Tuesday, September 30, 2025

ஏனாதி நாயனார் முக்தித் திருநாள்*, *உத்திராடம்**புரட்டாசி 15*

🔴    *ஏனாதி நாயனார்  முக்தித் திருநாள்*, *உத்திராடம்*
*புரட்டாசி  15*
*அக்டோபர்  1* 
              
பகைவன் என்று தெரிந்தும் உயிரை வாங்க வந்தவனின் *மேனியில் இருந்த சிவச் சின்னங்களை  மதித்துப்   பகைவனின்  விருப்பத்தை நிறைவேற்றியவர்கள்* ஏனாதி நாயனார் மெய்ப்பொருள் நாயனார்.      

     சிவச் சின்னங்களை சிவமாகவே கண்டு போற்றித் தொண்டு  செய்தவர்கள்  ஏனாதி நாயனார்,   மெய்ப் பொருள் நாயனார், புகழ்ச் சோழர் , சேரமான் பெருமாள், நரசிங்க முனை யரையர்,  கலிக் கம்பர்  மற்றும் பலர்.         
       
🕉️ *வேடம் கை தொழ  வீடு  எளிதாமே*  (சம்பந்தர்)
        
☸️    *மலிந்தவர் வேடமும்  ஆலயம் தானும்  அரன் எனத் தொழுமே* (சிவஞான போதம்)    
       
⚜️  *சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்* (திருவாசகம்) 

என விபூதி ருத்திராட்சம் சடை முடி ஆகியவற்றைக்  கண்டு *சிவ சிவ* என்று  போற்றி அவற்றின் புனிதம் காத்து உயிரையும் விட்டவர்கள்  நாயன்மார்.                                

⚜️ *ஒன்று அவன் தானே*                                        

🕉️   *சைவப் பெருமைத் தனி நாயகன்*                                          

⚜️        *அம்மையாய் நின்ற பேர் நந்தி தானே*  (திருமூலர்)      

⚜️ *யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான்* (திருவாசகம்)

என எல்லாம் கடந்த மெய்க் கடவுளை வழிபடும்  *சைவத் திரு நெறியில் சுவாமி அம்மன் என்றெல்லாம்  தனித் தனியே  இரண்டு தெய்வம்  இல்லை.*

சிவம் *ஒன்றே* *அப்பனாய்* *அம்மையாய்* உள்ளது.  

தாயுமான *சிவமே* *இறைவி* , சிவமே *இறைவன்* . 

ஆதலால்    அத்தெய்வம் இத் தெய்வம் என்று *இரண்டு பேச்சு பேசாமல்  சிவச் சின்னம்  கண்டு சிவனடியாரான பெருமைக்கு  ஆனந்தம் அடைந்து  தந்தை தாயாய் உள்ள சிவ பரம்பொருளின் மகிமை மட்டுமே  பேசி  வஞ்சனை இல்லாமல் தொழுது வழிபடும்  மெய்யடியார்களின் இயல்பினைத்* திருக் கன்றாப்பூர் பதிகம் முழுவதும் திருநாவுக்கரசர் விளக்குகிறார்.      
        
🔯     எவரேனும் தாமாக விலாடத்து இட்ட   *திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி* உவராதே      
        அவர் அவரைக் கண்ட போது *உகந்து அடிமைத் திறம் நினைந்து*  அங்கு *உவந்து* நோக்கி               
        *இவர் தேவர் அவர் தேவர் என்று இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே  பேணிக்*                              .             
        *கவராதே தொழும் அடியார்*  நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடு தறியைக் காணலாமே.        (அப்பர்  )                        

   ⚜️      ஆன *நீற்றுக் கவசம்* அடையப் புகுமின்கள்  (திருவாசகம்) 
       
  கங்காளன் பூசும் *கவசத் திருநீறு* (திருமந்திரம்)  
        
✡️    *மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப் பெற்றால்* 
          *வெந்து அறும் நோயும் வினையும்* வெவ்வழல் விறகு இட்டு அன்றே (அப்பர்)  
         
   என   உடல் நோய்,   உயிர்  நோய் ஆகிய  கர்மம் பிறவி  நீக்கி *உடலுக்கும் உயிருக்கும் கவசமாக இருக்கும்  மதுரை ஆலவாய் அழகனின்  விபூதி* மகிமையை  ஒரு திருப் பதிகம் முழுவதும் தெய்வ பாலகர்  போற்றுகிறார்.  
      
   *நீறு இல்லா நெற்றி பாழ்* என்றார் ஒளவையார்.
 
        *கொன்றை  வேந்தனுக்குப்  பூ தரும் கொன்றை மரம் போல் உருத்திராட்ச  நாயகனுக்கு கொட்டை மணி தரும் மரம்* என்று அறியாமல்,
          
   *சிவபெருமான்  நெருப்புக் கண்ணன் சூரியச் சந்திரச் சுடர் விழியன்  மாசு  இல்லா  அருள் விழியன்*  என்று தெரியாமல்,
  
*எல்லை யில்லாத ஆனந்தம்  ஈசன் குணம்*

*இவ்வளவு சிறப்பு மிக்க ஏனாதி நாயனார் முக்திக்கு திருநாள் நமது நெல்லிக்குப்பம் எய்தனூர்  ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்*🙏🙏🙏🙏

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசன் தரிசனம்.

சனி பிரதோஷம்  விரதம் இருந்தால் பாவங்கள் விலகி  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புண்ணியம் சேரும். ~~~~~~~~~~~~~ சனிப்பிரதோஷ நாளில் விரத...