Monday, September 1, 2025

நரசிம்மரும், சுவாதி நட்சத்திரமும்

நரசிம்மரும், சுவாதி நட்சத்திரமும்
நரசிம்மரை வழிபட்டால் பரமேஸ்வரன்-பார்வதியை வழிபட்டது போன்ற உயர்ந்த பலன் கிடைக்கிறது.

சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம். வாயுதேவர் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அதே வாயுவேகத்தில் வந்து நம்மைப் பாதுகாத்து அருள் புரிவார் இந்த நரசிம்மர்.

சுவாதி நட்சத்திரத்திற்கு தோஷம் கிடையாது.

நரசிம்மரை வழிபடுவதினால் ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சினைகள் நீங்கி நன்மை உண்டாகும். மேலும் பில்லி, சூனியம், எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து வழிபாடு செய்தால் “ருண விமோசனம்’ என்னும் கடன் தொல்லைகள் நீங்கும் பேறு ஏற்படும்; செல்வச் செழிப்பு உண்டாகும். வியாபாரம் அபிவிருத்தியாகும்.

நரசிம்மர் அவதாரம் எடுத்தது மாலை வேளையில் (பிரதோஷ காலம்). ஆதலால் சுவாதி நட்சத்திரத்தில், மாலை வேளையில் நரசிம்மரை வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐப்பசி பௌர்ணமி சிவனுக்கு அன்னாபிஷேகம் ஏன்?

அன்னாபிஷேகம்...! ஐப்பசிமாத முழுநிலவு நாளில்      உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு. ஒவ்வொரு மா...