Saturday, May 4, 2024

இன்று பிரதோஷம்.. பதவி உயர்வு, வேலை கிடைக்க.. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள்.

இன்று பிரதோஷம்.. பதவி உயர்வு, வேலை கிடைக்க.. சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்யுங்கள்..!!

                  சிவன் பகவானின் அருள்

ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷம் 'ரவி பிரதோஷம்' மற்றும் 'ராகு கால பிரதோஷம்' என்று அழைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ராகு காலத்துடன் சேர்ந்து பிரதோஷம் வருவதால் இப்பெயர்கள் ஏற்பட்டன.

இந்த சிறப்பு வாய்ந்த நாளில் வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், அரசு வேலை பெற விரும்புபவர்கள் சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

சூரிய பகவான் அருள் பெற:

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் அன்று சிவபெருமானுடன் சூரிய பகவானையும் வழிபட்டால் வேலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

தலைமுறை காக்கும் குலதெய்வத்தின் அருள் பெற வேண்டுமா? 


செய்ய வேண்டியவை :

பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்யுங்கள். இதனால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து நல்ல வேலை கிடைக்க வழி செய்வார் என்பது நம்பிக்கை.

பிரதோஷ நேரத்தில் சிவபெருமானின் சன்னதியில் அமர்ந்து, உங்களுக்கு வேண்டிய வேலை கிடைக்க மனதார தியானம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் தவறாமல் வழிபாடு செய்யுங்கள். ஒரே ஒரு இளநீர் அபிஷேகம் செய்தாலும் பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள்,

வீட்டிலேயே சிவலிங்கம் வைத்திருந்தால் அந்த சிவலிங்கத்திற்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடலாம். 

அபிஷேகம் செய்தபின் சிவபெருமானுக்கு தீபமேற்றி சிவபெருமானின் மூல மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். பின் வேலை தொடர்பான உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து மனதார வழிபடுங்கள்.

No comments:

Post a Comment

Followers

ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்.

தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான #திருஓணகாந்தன்தளி[237] வரலாறு மூலவர் : #ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் உற்சவர்...