Saturday, August 31, 2024

பழனி முருகனின் ஆண்டி கோலம் ஆபத்தானதா?

_முருகனின் சுப்பிரமணியர் என்ற பெயருக்கும் பழனி ஆண்டி கோலத்திற்கும் உண்மையான காரணம்_


அதே போல் முருகனுக்கு எத்தவையோ பெயர் இருந்தாலும் சுப்பிரமணியன் என்ற பெயரில் தான் பல இடங்களில் முருகன் காட்சி தருகிறார். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். இந்த சுபரமணியன் என்ற பெயருக்கு அப்படி என்ன சிறப்பு? பல இடங்களிலும் சுப்ரமணியன் என்ற பெயரிலேயே முருகன் காட்சி தர காரணம் என்ன என்பதை பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
முருகனின் திருப்பெயர்கள் :

தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன. கந்தன், குகன், குமரன், கார்த்திகேயன், கடம்பன், கதிர்வேலன், சண்முகன், ஆறுமுகன் என பல பெயர்கள் உள்ளன. இருந்தாலும் முருகப் பெருமான், பெரும்பாலான கோவில்களில் சுப்ரமணியன் என்ற பெயரிலேயே மூலவராக காட்சி தருகிறார். எத்தனையோ பெயர்கள் இருந்தால் எதற்காக முருகன் மூலவராக இருக்கும் கோவில்களில் அவர் சுப்ரமணியன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் ? இதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ளலாம்.

சுப்பிரமணியன் பெயருக்கு அர்த்தம் :

சுப்பிரமணியன் பெயருக்கு அர்த்தம் :
சுப்ரமண்யர் என்ற பெயரில்‘பிரமண்யன்’ என்றால் பிரம்மத்தை உணர்ந்த பரம ஞானத்தைப் பெற்றவன் என்று பொருள். அதில் உள்ள ‘சு’ என்பது சிறப்பிக்கும் ‘அதி உன்னத மான’ என்ற அடைமொழி. அதாவது அதி உன்னதமான பரம ஞானத்தை பெற்றவன் என்பது தான் ‘சுப்ரமண்யன்’ என்பதன் பொருள். ஞானத்தின் உயர் நிலையான பிரம்மண்யத்தின் அதி உயர் நிலையை அடைந்தவன் என்பது இதன் பொருள். அதனால் தான் முருகனை ஞானக் கடவுள் என்கிறோம். அவனை விட ஞானமும்,தேஜஸும் வேறு யாருக்கும் இல்லை என்பதால் தான் அழகென்றால் முருகன் என சொல்லுவது உண்டு.

ஆண்டிக்கோல முருகன் :

ஆண்டிக்கோல முருகன் :
ஞானமே வடிவான முருகப் பெருமான், கைலாயத்தில் தேவலோக ஞானப் பழத்தை பெற முடியவில்லை என்ற கோபத்தில் ஆண்டி கோலம் பூண்டு பழநி மலைக்கு சென்று விட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. ஆனால் அதன் பின் உள்ள மிக முக்கிய ஞானத்தை பெற ஏற்ற கோலம் என்ற உண்மையை உணர்த்தும் கதை ஒன்றும் உள்ளது. எத்தனையோ திருக்கோலங்கள் இருந்தாலும் போகருக்கு, நவபாஷாண சிலையை செய்வதற்காக முருகன் காட்சி கொடுத்தது ஆண்டி கோலத்தில் தான். பழநி முருகன் ஆண்டிக் காலத்துடனேயே காட்சி தருவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் இது தான்.

ஞானப்பழத்திற்கு போட்டி :

ஞானப்பழத்திற்கு போட்டி :
நாரதர் கொண்டு வந்த ஞானப்பழத்தை பெற வேண்டுமானால் ஈசன் படைத்த ஏழு உலகையும் முதலில் சுற்றி வருபவருக்கு தான் என்று கூறியதும், முருகப் பெருமான் தன்னுடைய வாகனமான மயில் மீது ஏறி வேகமாகப் புறப்பட்டார். ஆனால் முருகனின் அண்ணன் விநாயகரோ அந்த ஏழு உலகத்தையும் தன்னில் அடக்கி அருள்பாலிப்பவர்கள் சிவ சக்தி என கூறி, அவர்களை வலம் வந்து ஞானப் பழத்தை பெற்றார். உலகை சுற்றி வந்த முருகன், அண்ணனின் கையில் ஞானப்பழம் இருப்பதை கண்டு அது எப்படி அவர் கையில் சென்றது என தெரிந்து கொண்டார்.

முருகனின் ஆண்டிக்கோல காரணம் :

முருகனின் ஆண்டிக்கோல காரணம் :
பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் பழனிக்கு சென்று ஆண்டி கோலத்தில் அமர்ந்தார் என்பத உண்மை கிடையாது. ‘உமா_மகேஸ்வரனே உலகம் அனைத்தும்’என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனதே என ஒரு கணம் எண்ணி பார்த்தார். அது எப்படி அண்ணன் கணபதிக்கு மட்டும் இது தெரிந்தது என்பதை ஆராய்ந்த கந்தனுக்கு, பிள்ளையார் பிரணவ வடிவம், அவர் ஞான ஸ்வரூபன் அந்த ஞானம் அவரின் கடும் தவத்தினால் கிடைத்தது. அதனால் தான் இந்த ஏழு உலகமும் சிவ பார்வதியின் வடிவம் என்பதை உணர்ந்தார். அண்ணனைப் போல் தானும் அந்த ஞானம் பெற, அதாவது பிரம்மண்யனான தாம் சுப்ரமண்யனாக, பாலசுப்ரமண்யனாக விரும்பினார். அதன் விளைவாக தான் தவக் கோலம் ஏற்று ஆண்டியாக பழனி மலையில் ஆண்டிக்கோலம் ஏற்றார்.

ஞான வடிவமான முருகன் :

ஞான வடிவமான முருகன் :
அண்ணன் கணபதியைப் போல தானும் தவமியற்றி ஞானத்தைப் பெற ஞானஸ்கந்தனாக பழநியில் காட்சியளிக்கிறார். நெற்றிக் கண்ணில் உதித்த முத்துக்குமரன், ஞானக் கடலாக ஞானத்தை பெறவும், அதை காக்கவும் எடுத்துக் கொண்ட கோலம் தான் பழனி ஆண்டிக்கோலம். அவர் பழம் கிடைக்க வில்லை என்ற ஆதங்கத்தில் ஆண்டியாகவில்லை அந்த ஞானத்தைப் பெற்று மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகவும், ஞானத்தை வழங்கவும் ஏற்ற கோலம் ஆகும். தன்னை வணங்கக் கூடியவர்களுக்கும், அந்த ஞானத்தை வழங்க கூடியவர் முருகன். வெறும் அசுரர்களை அழிக்க மட்டும் உருவான உருவமல்ல. அவர் தர்மத்தை காக்கவும், ஞானத்தை கொடுக்கவும் உருவானவர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...