Wednesday, December 14, 2022

திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலுக்கு அடுத்ததாக இந்த கோயில் புனிதமாக கருதப்பட்டு வருகிறது.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
                 *தினம் ஒரு திருத்தலம்...

        #மூன்று_கோலத்தில்_பெருமாள்..     
      #வணங்கிய_நிலையில்_கருடாழ்வார்..

 
#___அருள்மிகு__கல்யாண_வேங்கடேச_பெருமாள்_திருக்கோயில்.

        *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

#ஆந்திரப்_பிரதேசம்_திருப்பதி மாவட்டத்தில் உள்ள #சீனிவாச_மங்காபுரம் என்னும் ஊரில் அருள்மிகு கல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

🌺 திருப்பதியில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் சீனிவாச மங்காபுரம் என்னும் ஊர் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

 *#இந்தகோயிலின்_சிறப்புகள்_என்ன?* 

🌺இத்தல மூலவர் மேற்கு நோக்கி இடது புறம் இரண்டு கைகளுடன், ஒன்றில் வரத முத்திரையுடனும், மற்றொன்றில் சக்ராயுதத்தினை தாங்கியும், வலது கை ஒன்றில் காதி முத்திரையுடன் சங்கினை பிடித்துக்கொண்டு மிக அழகாக காட்சியளிக்கிறார்.

🌺 இவர் திருமலையில் இருக்கும் பெருமாளை போலவே கம்பீரமாக #எட்டடியில்_காட்சி_தருகிறார்.

🌺இத்தலத்தின் கருவறையில் பெருமாள் #மூன்று_கோலங்களில்_காட்சியளிக்கிறார்.

🌺நடுநாயகமாக #சீனிவாசப்_பெருமாளாக_நின்றகோலத்திலும்,  

#வலதுபுறம்_லட்சுமிநாராயணராக_அமர்ந்த_கோலத்திலும்,  

#இடதுபுறம்_ரங்கநாதராக_சயனகோலத்திலும்_பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

🦅 கருவறைக்கு எதிரில் கருடாழ்வார் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார்.

 *#வேறென்ன_சிறப்பு?* 

🔥இந்த கோயிலில் இலட்சுமி நாராயண சுவாமி மற்றும் ஸ்ரீரங்கநாத சுவாமி ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன.

🔥திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலுக்கு அடுத்ததாக இந்த கோயில் புனிதமாக கருதப்பட்டு வருகிறது.

🔥தனக்கு திருமணம் நடந்த #நாராயணவனத்தில்_5_அடி_உயரத்தில் 
பால்ய வடிவிலும்,  

🔥 #சீனிவாசமங்காபுரத்தில்_8_அடிஉயரத்தில் கம்பீரமாக யௌவன பருவத்திலும் (இளைஞன்), 

🔥 #திருமலையில்_6_அடி_உயரத்தில் சம்சாரக் கோலத்திலும் (குடும்பஸ்தன்) பெருமாள் காட்சி தருகிறார்.

🔥 #இம்மூன்று_மூர்த்திகளும் சீனிவாசப் பெருமாளின் ஒரே வடிவங்களே என்பது மிகவும் சிறப்பம்சமாகும்.

 *#என்னென்ன_திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

மாசியில் பிரம்மோற்சவம் 9 தினங்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசியில் பவித்ரோச்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி இங்கு சிறப்பு திருவிழாவாகும். சனிக்கிழமைகளில் பெருமாள் தேவியரோடு மாடவீதியில் உலா வருகிறார்.

 *#எதற்கெல்லாம்_பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

🔥 அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேற இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

 *இத்தலத்தில் என்னென்ன #நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 

🔥 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாள் மற்றும் தாயாருக்கு அபிஷேகம் செய்தும், திருமஞ்சனம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.🙏🙏

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...