Monday, March 20, 2023

**********************************திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி சொல்லும் உண்மைக் கதை இதுதான்...************************************

************************************
திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி சொல்லும் உண்மைக் கதை இதுதான்...
************************************
கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங் கிப் போன ஒரு பெரியவர், கவட்டு கட்டை களின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார். 

அவர் அதுபோல் அடிக்கடி கிரிவலம் வரு வது உண்டு. ஆனால் இந்த முறை வழக்க மான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனு ம் கலக்கத்துடனும் அந்தமாற்று திறனாளி மலையை சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது. பல முறை கிரிவ லம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். ஏன்?

கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத் திற்கு பாரமாக இருந்து வருவதாக அவரு க்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை. 

அவர்களுக்கு சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்கு புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களை விட்டுவிலகி யாரிடமும் சொல் லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்த பெரியவர் முடிவெடுத்தார். அதனால் கடைசி முறையாகதிருவண்ணாமலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரி யவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டி ருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர் ப்பட்டான்..

பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையு டன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல் லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறி கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இரு ந்த கோல்கள் இரண்டையும் வெடுக் கெனப் பிடுங்கி தூர எறிந்துவிட்டு, அவன் பாட்டுக்கு சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில் லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டை கட்டையை ப் பிடுங்கி தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதா பிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத் துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து  நின்றார்.

ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய், கவட்டு கட்டைகளின் உதவியின்றி ஜம்மெ ன்று நேரா ய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்ல வில்லை.. இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடம்  சொல்லியிருக்கிறார் பகவான். அங்கு இருக்கும் இந்த விரூபாட் ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. 

அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லா ண்டுகள் இதே திருவ ண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார் கள். அருணாசல மலையைச் சுற்றி வருவ தால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மை கதையில் பகவா ன் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக் குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை தன் வாயால் சொல்லவே இல்லை. ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போ து அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமி ல்லாத பெரியவரின் ஊன்று கோலை பிடுங்கி எறிந்து குறும்பு செய்த து யார்? ஓர் இளைஞன். ஆமாம். நம்பகவா ன் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்.

எழுதும் போதே மெய் சிலிர்க்கிறது. கால்க ள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெ ல்லாம் சொல்லி கொண் டதும் இல்லை. தட்சிணாமூர்த்தியின் அம் சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என் று என்றைக்காவது சொல்லியிருக்கிறார் களா என்ன? நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள். உங் களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான் இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்..

ஓம் சிவாய நம. சர்வம் சிவமயம்..
அகிலம் எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்..

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...