Monday, June 24, 2024

சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் மண் தலம் ஆகும்....

வாழ்வில்  பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம்.


சைவ, வைணவ சமய ஒற்றுமையை உணர்த்தும் வண்ணம் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சிதரும் திருத்தலம். 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில், நிலநடுக்கோட்டிற்கு நேரே சூரியன் பிரகாசிக்கும் தினங்களான மார்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தினங்களில் அதிகாலைச் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரான சங்கரலிங்க சுவாமி மீது படும் வண்ணம் கட்டப்பட்ட கோயில் கட்டடக் கலையின் அற்புதங்களுள் ஒன்று. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலம் சங்கரன்கோவில்.*
சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில்    மண் தலம் என்று அழைக்கிறார்கள். 

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துப் பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம் இந்த சங்கரன் கோவில். 
சங்கரன் கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளது.

கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர்.

பெரிய பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள் நடத்த முடியாதவர்கள் கோமதி அம்மனின் பெயரை மனதார உச்சரித்து கொண்டிருந்தாலே போதும், முழுமையான பலன்கள் கிடைக்கும்.

சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும். இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும்.

வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ ஜொலிக்கும் தங்க ரதத்தில் அம்பிகை கோமதி  உலா வருகிறாள். 

திங்கள் கிழமை மலர்ப்பாவாடையும் , செவ்வாய்கிழமை வெள்ளிபாவாடையும் , வெள்ளிகிழமை தங்க பாவாடையும் அம்பிகைக்கு சாத்தப்படுகிறது.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை கோலாகலமாக நடைபெறுகிறது.  

தினந்தோறும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை சொல்லப்படுகிறது. மற்ற திருக்கோவிலில் வடக்கு நோக்கி காட்சியருளும் துர்க்கை அம்மன் இங்கே தெற்கு திசை நோக்கி காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும்.

இங்கு ஆடி மாதம் பெளர்ணமி திதியும், உத்திராட நட்சத்திரமும் கூடிய நாளில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாய் நடைபெறும்.

பொதுவாக கோவில் கருவறை சுற்றுச்சுவர் பின்புறத்தில் லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு காட்சி தருவார். ஆனார் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். 

சங்கரன் கோவில் தலத்தில் வழிபட்டால் ஒற்றுமை குணம் உண்டாகும். நானே பெரியவன் என்ற மமதை எண்ணம் நீங்கும்.

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கு சங்கர நாராயணர்கோவிலில்  வேண்டிக் கொள்ளலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...