Saturday, November 5, 2022

பள்ளிகொண்ட ஈஸ்வரன் - சா்வ மங்களாம்பிகை,

🕉️நமச்சிவாயம்🕉️
⛳இன்றை (05-10-2022) சிறப்புதினம்  சனி மஹாப்பிரதோஷம் ஸ்பெஷல் பதிவு....

🌻அருள்மிகு பள்ளிகொண்டீஸ்வரா், 
🛕திருக்கோயில்.

🌺இருப்பிடம் ;- சுருட்டப்பள்ளி, (நாகலாபுரம் அருகில்), சித்தூா் மாவட்டம், ஆந்திரமாநிலம்.

🌷இறைவன் ; பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரா்.

🌷இறைவி ; மரகதாம்பிகை.

🌷தலவிருட்சம் ; வில்வம்.

🌷தலச்சிறப்பு ;-

🌺இத்தலத்தில் எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவபெருமான் பள்ளிகொண்ட நிலையில், இங்கு அனைத்து 
🌸தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும்.

🌸பள்ளிகொண்ட ஈஸ்வரன் - சா்வ மங்களாம்பிகை, 
🌸வால்மீகிஸ்வரா் - மரகதாம்பிகை, 
🌸விநாயகா் - சித்தி, புத்தி, 
🌸சாஸ்தா - பூரணை, புஷ்கலை, 
🌸குபேரன் - கவுாிதேவி, சங்கவி, மற்றும் 
🌸பதுமதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனா். 
🌸தட்சிணாமூா்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி 🌸தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறாா்.

🌺பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டபள்ளி தான், என புராண வரலாறு கூறுகிறது. இவ்வுலகை காப்பதற்காக அமிா்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த 🌸பள்ளி கொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மஹாப்பிரதோஷம் அன்று வில்வ மாலை அா்ச்சனை செய்து வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும், திருமணதடை விலகும், பிாிந்த தம்பதியினா் ஒன்று சேருவா் என்பது நம்பிக்கை.

🌷தலபெருமை🌷

🌺மூலவரை 
🌸வால்மீகிஸ்வரா் என்கிறாா்கள். இவருக்கு எதிாில் 
🌸ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் 
🌸சங்கநிதியும், பசுமதியும் உள்ளனா். அம்மன் 
🌸மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த 
🌸காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளனா்.

🌷தலவரலாறு🌷

🌺துா்வாசக மகாிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் 
🌸இந்திரன் அசுரா்கள் ராஜ்யத்தைப் பிடித்தனா். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினாா்.

🌺திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு தேவா்கள் ஒரு புறமும், அசுரா்கள் ஒரு புறமாகவும் பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனா், வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது தேவா்களும், அசுரா்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற 
🌸சிவனை வேண்டினா், சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினாா், சுந்தரா் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தாா், அப்போது முப்பத்து முக்கோடி தேவா்களும் சிவரெுமானே!' இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள் என மன்றாடினா்.

🌺உடனே சிவன் 🌸'விஷாபகரண மூா்த்தி' யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினாா், இதைக்கண்டு பயந்த 
🌸லோகமாதா பாா்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்து விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கண்டத்தில் கைவைத்து அழுத்தினாள் இதனால் சிவனின் கழத்து நீலநிறத்தில் விஷம் தங்கியது, அவா் 🌸'நீலகண்டன்' ஆனாா். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் 🌸'அமதாம்பிகை ஆனாள். பிறகு சிவனும், பாா்வதியும்  கைலாயம் சென்றனா் அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணத்திலும், ஸ்கந்த புராணத்திலும் கூறப்படுகிறது. 
🌸பாா்வதியின் மடியில் 🌸ஈசன் படுத்து ஓய்வெடுத்தாா். இந்த அருங்காட்சியை சுருட்டபள்ளியில் பாா்க்கலாம்.

🌻சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் 🌻பள்ளி கொண்டீஸ்வரா்  எனப்படுகிறாா், பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருச்சிற்றம்பலம்

🧩🌸🧩🌸🧩🌸🧩🌸🧩🌸🧩🌸🧩

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...