Sunday, May 5, 2024

அட்சய செல்வம் அருளிய ஐஸ்வர்யேஸ்வரர் திரு நாள் அட்சய திரிதியை.

அட்சய  செல்வம் அருளிய ஐஸ்வர்யேஸ்வரர்திரு நாள் அட்சய திரிதியை*.                                                                                                                                                                                          
               
           அட்சய என்றால் குறையாதது என்று பொருள்.  *சங்க நிதி, பதும நிதி*   என்ற இரண்டு செல்வங்கள் எடுக்க எடுக்கக் குறையாத செல்வங்கள் அதாவது *அட்சய ஐஸ்வர்யங்கள்.* இந்தச் செல்வங்களை உடையதால்  *யாவும்  கடந்த  ஒரே கடவுளான பரமேஸ்வரனுக்குத் தொலையாச் செல்வர் ஐஸ்வர்யேஸ்வரர்*  என்று அருள் நாமங்கள்.  

            திருவையாறு  ஐயாறப்பர் கோயில் அருகே உள்ள  *திருச் சோற்றுத் துறையில் ஈசனுக்குத்  தொலையாச் செல்வர்*   என்று அருள் நாமம். 
           செல்வக் கடவுளான  பரமேஸ்வரன் இந்த *இரண்டு  செல்வங்களை லட்சுமிக்கும் குபேரனுக்கும்  அருளிச் செய்து அவர்களை முறையே  செல்வத்தின் தெய்வமாகவும் செல்வத்தின் தேவனாகவும் ஆக்கி அருளினார்*.

       .  ⚜️  *அதிபதி செய்து அளகை வேந்தனை நிதிபதி செய்த நிறை*   (திருமூலர்)  
       
          என  திரு நின்றியூர் திரு நின்றவூர் திருமாணி குழி திருநெல்வேலி திருவானைக்கா   எனப் பல தலங்களில்  *பூஜை  செய்த   லட்சுமிக்கும் குபேரனுக்கும்  பரா பரன்  அட்சய செல்வம் அருளிய  திரிதியை நாள் அட்சய திரிதியை*  எனப்படுகிறது.  
      
           திருச் சேறை ,  திருப் பராய்த்துறை , திருநெல்வேலி    மற்றும் பல தலங்களில்   பரமேஸ்வரனுக்கு  *செல்வர்* என்று  திருப்பெயர்.   
          
🔴 செல்வத்திற்கு  தேவன்  குபேரன்.  தெய்வம் லட்சுமி, கடவுள்  ஐஸ்வர்யேஸ்வரராகிய பரம சிவன்.  
         
 ☸️.   கல்விக்கு தேவன் புதன், 
தெய்வம் சரசுவதி, கடவுள் சிவபெருமானாகிய ஞான  தட்சிணா மூர்த்தி. 
          
💥  வீரத்திற்கு தேவன் வீரபாகு,  
தெய்வம் வீரபத்திரர்,  கடவுள் வீரட்டேஸ்வரர் ஆகிய பரம சிவன்.                                                                                                      

       🔯   காலத்திற்கு தேவன் யமன், 
தெய்வம் ருத்திரன், கடவுள் ருத்திர நாதனாகிய கால காலர் சிவபெருமான். 

   ⚜️ *கோன் என்று பல் கோடி உருத்திரர் போற்றும்* (சம்பந்தர்),                                                                                                                 

🕉️  *உருத்திர  நாதனுக்கே*  உந்தீபற (    திருவாசகம்)    

என்பவை  தெய்வீகத்  திருமுறை வரிகள். 
         
🔴 அழகிற்கு தேவன் மன்மதன், தெய்வம் முருகன், கடவுள் சுந்தரேசர். 
         
☘️ மருந்திற்கு  மருத்துவத்திற்கு தேவன் அசுவினி குமார்கள்,    
 தெய்வம் தன்வந்திரி.  
 கடவுள்  மருந்தீஸ்வரர் வைதீஸ்வரராகிய பரம சிவம்.  
       
     இவ்வாறே பிறவும் அமையும். 
 *வானவர்  தேவர் தெய்வம் கோடிக் கணக்கில் உள்ளன*.  கோடிக் கணக்கில் தோன்றி முடிகின்றன. 

*தோற்றம் முடிவு இல்லாமல் எல்லாவற்றையும் கடந்து உள்ள  கடவுள் ஒன்றே ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் கடவுள் பரம சிவம்  மட்டுமே.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் . 
             
   

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...