Friday, July 26, 2024

சமயபுரம் முத்து மாரியம்மனுக்கு ஆறு தங்கைகள்...

1. சமயபுரம் முத்து மாரியம்மன் திருச்சி மாவட்டம்
 சமயபுரத்திலேயே இந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சோழ மன்னர் ஒருவர் தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்த நகரம் தான் இந்த சமயபுரம் என சொல்லப்படுகிறது.

 2. புன்னை நல்லூர் மாரியம்மன்

தஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அம்மன் காட்சி தரும் தலமாகும். மூலவர் சிலை புற்று மண்ணால் ஆனதால் இந்த அம்மனுக்கு அபிஷேகங்கள் ஏதும் செய்யப்படுவதில்லை.ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டுமே நடைபெறும். 

3. அன்பில் மாரியம்மன்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள அன்பில் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனின் திருமேனி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வேப்ப மரத்தடியில் கரை ஒதுங்கியதாக சொல்லப்படுகிறது. 

4. தென்னலூர் மாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. தென்னலூர் கிராமத்தின் அதிதேவதையாக இந்த மாரியம்மன் விளங்குகிறாள். ஆரம்பத்தில் எளிமையாக கூரையில் இருந்த அம்மனுக்கு பிறகு கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படு கிறது

 5.நார்த்தமலை முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தமலை என்ற ஊரில் இந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்டதாக இந்த கோவில் அமைந்துள்ளது. 

6. கொன்னையூர் மாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே உள்ளது கொன்னையூர் கிராமம். இந்த கோவில் ஊர் மத்தியில் அமைந்து உள்ளதால் நான்கு திசைகளிலும் உள்ள மக்களை இந்த மாரி யம்மன் காத்து வருவ தாக ஐதீகம்.

 7. வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்

திருவையாறு அருகே உள்ள குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது வீரசிங்கம்பேட்டை என்ற ஊர். இங்கு தான் இந்த மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சமயபுரம் மாரியம்மனின் சகோதரிகளில் கடைசி தங்கை இவர் தான் என சொல்லப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.... 

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...