Tuesday, February 7, 2023

சுசீந்திரம் அப்போது #ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. இறைவன் அவர்களுக்கு சிவன் வடிவில் காட்சி தந்தார்.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
                  தினம் ஒரு திவ்யதேசம்
 60 -#திருவண்பரிசாரம்(#திருப்பதிசாரம்)
🍂 நம்மாழ்வார் அவர்களின் அவதாரத் தலம் இந்த திருப்பதிசாரம். சப்தரிஷியான ஏழு முனிவர்களுக்குக் காட்சி தந்த பெருமாள் அருள்புரியும் மகிமை வாய்ந்த திவ்யதேசம்.

#அருள்மிகுதிருவாழ்மார்பன்திருக்கோவில் :-

⭕திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)

⭕மூலவர்: திருக்குறளப்பன், திருவாழ்மார்பன்

⭕தாயார்: கமலவல்லி நாச்சியார் 

⭕உற்சவர்: திருவாழ்மார்பன் 

⭕கோலம்: வீற்றிருந்த திருக்கோலம் 

⭕திசை: கிழக்கு 

🔥விமானம்: இந்திர கல்யாண விமானம் 

⭕தீர்த்தம்: லக்ஷ்மீ தீர்த்தம் 

⭕மங்களாசாசனம்: நம்மாழ்வார் 

⭕ஊர்: திருப்பதிசாரம்

#தலவரலாறு :-

🍒 பரமபத நாதனாம் இறைவன் நாராயணன் மீது பக்தி கொண்ட சப்தரிஷிகள் என்று போற்றப்படும், ஏழு முனிவர்களும் இறைவனைக் காண வேண்டி சுசீந்திரம் என்ற இடத்தில் தவமியற்றினர்.

🍒சுசீந்திரம் அப்போது #ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. இறைவன் அவர்களுக்கு சிவன் வடிவில் காட்சி தந்தார். முனிவர்கள் தங்களது பெருமாளின் திருவுருத்தைக் காண வேண்டும் என்று கேட்க பெருமாள் "#சோம_தீர்த்தக்கட்டம்" என்ற இடத்தில் தவமியற்றினால் தான் அவ்வுருவில் காட்சி தருவதாகச் சொன்னார்.

🍒அதைக் கேட்டதும் சப்தரிஷிகள், சோம தீர்த்தக் கரையான இத்தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து நீண்ட நாட்களாக தவமியற்றினர். 

🍒அவர்களது தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் திருமாலின் வடிவில் அவர்களுக்கு காட்சி தந்து அருளினார். அந்த உருவத்திலேயே இந்த திருத்தலத்தில் தங்கி அருள்புரிய வேண்டும் என்று முனிவர்கள் கேட்டுக் கொண்டார்கள். 

🍑அவர்கள் கூறியதைக் கேட்ட பெருமாள் முனிவர்களது வேண்டுகோளை நிறைவேற்ற ""#திருமால்_சப்தரிஷிகள்சூழ___பிரசன்னமூர்த்தியாக_அமர்ந்து_அருள்புரிகிறார்".

அக்காட்சியையே இன்றளவில் நாம் தரிசிப்பதாகத் தலவரலாறு கூறுகிறது.

🌺 நம்மாழ்வார் பிறந்ததலம் :-

🍒திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உண்டானது. குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.

🍒பல ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள "திருக்குறுங்குடி" சென்று, அதன் வழியிலே ஓடும் நதியில் நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளாகிய நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர்.

🍒பெருமாளும் அவர்களது வேண்டுகோளுக்கு மனமிரங்கி, உங்கள் எண்ணம் நிறைவேறும். ""யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காத கீர்த்திகளைப் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவோம். பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்) #திருநகரியிலுள்ள புளியமரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்"" என்று கூறி மறைந்தார்.

🍒சில நாட்களில் உதயநங்கை கருவுற்றாள். தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவைண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள்.

🍒வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார். குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார்திருநகரியிலுள்ள புளிய மரத்துப் பொற் தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர்.

🍒குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளிய மரப் பொந்தினுள் ஏறித் தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளியிருக்கும் #ஆதிநாதரைத் தியானித்து நின்றது.

🍒இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்தில் மூழ்கியிருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் திருஅவதாரத் தலமாகவும், ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற திருத்தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.

#மூலவர்தரிசனம் :-

🍒மூலவரின் ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் "#கடு_சர்க்கரையோகம்" என்ற கலவையினால் செய்யப்பட்டது. கல்லும், சுண்ணாம்பும் செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு "கடுசர்க்கரை யோகம்" என்பது பெயர். இதனால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. 

🎋மூலவரின் திருநாமம் திருவாழ்மார்பன். இங்குள்ள தாயாருக்குத் தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். 

🌺பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன், தங்கமாலை ஒன்றை அணிந்துள்ளார்.

🌹இந்த மூலவர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

#திருவண்பரிசாரம் :-

🍒திருமார்பில் திருமகள் தாயார் காணப்படுவதால் இத்தல இறைவனுக்கு திருவாழ்மார்பன் என்பது திருநாமம். திருமகளுக்கு தன் நெஞ்சத்தையே பரிசாகத் தந்த இறைவன் காட்சி தரும் தலமாதலால் இத்தலத்திற்கு "திருவண்பரிசாரம்" என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

%#மங்களாசாசனம் :-

இத்தலத்தை நம்மாழ்வார் 1 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

"வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என் 
திருவாழ் மார்வற்கு என்திறம்
சொல்லார் செய்வதென் உருவார் சக்கரம்
சங்கு சுமந்திங்கும் மோடு
ஒருபாடுழல்வான் ஓரடியாணுமுள னென்றே!!!"

- நம்மாழ்வார். 

#சிறப்புகள் :-

🌹திருமகள் தனி சன்னதி இல்லாமல் திருமாலின் திருமார்பில் வாழும் திருத்தலம்.

🌹திருமகள் பிராட்டி கமலவல்லி நாச்சியார் என்னும் திருநாமத்தில் இறைவனது திருமார்பில் காட்சி தரும் திவ்யதேசம்.

🌹நம்மாழ்வார் 1 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌹சுசீந்திரத்தில் தவமிருந்த முனிவர்களுக்காக, பகவான் திருவாழ்மார்பனாக காட்சி தந்த திருத்தலம் !

🌹விபீஷணனுக்காக ஸ்வாமி ராமனாக காட்சி கொடுத்த தலம்.

🌹அகஸ்தியர் அழகாக ராமாயணம் சொன்ன தலம்..

🌹ஸ்வாமி நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையின் பிறந்த ஊர் இது.

🌹குலசேகர ஆழ்வார் சேவித்து கைங்கரியம் செய்த திருத்தலம்.

வழித்தடம் :-

நாகர்கோவில் - திருநெல்வேலி பேருந்து மார்க்கத்தில் சுமார் 4 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. திருப்பதிசாரம் என்றால் மட்டுமே இங்குள்ளோருக்குத் தெரிகிறது.

அருள்மிகு திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...