Monday, June 24, 2024

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்.

_மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்.!_


 1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 
4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.
இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.  

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.
6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். 

8.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. 

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும். 

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில்

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான்.உலக அதிசியங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி.

மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள் பற்றி அறிவோம்.!

1168 – 75  சுவாமி கோபுரம்
1216 – 38  ராஜ கோபுரம்
1627 – 28 அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47  மேற்கு ராஜா கோபுரம்
1372 -சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 - ஆறு கால் மண்டபம்
1526 -100 கால் மண்டபம்
1559 -சௌத் ராஜா கோபுரம்
 முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 - சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 - தேரடி மண்டபம்
1563 -பழைய ஊஞ்சல் மண்டபம்
வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72  வடக்கு ராஜா கோபுரம்
1564-72 வெள்ளி அம்பல மண்டபம்
கொலு மண்டபம்
1569 - சித்ர கோபுரம்
 ஆயிராங்கால் மண்டபம்
 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 - அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 - வீர வசந்தராயர் மண்டபம்
1613 - இருட்டு மண்டபம்
1623 - கிளிக்கூட்டு மண்டபம்
புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59  ராயர் கோபுரம்
அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45  புது மண்டபம்
1635 - நகரா மண்டபம்
1645 - முக்குருணி விநாயகர்
1659 - பேச்சியக்காள் மண்டபம்
1708 -மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்..

குலசேகர பாண்டியன்  1168 – 75
மாறவர்மன் சுந்தரபாண்டியன்  1216 –38
பாராக்ரம பாண்டியன் 1315 – 47
விஸ்வநாத நாயக்கர்  1529 – 64

கிருஷ்ணப்பா நாயக்கர் 1564 – 72
வீரப்ப நாயக்கர்  1572 – 94
கிருஷ்ணப்பா நாயக்கர் 1595 – 1601
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் 1601 – 09

முத்து நாயக்கர் 1609 – 23
திருமலை நாயக்கர்  1623 – 1659
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை  1623 – 59
 (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர்  1659

சொக்கநாத நாயக்கர்  1659 – 82
முத்து வீரப்ப நாயக்கர் 1682 – 89
விஜயரங்க சோகநாத நாயக்கர்  1706 -32
மீனாட்சி அரசி  1732 –36

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.!

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',
2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',
3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',
4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',
5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்
அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள்.!

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.!

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .
மதுரையில் பிறந்தாலும் 
மதுரையில் வாழ்ந்தாலும் 
மதுரையில் இறந்தாலும் 
மதுரையில் வழிபட்டாலும் 
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்..

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.

சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி


No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...