Friday, April 11, 2025

பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திும் திருநாளே "பங்குனி உத்திரம்..



பல தெய்வ திருமணங்கள் மற்றும் அவதாரங்கள் நடைபெற்ற பல சிறப்புகள் வாய்ந்த
#பங்குனி_உத்திரம் வரலாறு :
மாதத்தில் பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே "பங்குனி உத்திரம்
தமிழ் மாதத்தில் பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே "பங்குனி உத்திரம்". முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரம் பார்வதி திருக்கல்யாணம், வள்ளிப்பிராட்டியின் அவதாரம், சுவாமி ஐயப்பனின் அவதாரம் எனப் பல்வேறு சிறப்புகளை உடையது இந்த பங்குனி உத்திர திருநாள். இந்த நாளில்தான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார் என்று புராணங்கள் கூறுக்கின்றன. இத்தகைய சிறப்புகளை உடைய பங்குனி உத்திர திருநாளுக்கும் முருகப் பெருமானுக்கும் என்ன சம்பந்தம் என்பதை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.

இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.

#முருகப்பெருமான் அசுரர்களின் கொட்டத்தை அடக்குதல்:

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப் பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி சொல்ல தொடங்கினார். இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்றார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். தலைவனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாட, முருகனின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிர வுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாத தாரகாசுரன், சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலை களை காட்ட ஆரம்பித் தான். முருகப் பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத் தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.

#குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த பங்குனிஉத்திரம்:

முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாட்டிற்கும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா திருக்கோவிலை வழிபடும் நாளாக இந்தப் பங்குனி உத்திர திருநாள் அமைந்திருக்கிறது. பங்குனி உத்திர நாள் அன்று மக்கள் தங்கள் குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா கோவில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்கள் குல தெய்வம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அன்று ஒன்று கூடி பொங்கல் வைத்தும், படையல் இட்டும், தேங்காய் உடைத்தும், மொட்டை அடித்தும், காத்து குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் குலதெய்வங்களை பங்குனி உத்திர விழா வினை மிகவும் சிறப்பாக வழிபடுகிறார்கள்.

#பழனியில்_சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரம் திருவிழா:

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக விளங்கும் பழனியில் திருவாவினன்குடியில் அமைந்து இருக்கும் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் தேரோட்டத்துடன் கூடிய மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தினர் ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் புனித நீரை கொண்டு வருவார்கள். பழனியில் போகரால் உருவாக்கப்பட்ட நவபாசாண முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.. பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பம் படாமல் காப்பதற்கு . மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் முருகனை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழாவாக பங்குனி உத்திரம் அமைந்திருக்கிறது.

#ஸ்ரீவில்லிபுத்தூர் பங்குனி உத்திரம் திருவிழா:

திருவரங்கத்து நம்பெருமாளே, பங்குனி உத்திர நாளன்று திருவில்லிபுத்தூர் எழுந்தருளிக் கோதையை கைப்பிடித்தார் என்று கூறப்படுவது உண்டு. பெருமாளின் மனதையே ஆண்டதால் கோதை அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்கப்பட்டாள். இந்த வரலாற்று நிகழ்வை மையமாகக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.

#சிவசைலம் பங்குனி திருவிழா :

ஆழ்வார்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி, கடனா நதிக்கரையில் அமையப்பெற்றுள்ள ஸ்தலம் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ சிவசைலப்பர் திருக்கோவில். இந்தத் திருக்கோவில் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளதால் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்தச் சிவசைலம் திருக்கோவிலில் பங்குனி திருவிழா வருடந்தோறும் கொடியேற்றத்துடன் துவங்கி, அன்று முதல் பன்னிரண்டு நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

#சோமசுந்தரர்_மீனாட்சி கல்யாணகோலம்:

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். பங்குனி உத்திர நாளன்று சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை ஆபரணங்களால் அலங்கரித்த மணவறையில் மணமக்களாக அமர்த்தி வேதங்கள் ஓத , வாத்தியங்கள் முழங்க, ஸ்லோகங்கள் வாசிக்க ,ஹோமம் வளர்த்து , தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைபோகம் மிகவும் கோலாகலமாக பங்குனி உத்திரம் அன்று நடைபெறும்.

பங்குனிஉத்திரம் திருமண திருவிழா ஆன்மா பதியாகிய சிவத்துடன் பசு இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக் காட்டுவதாகும். இந்த சிறப்பான தினத்தன்று அம்மையப்பனுக்கு திருமணம் நடந்த நிகழ்வு குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகலில் உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் என உணவு உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இந்த வைபவத்தை கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.

#பங்குனிஉத்திரம் விசேஷ சிறப்புகள்:

பங்குனி உத்திர நாளன்று தெய்வத் திருமணங்கள் நடந்திருப்பதால் தெய்வீக மாதம் என்று அழைக்கப்படுகின்றது. பங்குனி உத்திரத்தில் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டு நாளாகும். வள்ளி அவதரித்த தினமாக மற்றும் பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மதுரை மாநகரில் மீனாட்சிதேவி - சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடைபெறுகிறது.. தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாளாகவும் திகழ்கிறது. இராமபிரான் சீதாதேவியை கைப்பிடித்த நன்னாள் மற்றும் லட்சுமணன்- ஊர்மிளை, பரதன்- மாண்டவி,, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரங்கநாதர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திர நாள் ஆகும்.

சுவாமிமலையில் முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த நாள் பங்குனி உத்திர நாள் ஆகும். பங்குனி உத்திரத்தில்தான் கேரளாவில் பந்தளராஜன் மகனாக ஐயப்பன் அவதரித்தார்.

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் "பல்குநன்" என்று பெயர் பெற்ற தினமாக மற்றும் பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினமாகவும் பங்குனி உத்திரம் திகழ்கிறது.

பங்குனி உத்திரத்தில்தான் காரைக்கால் அம்மையார், முக்தி பெற்ற நாளாகும்.

மிகவும் சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திரம் திருமண விரதம் மற்றும் கல்யாண விரதம் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த தினத்தில் சிவபெருமானையும், கந்தனின் திருமணக் கோலத்தையும் வணங்கி வழிபட திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்ற நம்பிக்கையோடு மக்கள் வழிபடுகின்றனர்.

தெய்வீக திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றதால் அனைத்து கோவில்களிலும் பங்குனிஉத்திரம் அன்று மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது ஆண்டாள் ஸ்ரீரங்கநாதரை கைபிடித்து மணந்த நாளும் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வைபவமாக கொண்டாடப்படுகிறது. காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் ஸ்ரீரங்கநாதர் ஆண்டாள் திருமணத்தை வைணவர்கள் தாயார் திருமண உத்சவங்களாகவும் – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகவும் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரத்தில் சந்திரன் உத்திர நட்சத்திரத்தின் ராசியான கன்னிக்கு செல்கிறார். அதனால் மனதுக்கு உகந்த திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகமாக கருதப்பட்டு வருகிறது.

#பங்குனி_உத்திரம் அன்று விரதம் இருக்கும் முறை:

இந்த பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் அன்று விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருப்பது நல்ல பலனைத் தரும். அன்றைய தினம் மனதில் பக்தியோடு முருகப் பெருமானை நினைத்து அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி வணங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும்திருமுருகாற்றுப்படை,, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற நூல்களை படிப்பது சிறப்பானதாகும். ‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க சொல்ல வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருப்பது சிறப்பாகும். வயதானவர்கள் உடல் நலம் பாதிப்புள்ளவர்கள் அவர்களுடைய உடல்நலத்திற்கு ஏற்றவாறு பால், பழம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம்.

நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் முருகனுடைய திருக்கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விரதத்தை முடிக்க வேண்டும். அருகில் முருகன் கோவில் இல்லாதவர்கள் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்யலாம் . கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே தெய்வத்தை வணங்கி தீபம் ஏற்றி பிரசாதம் வைத்து வழிபடுவதும் சிறப்பாகும்.

இந்த விரதம் மேற்கொண்டால் விரைவில் தோஷங்கள் விலகி விரைவில் திருமண யோகம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்.

மேலும் 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவார்கள் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் சிறப்பாககொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் வேண்டுதல் நிறைவேற்ற பக்தர்கள் காவடி எடுத்தும் பாதயாத்திரையாக நடத்தும் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் மற்றும் திருமண தடைகள், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

பங்குனி மாத உத்திர திருநாளில் இறைவனை பக்தியோடு வழிபட்டால் வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சி நிலைக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

முனீஸ்வரர் இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாவார்

ஏழு முனீஸ்வரர் முனீசுவரர் என்பவர் இந்து சமய சிறு தெய்வங்களில் ஒருவராவார். இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாவார். வீரமும், ஆவ...