Tuesday, June 25, 2024

மனோக்ஞ நாதசுவாமி ,திருநீலக்குடி திருவிடைமருதூர்...

அருள்மிகு. 
மனோக்ஞ நாதசுவாமி திருக்கோயில்,
திருநீலக்குடி 612 108.        
திருவிடைமருதூர் வட்டம்,           தஞ்சை மாவட்டம்.    
*திருநீலக்குடி  (தென்னலக்குடி)   

*இறைவர் திருப்பெயர்:   மனோக்ஞ நாதசுவாமி, வில்வாரண்யேசுவரர், பிரமநாயகர், நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர், காமதேனுபுரீஸ்வரர்.          *இரு இறைவியர் திருப்பெயர்: 1.அநூபமஸ்தனி (திருமணக்கோலம்), 2.பக்தாபீஷ்டதாயினி (தவக்கோலம்).   
*தல மரம்: வில்வம், பலா 
*தீர்த்தம் : தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்,               பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம்.  *வழிபட்டோர்: அப்பர், வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் முதலியோர்.
*பாடல் பெற்ற தலம் -        *அப்பர் தமது தேவாரப் பதிகத்தில் “சமணர்கள் கல்லினோடு என்னைப்பூட்டி கடலில் எறிந்த அன்று நீலக்குடி சிவன் நாமத்தைக்கூறிப் பிழைத்தேன்" என்கிறார்.  
*அப்பரின் திருவாக்கில் 'நெல்லுநீள் வயல் நீலக்குடி' என்று மலர்ந்ததற்கேற்ப சுற்றிலும் வயல்கள் உள்ளன.

*இத்தலத்திற்கு பஞ்ச வில்வாரண்யக்ஷேத்திரம் என்றும் பெயருண்டு.

*பாற்கடலில் அமுதுகடைந்த போது தோன்றிய நஞ்சையுண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளி விளங்கும் தலமாதலின் இது திருநீலக்குடி என்றாயிற்று.

பாற்கடலில் வெளிவந்த  ஆலகால விஷத்தை, முழு பிரபஞ்சத்தையும் காக்க,  சிவபெருமான் அதை அருந்தினார்.  உலகின் எதிர்காலத்தைப் பற்றி பயந்து, விஷம் பரவுவதைத் தடுக்க, பார்வதி தனது கைகளை இறைவனின் கழுத்தில் வைத்தாள். அவரது தொண்டையில் விஷம் சிக்கி, கருநீல நிறத்தைக் கொடுத்தது. மேலும், உட்கொண்ட விஷத்தின் விளைவுகளை நீக்குவதற்காக, பார்வதி  எண்ணெயால் சிவனுக்கு அபிஷேகம் செய்தார்.

*இக்கோயிலில் இறைவனை சாந்தப்படுத்த எண்ணெய் பூசும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

*மூலவர் அதிசய மூர்த்தியாக திகழ்கிறார். இங்கு மூலவருக்கு எவ்வளவு எண்ணெய் வார்த்துத் தேய்த்தாலும் அவ்வளவும் பாணத்திற்குள்ளேயே உரிஞ்சப்படும்; வெளியே வழியாது. 
தவமிருக்கும் அம்பாளே, சுவாமிக்குத் தைலாபிஷேகம் செய்வதாக ஐதீகம். ஆகவே அம்பாள் முன் எண்ணெய் வைத்துப் பின்பு எடுத்துச் சுவாமிக்குத் தேய்ப்பர். 

*இந்த கோயிலில்  "எண்ணெய் அபிஷேகம்" மிக முக்கியமானதாகும். 
 
*திருமணம், குழந்தை வரம், மன அமைதி, வேலை வாய்ப்பு மற்றும் வியாபார முயற்சிகளில் வெற்றி பெற பலர் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.   

*திருக்கடையூரில்,   மார்க்கண்டேயருக்காக  எமனை சம்ஹாரம் செய்த  சிவபெருமான் திருநீலக்குடியில் மார்க்கண்டேயருக்கு "சிரஞ்சீவி" எனும் நித்திய வாழ்வு அருளினார். 

*மார்க்கண்டேயர் வழிபாட்டுக்குப் பயன்படுத்திய லிங்கம்  கோயிலில் உள்ளது.             

*சித்திரையில் நடைபெறும் கோயில் திருவிழா இந்த மார்க்கண்டேயர் புராணத்தைக் கொண்டாடுகிறது.

*நீண்ட ஆயுளுக்காகவும், எமபயம் நீங்கவும் பரிகார பூஜைகள் இங்கு செய்யப்படுகிறது.

*இங்குள்ள பலாமரத்தில் காய்க்கும் பலாச்சுளை நித்யபடியாக நிவேதமுண்டு. ஆனால் நிவேதிக்காமல் பலாப்பழத்தை வெளியில் எடுத்துக்கொண்டு போனால் வண்டுகள் உண்டாகிப் பலாப்பழம் கெட்டுப்போவதாக   சொல்லப்படுகிறது.
 
*இந்த கோவிலின் புராணத்தின் படி, தக்ஷனின் யாகத்தில் தாக்ஷாயினி அவமதிக்கப்பட்ட பிறகு, அவள் சிவனை வழிபட இங்கு வந்து மீண்டும் இணைந்தாள். 

*பல்வேறு காரணங்களால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவதற்கும், குடும்ப வாழ்க்கை புதுப்பிப்பதற்கும் நீலகண்டேஸ்வரரை வேண்டிக்கொள்கிறார்கள்.

  *பிரம்மா  இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது,  அவர் நிறுவிய லிங்கம் பிரகாரத்தில் உள்ளது. 

*மனித உடலில் உள்ள ஆறு ஆதாரங்களான  மூலதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி மற்றும் ஆஜ்ஞா  ஆகியவற்றுள் இத்தலம் மூலதாரத் தலமாக சிறப்புடன் விளங்குகிறது.

*அப்பருடன் உள்ள தொடர்பைக் கருத்தில் கொண்டு, இந்தக் கோயில் குறைந்தது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியலாம். இது பாண்டியர்கள் மற்றும் விஜயநகர வம்சத்தின் பிற்காலச் சேர்க்கைகளுடன் ஆரம்பகால சோழர் காலத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட கோயில்.

*அமைவிடம்
கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தை அடுத்துள்ளது. 

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...