாரத்தில் *ஆயிர லிங்கச் சந்நிதி  அருகேயும்* குளக் கரையை  ஒட்டி   அமைந்துள்ளது.   

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...