Saturday, October 8, 2022

#சிவபெருமான் சனி பகவானுக்கு இத்தலத்தில் திருமணமாகும் அருளையும் வழங்கினார்.

அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.*
விளங்குளம்

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே பீடமும், நந்தி பகவானின் தனி மண்டபமும் உள்ளன.

#சிவபெருமான் சனி பகவானுக்கு இத்தலத்தில் திருமணமாகும் அருளையும் வழங்கினார்.

 மந்தா தேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளை இங்கு மணந்த சனிபகவான் இங்கு 

ஆதி பிருஹத்சனீஸ்வரர்

 என்ற பெயருடன் திருமணக் கோலத்தில் தன் துணைவியருடன் தனி கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டது. 

எனவே சனி பகவான் அந்த காகத்தினையே தனது வாகனமாக இங்கு ஏற்றுக் கொண்டார்.

கால் ஊனத்துடன் நிவாரணம் தேடி மனித உருவத்தில் சுரைக் குடுவையில் பிச்சை ஏந்தி பெற்ற அந்த தானியங்களைச் சமைத்து அன்னதானமாக ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் அளித்து வந்தார் சனிபகவான்.

 ஊர் ஊராக சுற்றி வந்த சனிபகவான் விளாமரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பாதையை கடக்கும் போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே 

சித்திரை திங்கள், வளர்பிறை திருதியையும், நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த புனித நன்னாளில் பல கோடி யுகங்களாக மறைந்திருந்த

 ‘பூச ஞான வாவி’ என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனிபகவானை மேலே எழுப்பி கரை சேர்த்தது.

 இதனால் சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தியானது.

விளாவேர் தடுக்கி சனி பகவான் விழுந்ததால் சுரந்த ஞான வாவி தீர்த்தம் குளமாக உருவானது. 

அதனால் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி விளங்குளம் என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

சனி பகவானின் அருள் :

அட்சய திரிதியை நாளில் அட்சயபுரீஸ்வரரால் ஊனம் நிவர்த்தி பெற்ற சனி பகவான் கிழக்கு பிரகாரத்தின் 

வடதிசையில் தனி ஆலயத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகள் செயலற்று போகவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இங்கு சனி பகவான் அருள் பாலிக்கிறார்.

சனி தோஷம் உள்ளவர்களும், சனி கிரக பாதிப்பு உள்ளவர்களும், சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்துவிட்டு பிரகாரத்தில் காக்கையை அழைத்து உணவு படைக்கின்றனர்.

 காக்கைகள் அந்த உணவை எடுத்து புசித்தால் அவர் களது சனி தோஷம் அறவே விலகிவிட்டது என்று பொருளாம். 

ஒரு வேளை அந்த உணவை உண்ண தயங்கி பறந்து போனால் அவர்களது தோஷம் விலகவில்லை என்று அர்த்தமாம். 

எனவே அவர்கள் மறுபடியும் சனி பகவானை தேடி வந்து பிரார்த்தனை செய்து உரிய பயனைப் பெறுவது வழக்கமாக உள்ளது.

இறைவன் - இறைவி :

 வசந்த  மண்டபத்தின் வலது புறம் அன்னை 

அபிவிருத்தி நாயகியின்
 சன்னிதி உள்ளது. 
இரட்டை விநாயகரும், வலது புறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் ஆகியோர் திருமேனிகளும் உள்ளன.

 அடுத்துள்ள கருவறையில் இறைவன் அட்சயபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

நெய் தீபம் மட்டுமே ஏற்றி தீபாராதனை செய்கின்றனர்.

திருச்சுற்றில் தென் கிழக்கில் வன்னி மரம் 

கி.பி. 13-ம் நூற்றாண்டு  ஆலயம் 
சுமார் 700 ஆண்டுகள் பழமை 
முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் வழிபட்ட தகவல் கல்வெட்டு 

 தல விருட்சம் விளாமரம். 
ஆலயத்தின் வட திசையில் விருட்சம் உள்ளது.

பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது.

ஆலயத்தின் எதிரே அழகிய சிறிய ஆலயத்தில்
 விஜய விநாயகர்
 மேற்கு திசை நோக்கி அமர்ந்து தன் தந்தையை நோக்கியபடி உள்ளது 

சித்திரை 
அட்சய திரிதியை அன்று சனி பகவான் பலவித ஸ்தூல சூட்டும் வடிவங்களில் சிவபெருமானை நாள் முழுவதும் வழிபடுவதாக ஐதீகம்.

அட்சய திரிதியை அன்று இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன

அட்சய திரிதியை நாளில் இறைவனுக்கு சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபடுதலும், சனி பகவானுக்கு புணுகு கலந்த சந்தனக் காப்பிட்டு வழிபடுதலும் மிகுந்த பலனைத் தரும்.

சனி பகவான் உடன் இருந்து வழிபடும் நாளான அட்சய திரிதியை நாளில் நாமும் அட்சய புரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க செல்வம் பெருகும். வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்பது நிச்சயம்.

அட்சய திரிதியை அன்று இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

சனி பகவானின் ஊனத்தை தீர்த்த இறைவன் அட்சய புரீஸ்வரர் தன்னை வணங்குவோரின் உடன் ஊனத்தையும், மன ஊனத்தையும் நீக்குவதுடன் ஏழ்மை என்னும் ஊனத்தை நீக்கி அவர்கள் வளம் பெற்று வாழ அருள் புரியக் கூடியவர் என்பது நிஜமே!

தஞ்சை
 பேராவூரணியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது  🙏

நற்பவி 

                 🙏  🌹

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...