Friday, October 4, 2024

நவராத்திரி வழிபாட்டினை எப்படி துவக்க வேண்டும்,

நவராத்திரி வழிபாடு பற்றிய பதிவுகள் :
நவராத்திரி வழிபாட்டினை எப்படி துவக்க வேண்டும், எந்த நாளில் பொம்மைகள் அடுக்க துவங்க வேண்டும், முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை வழிபட வேண்டும், எந்த நிறத்தில் உடை உடுத்தி, என்ன நைவேத்தியம் படைத்து, எப்படி வழிபட வேண்டும் என்ற விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி என்பது அம்பிகையை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான காலமாகும். 

நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை நாம் வழிபட வேண்டும், நவராத்திரி வழிபாடு தோன்றிய முறை, கொலு வைக்கும் முறை தோன்றிய வரலாறு, முதல் நாளில் அம்பிகையை எந்த நிறத்தில், என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய முறைகளில் வழிபடுவது சிறப்பு. 

நவராத்திரியை கொண்டாடுவதற்கும், கொலு வைப்பதற்கும் இரண்டு விதமான கதைகள் புராணங்களில் சொல்லப்படுகிறது.

மகிஷன் என்ற எறுமை ரூபம் கொண்ட அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை, ஒன்பது நாட்கள் தவம் இருந்தாள். பல்வேறு சக்தி வாய்ந்த வரங்களை பெற்ற அந்த அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகைக்கு ஒவ்வொரு தெய்வங்களும் ஒவ்வொரு விதமான ஆயுதங்களை அளிக்கிறார்கள். 

கடைசியாக அசுரனுடன் அம்பிகையை போரிட்டு, அவனை வதம் செய்கிறாள். அவள் வெற்றிக் கொண்ட பத்தாவது நாளையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.



இதற்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது ராமாயணத்தில் ராமன், ராவணனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாளில் வதம் செய்த நாளை தசரா பண்டிகையாக கொண்டாடுகிறோம். 

ராவண வதம் முடிந்து, மகாளய அமாவாசைக்கு அடுத்து வரும் அமாவாசையில் ராமன் அயோத்திக்கு திரும்பியதாகவும், அன்று மக்கள் தீபம் ஏற்றி அவரை வரவேற்ற நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுவதாக சொலல்ப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...