Tuesday, October 8, 2024

திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவள்ளூர்...



*பெயர்:* திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோவில்
*ஊர்:* திருநின்றவூர்

*மாவட்டம்:* திருவள்ளூர்

*மூலவர்:* பக்தவத்சல பெருமாள். பத்தராவிப்பெருமாள்

*தாயார்:* என்னைப் பெற்ற தாயார் (தெலுங்கில் நன்னு கன்ன தல்லி)

*தீர்த்தம்:* வருண புஷ்கரணி

*பாடல் வகை:* நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

*மங்களாசாசனம் செய்தவர்கள்:* திருமங்கையாழ்வார்
*விமானம்:* உத்பல விமானம்

*கல்வெட்டுகள்:* உண்டு

*தலவரலாறு:*
சமுத்திர ராஜனுடன் கோபம் கொண்ட திருமகள் தாயார் வந்து நின்ற இத்தலத்தில், சமுத்திர ராஜன் வந்து தாயாரை திரும்பி வர வேண்டியபோது, ’என்னைப் பெற்ற தாயே’ என்று பலவாறு சமாதானம் செய்ய முயன்றார். இக்காரணத்தால் தாயார் திருநாமம் ’என்னைப் பெற்ற தாயார்’ என்றானது. எவ்வாறு வேண்டியும் தாயார் சமாதானம் அடையாததால், சமுத்திர ராஜன் மீண்டு சென்று பெருமாளிடம் உதவி வேண்ட, அவரும் பக்தனுக்காக இங்கு வந்து திருமகளிடம் சமாதானம் கூறி வைகுந்தம் வர சம்மதிக்க வைத்த திருத்தலம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...