Wednesday, October 12, 2022

சிவ பக்தன் என்றால் யார்? சிவனடியர் என்றால் யார்?

சிவ பக்தன் என்றால் யார்? சிவனடியர் என்றால் யார்?
இவ்விரண்டுமே ஒரேபோல தான் தெரியும்.‌ ஆனால் சிவபக்தனுக்கும் சிவனடியருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.
1) சிவனை கண்டதும் பனிபவன் பக்தன்.
சிவனுக்காக எதையும் செய்ய துனிந்தவன் அடியார்.
2) சிவனை வணங்குபவர் பக்தன்.
சிவனை மட்டும் வணங்குபவர் அடியார்.
3) உடல் தூய்மையாக இருந்தால் ஒரே கோயிலுக்கு செல்பவர் பக்தன்.
தூய்மையை ஒரு பொருட்டாக கருதாமல், மனத்தூய்மை வேண்டி கோயிலுக்கு செல்பவர் அடியார்.
4) அர்சனை செய்வதற்கு கோயில் செல்பவர் பக்தன்.
ஈசனை போற்றி பாடி அனந்தமடைய கோயில் செல்பவர் அடியார்.
5) அறமல்ல சிவம் என்று உணராதவர் பக்தன்.
அன்பே சிவமேன உணர்ந்தவர் அடியார்.
6) மறைக்குள்ளும் முறைக்குள்ளும் உள்ளவர் ஈசன் என்று நினைப்பவர் பக்தன்.
ஈசனை அடைய மனமும் மொழியும் தடங்களில்லை, ஆக மறக்கும் முறைவும் எனக்கு இல்லை என்று நினைப்பவர் அடியார்.
7) கூட்டமாக கூட்டமாக இறைவனை காண்பவர் பக்தன்.
கூட்டம் போனபின் ஈசனழகை தனித்து நின்று ரசிப்பவர் அடியார்.
8) ஈசனை அடைய சுத்தமாக இருக்க வேண்டும் என நினைக்கப்பவர் பக்தன்.
சுத்தத்தை பெரிதாக எண்ணாமல் சித்தத்தை சிவன்பால் வைப்பவர் அடியார்.
9) வாழ்வில் ஒரு பகுதி வழிப்பாடுக்கு செலவு செய்பவர் பக்தன்.
வாழ்வே வழிபாடமாக கொண்டவர் அடியார்.

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...