Sunday, September 22, 2024

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..



அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும்.

#கிழக்கு, 
#தென்கிழக்கு, 
#தெற்கு, 
#தென்மேற்கு, 
#மேற்கு, 
#வடமேற்கு, 
#வடக்கு, 
#வடகிழக்கு 
ஆகியவை எண்திசைகள் ஆகும்.

இந்த எண் திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே 

#இந்திரன், 
#அக்னிதேவன், 
#யமன், 
#நிருதி, 
#வருணதேவன், 
#வாயுதேவன், 
#குபேரன், 
#ஈசானன் 
விளங்குகின்றனர்.

அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர்.மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பவர்கள். இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைக்கும்.

அஷ்டதிக் பாலகர்கள் 
#கோபுரங்கள், 
#வாயில்கள், 
#சுவர்கள், 
#கூரைகள் 
ஆகியவற்றில் ஓவியங்களாகவும், சிலை வடிவிலும் காணப்படுகின்றனர். 

#கிழக்கு:-
#இந்திரன்:-

இந்திரன் இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். #இந்திராணி (சசிதேவி) இவரின் துணைவியாகும்.

இவர் #ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள #வஜ்ராயுதம் ஆகும். 

இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.

#தென்கிழக்கு:-
#அக்னிதேவன்:-

அக்னி தேவன் இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. 

வேள்வியின் போது இடப்படும் அவிர்பாகப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வார். இவருடைய துணைவியார் #ஸ்வாகாதேவி ஆவார்.

இவருடைய வாகனம் #ஆட்டுகிடா ஆகும். இவருடைய ஆயுதம் #தீச்சுவாலையுடன்_கூடிய_வேல் ஆகும். 

இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.

#தெற்கு:-
#யமன்:-

யமன் இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். இவர் இறப்பின் கடவுள் ஆவார்.

சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி #யமி அல்லது #யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார்.

இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் #குபேரஜாயை ஆவார். 

இவர் #எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் #பாசக்கயிறு ஆகும். 

யமனை வழிபட்டால் தீவினைப்பயன்களை அகற்றி நல்வினைப் பயன்களை பெறலாம்.

#தென்மேற்கு:-
#நிருதி:-

நிருதி இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் #கட்கி ஆவார். 

இவருடைய வாகனம் #பிரேதம். இவருடைய ஆயுதம் #கட்கம் என்னும் வாள் ஆகும். .

இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.

#மேற்கு:-
#வருணபகவான்:-

வருண பகவான் இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். 

ஆறு, குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன.

ஐவ‌கை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். 

இவருயைட துணைவியார் #வாருணி ஆவார்.
இவருடைய வாகனம் #மரகம் என்ற மீன் ஆகும். இவர் #வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். 

இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும்.

#வடமேற்கு:-
#வாயுபகவான்:-

வாயு பகவான்  வடிவமற்றவர். மக்களின் உயிர் மூச்சு, பிராணனுக்கு ஆதாரமாக உள்ளவர். 

இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். 

ஹனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் #வாயுஜாயை ஆவார். 

இவருடைய வாகனம் #மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். 

இவரை வழிபட்டால் நீண்ட ஆயுளையும் பலத்தையும் பெறலாம்.

#வடக்கு:-
#குபேரன்:-

குபேரன் இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. 

இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன.

இவரின் துணைவியார் #யட்சி ஆவார். இவர் #மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம் #கதை ஆகும். 

இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.

#வடகிழக்கு:-
#ஈசானன்:-

இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். 

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் #ஈசானயஜாயை ஆவார்.

இவர் #எருதினை வாகனமாகக் கொண்டவர். #திரிசூலம் இவரின் ஆயுதமாகும். 

இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும்.

நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.

நற்பவி நற்பவி நற்பவி
வாழ்க வளமுடன்.  

#அஷ்டதிக்
#பாலகர்கள்
#ஸ்லோகம்:-

பொதுவாக மக்கள் செய்கின்ற நற்செயல்களையும்,  தீயசெயல்களையும் ஆதித்யன், சந்திரன், அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்துக் கொண்டு அச்செயல்களுக்கு ஸாக்ஷியாக இருக்கின்றனர் என மஹாபாரதம் சொல்கிறது.

எனவே மனிதன், தர்ம வடிவாயமைந்த அவர்களுடைய அருளைப் பெறுவதற்கும் தீயவற்றையகற்றி, நற்செயல்களை செய்து வந்தால் எல்லா மங்களங்களையும் பெறுகின்றான் என்பது அச்செய்யுளின் கருத்தாகும். 

அஷ்டதிக் பாலகர்களைத் துதிப்பதால் எல்லா நிறைவுகளையும் பெறலாம்.

#இந்திரன்:-

இந்திரன் இவரை உபாசிப்பதால் மக்கள் ஐஸ்வர்யத்தையும் ஸூகத்தையும் பெறலாம்.

ஐராவத கஜாரூடம்
ஸ்வர்ணவர்ணம் கிரீடிநம் |
ஸகஸ்ர நயநம் ஸக்ரம்
வஜ்ரபாணிம் விபாவயேத் ||

#அக்னி:-

அக்னி இவரை உபாசித்து ஒளி மிக்க திருமேனியைப் பெறுவதோடு, நற்பயன்களையும் அடையலாம்.

ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்
அக்ஷமாலாம் கமண்டலும் |
ஜ்வாலாமாலாகுலம் ரக்தம்
ஸக்திஹஸ்தம் ஸகாஸநம் ||

#எமன்:-

எமன் இவரை உபாசிப்பதால் தீவினைப் பயனை அகற்றி, நல்வினைப் பயனைப் பெற்று விளங்கலாம். இவர் தர்மத்தின் வடிவினர்.

க்ருதாந்தம் மஹிஷாரூடம்
தண்டஹஸ்தம் பயாநகம் |
காலபாஸதரம் க்ருஷ்ணம்
த்யாயேத் தக்ஷிணதிக்பதிம் ||

#நிருதி:-

நிருதி இவரை உபாசிப்பதால் பகைவர்கள் பயம் விலகும்.

ரக்தநேத்ரம் ஸவாரூடம்
நீலோ த்பல தளப்ரபம் |
க்ருபாணபாணி மாஸ்ரௌகம்
பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம் ||

#வருணன்:-

வருணன் இவர் மழையைப் பொழிந்து பயிர்களை வளரச் செய்து மக்களுக்குக் களிப்பை உண்டு பண்ணி ஸூகத்தைக் கொடுப்பவர்.

நாகபாஸுதரம் ஹ்ருஷ்டம்
ரக்தௌகத்யுதி விக்ரஹம் |
ஸஸாங்க தவளம் த்யாயேத்
வருணம் மகராஸநம் ||

#வாயு:-

வாயு இவர் வடிவமற்றவர். மக்களுடைய ப்ராணணுக்கு ஆதாரமாயுள்ளவர். 

இவரை உபாசிப்பதால் நீண்ட ஆயுளையும், பலத்தையும் பெறலாம்.

ஆபீதம் ஹரிதச்சாயம்
விலோலத்வஜ தாரிணம் |
ப்ராணபூதம்ச பூதாநாம்
ஹரிணஸ்தம் ஸமீரணம் ||

#குபேரன்:-

குபேரன் மக்களுக்கு ஸூகத்தைக் கொடுத்து ஸம்பத்தையும் செல்வத்தையும் வளரச் செய்பவர்.

குபேரம் மநுஜாஸீநம்
ஸகர்வம் கர்வவிக்ரஹம் |
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்தராதிபதிம் ஸ்மரேத் ||

#ஈசானன்:-

ஈசானன் இவர் மங்கள வடிவினர். இவர் மக்களுக்கு அறிவை வளரச் செய்து ஞானத்தைப் பெருக்கி விடுதலையைக் கொடுப்பவர்.

ஈஸானம் வ்ருஷபாரூடம்
த்ரிஸூலம் வ்யாலதாரிணம்|
சரச்சந்த்ர ஸமாகாரம்
த்ரிநேத்ரம் நீலகண்டகம் ||

நற்பவி நற்பவி நற்பவி
வாழ்க வளமுடன.

#அஷ்டதிக் 
#பாலகர்களின் 
#காயத்ரி:-

#அஷ்டதிக்
#பாலகர்கள் 
#சிறப்பாம்சம்:-

உலகெங்கிலும் காண முடியாத அஷ்டதிக் பாலகர்கள் உருவ சிலா பிரதிஷ்டையுடன் கூடிய சன்னிதியை ஸ்ரீ விஜய சித்ராம்பா சமேத ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆலய தீர்த்தத்தில் தரிசித்திடலாம்.

#இந்திரன்,
#அக்னி,
#யமன்,
#நிருதி,
#வருணன்,
#வாயு,
#குபேரன்,
#ஈசான்யன் 

ஆகிய எட்டு தேவ மூர்த்தியும் எட்டு திக்கில் பூமியை தாங்கி ஆட்சி செய்கின்றனர்.

திசைகள் அஷ்டதிக் பாலகர்களின் ஆட்சியின் கீழ்:-

#கிழக்குதிசை:- 
#இந்திரன்

#தென்கிழக்கு:-
#அக்னி

#தெற்கு:-
#யமன்

#தென்மேற்கு:-
#நிருதி

#மேற்கு:-
#வருணன்

#வடமேற்கு:-
#வாயு

#வடக்கு:-
#குபேரன்

#வடகிழக்கு:-
#ஈசான்யன்

#அஷ்டதிக் 
#பாலர்களின் 
#வழிபாட்டு 
#பலன்கள்:-

அஷ்டதிக் வழிபாடு என்பது உத்தம வாஸ்து வழிபாடு. இந்த அஷ்டதிக் திக்பாலர்கள் முன்பு தீபம் ஏற்றி, அவர்களுரிதான காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் வாஸ்து குறைபாடு ஏதேனும் இருப்பின் அஷ்டதிக் திக்பாலகர்களின் அனுக்கிரஹத்தால் நிவர்த்தி ஆகி வீடு, நிலம், மாளிகைகள் வாங்கும் பாக்கியம் கிட்டும். மேலும் மன அமைதி உண்டாகும்.

தொடர்ந்து வழிபட்டால் வாஸ்து சக்தி பெருகி வீட்டில், தொழிற்சாலையில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கி மேலும் உயர வழி பிறக்கும்.

#அஷ்டதிக் 
#பாலகர்களின் 
#காயத்ரி 
#மந்திரங்கள்:-

001. #இந்திர_காயத்ரி_மந்திரம்:-

ஓம் ஸஹஸ்ர நேத்ராய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி 
தன்னோ இந்திர ப்ரசோதயாத்.

002. #அக்னி_காயத்ரி_மந்திரம்:-

ஓம் மஹா ஜவாலாய வித்மஹே அக்னி தேவாய தீமஹி 
தன்னோ அக்னி ப்ரசோதயாத்.

003. #எம_காயத்ரி_மந்திரம்:-

ஓம் சூர்ய புத்ராய வித்மஹே மஹாகாலாய தீமஹி 
தன்னோ யம ப்ரசோதயாத்.

004. #நிருதி_காயத்ரி_மந்திரம்:-

ஓம் நிசாசராய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி 
தன்னோ நிருதி ப்ரசோதயாத்

005. #வருண_காயத்ரி_மந்திரம்:-

ஓம் ஜல பிம்பாய வித்மஹே நிலப்புருஷாய தீமஹி 
தன்னோ வருண ப்ரசோதயாத்.

006. #வாயு_காயத்ரி_மந்திரம்:-

ஓம் தத்புருஷாய வித்மஹே 
ரகசிய சஞ்சாரய தீமஹி 
தன்னோ வாயு ப்ரசோதயாத்.

007. #குபேர_காயத்ரி_மந்திரம்:-

ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி 
தன்னோ குபேர ப்ரசோதயாத்.

008. #ஈசான்ய_காயத்ரி_மந்திரம்:-

ஓம் தத்புருஷாய வித்மஹே 
சிவ ரூபாய தீமஹி 
தன்னோ ரூத்ர ப்ரசோதயாத். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...