Sunday, March 23, 2025

திருமணத்தடை குழந்தை பாக்கியம் புண்ணியகோடியப்பர் திருக்கோயில் திருவிடைவாசல்.

அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல் – 613 702,  குடவாசல் தாலுக்கா திருவாரூர் மாவட்டம். 
*இறைவன் – புண்ணியகோடி நாதர், விடைவாயப்பர், 

*இறைவி – அபிராமி உமையம்மை. 

*தலவிருட்சம்: கஸ்தூரி அரளி              

*தீர்த்தம்: ஸ்ரீ தீர்த்தம்                 

*இது பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.   

*தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று இருந்த நிலையில், திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடிய பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில்  சேர்க்கப்பட்டு 275வது தலமானது.    

*(விழுப்புரம் அருகில் உள்ள  "கிளியனூர்" 276 வது பாடல் பெற்ற தலமாகும்)
 
*திருவிடைவாசல் கோயில் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.             

*சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் “விடை’ உள்ளது. சிவத்தலமான இதற்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. 

*இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு. 

*திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வேண்டிகொள்கிறார்கள்.        

*இத்தல இறைவி அபிராமி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். 

*சித்ரா பவுர்ணமி இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  

*இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். 

*இத்தலத்தில் சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். 

*கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் முருகர், பாலசாஸ்தா, நவகிரகங்கள், பைரவர், அய்யனார், சூரிய சந்திரர்கள் ஆகியோர்  உள்ளனர்.       

*திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டு இருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் “விடைவாயே” என குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.  

*கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது. 

*இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. 

*கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் நாச்சியார்குப்பம் தாண்டியபிறகு  இந்த ஊர் வரும். கும்பகோணம், திருவாரூர்  பகுதிகளிலிருந்து  பேருந்து வசதிகள் உள்ளன 

*கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் வழிகாட்டி உள்ளது. அவ்வழியில் 2 கிமீ சென்றால்  இத்தலத்தை அடையலாம்.                            

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்.

ஸ்ரீபதஞ்சலி ஸ்ரீவியாக்ரபாதர் அதிஷ்டானம். திருப்பட்டூர் வியாக்ரபாதர் பிருந்தாவனம்.  காசிக்கு நிகரான திருப்பட்டூர்! ஸ்ரீஆதிசேஷனின்...