Thursday, October 13, 2022

ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 இனிய சிவன் கோவில்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

🌷அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவமே என் வரமே 🌷

ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும்  
8  இனிய சிவன் கோவில்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சிலர் இதை அறிந்திருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். 

ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

பஞ்சபூத ஸ்தலம்:

நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

நீர் – திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்

ஆகாயம் – சிதம்பரம் நடராசர் கோயில்

காற்று – திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

ஆயிரம் ஆண்டுகள் பழைமை:

இனிய சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத்:

இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

ஆயிரம் மைல்கள்:

கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.

தீர்க்கரேகை நிலை:

1) கேதார்நாத் – கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் – காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)

3) ஸ்ரீ காலஹஸ்தி – ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் – ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் – நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

8) ராமேஸ்வரம் – ராமநாத கோயில் (9.2881, 79.3174)

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள்

உலகின் முதல்வன்
நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

ஆலவாயர் அருட்பணி மன்ற எம் குருவான  சிவ தந்தையே  சிவ ஆத்ம நமஸ்காரம்🙏

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...