காரைக்கால் அடுத்த நெடுங்காடு ஸ்ரீ நெடுந்துயார் தீர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் திருக்கோயில் ..
தஞ்சை பெரிய கோவில் போன்ற அமைப்புடைய சிகப்பு கற்களால் ஆன ராஜகோபுரம் விமானம் ஆகியவை அமைந்துள்ளது.
இரண்டாம் இராஜராஜர், மூன்றாம் குலோத்துங்கன் #சோழர் கால #கல்வெட்டுகள் காணப்படுகின்றன, அவற்றில் நுந்தா விளக்கு எரிக்க கொடுக்கப்பட்ட தானம் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பால் சிதைந்துள்ளது..
இக்கோயில் தொல்பொருள் நினைவுச் சின்னமாக ( ASI ) அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கோயிலில் அகழ்வாராய்ச்சி செய்யும் பொழுது உலோக செப்பு திருமேனிகள் கிடைத்துள்ளன.
அழகும் ரம்யமும் நிறைந்த கோயில், வாய்ப்புள்ள அண்பர்கள் அவசியம் சென்று தரிசனம் செய்யவும் ..
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment