Wednesday, December 14, 2022

குருவாயூர்_ஸ்தலம்பற்றிய_10சிறப்புகள்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
                        🪔🪔🪔🪔🪔🪔🪔
             *#குருவாயூர்_ஸ்ரீகிருஷ்ணர்*
                         🪔🪔🪔🪔🪔🪔🪔
          🐘🙏என்டே குருவாயூரப்பா.🙏🐘
#குருவாயூர்_ஸ்தலம்பற்றிய_10சிறப்புகள்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.🌺 குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் #மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. #பாதாள_அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.

2.🌺 இந்த திருக்கோவிலில் கண்ணன்  
#குழந்தை_வடிவில்_காட்சி_தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.

3.🌺 குழந்தைக்குப் #முதல்_முதலாக_சோறு_ஊட்டும்_வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.

4.🌺 இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட #யானைகள்_மிகவும்_விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.

5.🌺 இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். #வெற்றி_பெரும்யானைதான்_சுவாமியை_சுமக்கும்_பாக்கியம்_பெறும்.

6.🌺 இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை #நிர்மால்ய_பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

7.🌺 #நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய #ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.

8.🌺 இந்த ஸ்தலத்தில் உள்ள #துலாபாரம்_சிறப்பு_எண்ணில்_அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்தில் பழங்கள், கல்கண்டு , பொருள், காசுகள், போன்ற எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

9.🌺 #குரு_பகவானும்_வாயு_பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற #குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டிக் கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து #குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

10.🌺 கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே #கிருஷ்ணாட்டம்_மயில்_பீலியை_கொண்டு_கிரீடம்_செய்து_ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.

  ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண

🙏#ஸர்வம்_ஸ்ரீ_கிருஷ்ணார்ப்பணமஸ்து🙏

#ஸ்ரீகுருவாயூரப்பன்ஸ்வாமிதிருவடிகளே_சரணம்

🐘🐘🌺🐘🐘🌺🐘🐘🌺🐘🐘🌺🐘🐘🌺🐘🐘

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...