Wednesday, December 14, 2022

*மார்கழி மாதத்தில்**கடைப்பிடிக்கபடும்* *முக்கிய* *விரதம்*...!!*

*ஸ்ரீராமஜெயம்* 🙏
 *மார்கழி மாதத்தில்*
*கடைப்பிடிக்கபடும்* *முக்கிய* 
*விரதம்*...!!*

மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழிவழியாகத் தொடர்ந்து 
கடைபிடிக்கப்படுகிறது.அந்த வகையில் மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் 
சிறப்பு வாய்ந்தது. 
மார்கழி மாதத்தில் விரதம்இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி 
செல்வ செழிப்புடன்வாழலாம். மேலும் திருமணத்தடை நீங்கும், குழந்தை 
பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதத்தின்ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் 
கொண்டாடப்படுகிறது.ஸ்ரீமந்நாராயணனின்கேசவா, நாராயணா, கோவிந்தா, 
மாதவா, மதுசூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா,ஸ்ரீதரா, ரிஷிகேசா, 
பத்மனாபா, தாமோதரா என்ற பனிரெண்டு நாமங்களும், பனிரெண்டு 
மாதங்களாக கருதப்படுகின்றன.இதில்முதல் நாமமாக விளங்கும் 
ஸ்ரீமந்நாராயணனின்கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான 
மார்கழியாக விளங்குகிறது 
மார்கழியில் அதிகாலை எழுந்துஅழகானவண்ணக்கோலம்இட்டுஅதில் ஒரு 
பூசணிப்பூவையும்வைப்பதுதான்மரபு. 
இந்த மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை நோன்புஇருந்து வழிபட்டால் 
அவர்களுக்கு வேண்டியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கண்ணனைகணவனாக மனதில் ஏற்றஆண்டாள் தன்னைஆயர்பாடி 
பெண்களில் ஒருத்தியாக மனதில் நினைத்துக்கொள்கிறாள்.

திருவில்லிபுத்தூரைஆயர்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் 
மாளிகையாகவும்,அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் 
நினைத்துஇடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.அந்நோன்பைப் 
பற்றித் திருப்பாவையிலும்கூறப்பட்டுள்ளது. 
இந்த மார்கழியில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின்போது விடியும்முன்பே 
எழுந்து விடுவார்கள். தனது தோழிமார்களானமற்ற கன்னி பெண்களையும் 
தூக்கம் கலைத்து எழுப்பிக்கொண்டு நீராடிஅருகில் உள்ள பெருமாள் 
கோயிலுக்கு சென்றுஇறைவனைத் துதித்து வழிபடுவதுதான்பாவை நோன்பின் 
முக்கியஅம்சம்.

பாவை நோன்புக் காலத்தில்ஆண்டாள்இயற்றிய திருப்பாவை , நாச்சியார் 
திருமொழி மற்றும்ஆழ்வார்கள் பாசுரங்களைமுழுவதும்அதிகாலையில் பாடி வர 
வேண்டும் 

நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில்இரண்டாம் 
பாடலில் உள்ளது போல நெய் மற்றும் பால் உண்ணாமல் ,கண்ணுக்கு 
மையிடாமல் தலையைச் சீவிமுடித்து மலர்களைச்சூட்டிக்கொள்ளுதல் முதலிய 
அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தன்னைஅலங்கரித்துக்கொள்ளும் 
எந்த செயலையும் செய்யாமல்இறைசிந்தனையில் இந்த பாசுரங்களை தான்பாட 
வேண்டும். பெருமாளையும்ஆண்டாளையும் வழிபட வேண்டும் .இப்படி மார்கழி 
மாதம்முழுவதும் சரியாக செய்து வந்தால் கன்னிப்பெண்களுக்கு மனதில் 
நினைத்தது போலஅழகானகணவன்அமைவான்என்பதுஆன்மிக நம்பிக்கை.🙏🌹

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...