Monday, March 31, 2025

மஹா சிவராத்திரி அன்று பகல் வேளையில் ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும் கோவில்...

வருடத்தில் 
ஒருமுறை நிகழும் #மகாசிவராத்திரி அன்று ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்டு 
பக்தர்களுக்கு 
காட்சி தரும் தலமான,
வாமதேவர் பிறப்புக்கு அஞ்சி சிவலிங்க பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்ட இடமான,
இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் 
#காஞ்சிபுரம் (திருக்கச்சி )
மாவட்டத்தில் உள்ள 
#சிவகாஞ்சியில் (#பெரிய_காஞ்சி)
உள்ள வெண்குளம் தென்கரையில் மேற்கு நோக்கி காட்சி தரும் 
#காஞ்சிபுரம்_பிறவாத்தனம் (பிறவாஸ்தனம்)
#பிறவாதீசுவரர்
(#பிறவாத்தானேசுவரர்,
அபுணர்பவேஸ்வரர்)
திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 
காஞ்சிபுரம் பிறவாதீசுவரர், பிறவாத்தானேசுவரர் (பிறவாத்தானம்) என்று அறியப்படுவது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும் . மேலும், சிவகாஞ்சி வெண்குளம் தென்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.

மூலவர் பிறவாதீஸ்வரர்.,
காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையம் அருகில் உள்ளது,இறாவதீஸ்வரர் கோவில் எதிரே அமைந்துள்ளது.

#தல_வரலாறு:

வாமதேவ முனிவர் பிறப்புக்கு அஞ்சி, (பயந்து) பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும்போதே, இறைவனை எண்ணி (நினைத்து) வேண்டினார். இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகா"தென்று அருளிச்செய்தார். வாமதேவரும் அவ்வாறே பூமியிற் பிறந்து, காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறாகும். இதனாலேயே இத்தலம் பிறவாத்தானம் எனப்பட்டது.

காஞ்சிபுராணத்தில் இவ்வாலயம் அபுணர்பவேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. வாமதேவ முனிவர் பிறப்புக்கு அஞ்சி, பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும் போதே, இறைவனைஎண்ணி வேண்டினார். இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகா"தென்று அருளிச்செய்தார்.வாமதேவரும் அவ்வாறே பூமியிற் பிறந்து, காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுபிறவி நீங்கப் பெற்றார் என்பது இந்த தல புராணமாகும்.

இதனாலேயே இத்தலம் பிறவாஸ்தானம் எனக் இக்கோயில் பற்றி காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

மலைகற்களே இல்லாத காஞ்சிபுரத்தில்,தனது தலைநகரில் கோயில் கட்ட முடிவெடுத்த ராஜசிம்மன், அதற்கு அடித்தளமாககாஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோயிலஇது,இவற்றில் பலமுதல்  வேலைப்பாடுகளை வெளி கொண்டுவந்து இருக்கிறார்,இதற்கு பிறகே கைலாசநாதர் கோவில் முதலிய பிற கோவில்களை கட்டியுள்ளார் எனக் கூறப்படுகின்றது..

கோயில் கட்டுமானம் பாதபந்த அடித்தளம் கொண்டு, மேலே விருத்த ஸ்புடித கிரீவம் கொண்டு இரண்டுதள விமானம் அமைந்து இருக்கிறது.உப கிரீவத்தில் பூதவரி உள்ளது. அர்த்த மண்டபத்துடன் கூடிய மிக சிறிய கோவில் இது. 

விருச்சிக கரணம், கஜலட்சுமி, தக்க்ஷிணாமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி,ஜலந்தரஸம்ஹர மூர்த்தி, பிரம்மா,விஷ்ணு மற்றும் துவார பாலகர்கள் என ஆலய மூன்று பக்க சுவர்களில் நிறைந்திருக்கிறார்கள்.

எப்போதுமே பூட்டி கிடக்கும் இந்த பிறவாதீஸ்வரர் கோயிலை நிர்வாகிப்பதும், இறாவதீஸ்வரர் கோவில் அர்ச்சகரே,இவரிடமே இக்கோவிலுக்குக்கான சாவி உள்ளது.

மத்திய தொல்லியல்  துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்,
இக்கோயில் ஒருமுறை மட்டுமே வரும் மஹா சிவராத்திரி அன்று பகல் வேளையில் ஒரு நாள் 
மட்டுமே திறந்திருக்கும்.

#அமைவிடம்:

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடக்கு பகுதியில், பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலைலிருந்து காஞ்சிபுரத்தை இணைக்கும் சாலையில், பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெரு காமராஜ் நகர் குடியுறுப்பு பகுதியில் உள்ளத. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு மருதமலை..

#மருதமலை_முருகன்_கோயில்..... கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்க...