Friday, July 25, 2025

கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா?

கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா? 
இது பற்றி பல கருத்துக்கள் பதிவுகளாக இணையத்தில் உலா வருகின்றன.

பலரும் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றக்கூடாது என பதிவிட்டிருக்கின்றனர்.

மற்றவர் விளக்கு ஏற்றியதற்குரிய காரணங்கள் நமக்கு சரியாக வராது என்றும் பழைய விளக்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும்  அதற்கான காரணங்களாகக் காட்டுகிறார்கள்.

ஆனால் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு
தாராளமாக ஏற்றலாம். இதனால், தீபம் ஏற்றியவருக்கோ ஏற்றுபவருக்கோ பலன் ஏதும் குறைந்து விடாது. 

இதற்கு புராணத்தில் இருந்து விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரு சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. 

ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது. எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது.  

இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. 

சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் (சடைமுடிநாதர்) உலகப் புகழ்பெற்ற வெள்ளை விநாயகர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலைக்கு மிக அருகில் அமைந்துள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் (சடைமுடிநாதர்) திருக்கோவில் வளாகத்தில் தான் இந்...