திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
சிவஸ்தலம் பெயர்:-திருத்திணை நகர் (தற்போது தீர்த்தனகிரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்:-சிவக்கொழுந்தீஸ்வரர்.
இறைவி பெயர்:-ஒப்பிலாநாயகி,நீலாயதாஷி.
தல விருட்சம்:-கொன்றை.
தீர்த்தம்:-ஜாம்புவடாகம்.
🍁தேவாரப் பாடல்கள்🍁
"சுந்தரர்"
நீறு தாங்கிய திருநுத
🍁எப்படிப் போவது🍁
கடலூர் - சிதம்பரம் பிரதான சாலையில், கடலூருக்கு சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் தாண்டி மேட்டுப்பாளையம் என்ற கிராமம் வரும். அங்கிருந்து தீர்த்தனகிரிக்குச் செல்லும் சாலை பிரிகிறது. பிரியும் சாலையில் சுமார் 4 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம்.
🍁ஆலய முகவரி🍁
அருள்மிகு
சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்
தீர்த்தனகிரி அஞ்சல்
கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608801.
🍁திருவிழா🍁
வைகாசியில் 13 நாள் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம்,
ஆருத்ராதரிசனம்.
🍁தல சிறப்பு🍁
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த சிவன் மீது
பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி சுவாமி மீது
விழுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 218 வது
தேவாரத்தலம் ஆகும்.
🍁கோயில் அமைப்பு🍁
இவ்வாலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. கோபுர வாயில் வழி உள் நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் இந்த பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன மன்னன் ஆகியோரின் சந்நிதிகளும், தலமரமாகிய கொன்றையும், பைரவர், சூரியன் திருமேனிகளும் உள்ளன. பிரகார வலம் முடித்து, தெற்கிலுள்ள பக்கவாயில் வழியாக உள்ளே சென்றால் நேரே நடராச சபை உள்ளது. நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும், சிறிய மூர்த்தங்கள் உள்ளன. திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது. நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. உள் மண்டபத்தில் இடதுபுறம் நோக்கினால் மூலவர் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி விழுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மா, விஷ்ணு நின்று இறைவனை தரிசிக்கும் கோலத்தில் காணப்படுகின்றனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.
🍁பிரார்த்தனை🍁
விவசாயம் செழிக்கவும், நாட்டியத்தில் சிறக்கவும் இங்கு அதிகளவில்
வேண்டிக்கொள்கிறார்கள்.
🍁நேர்த்திக்கடன்🍁
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
🍁தலபெருமை🍁
இசைக்கும் திருமால், பிரம்மா:-
இத்தலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ
கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது
ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதிய படியும், அருகில் பிரம்மா மத்தளம்
வாசித்தபடியும் இருக்கிறார்.
திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை
காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது.
நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து
வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது
நம்பிக்கை. விஷ்ணு துர்க்கை கோஷ்டத்தில் இல்லாமல் தனிச்சன்னதியில்
இருக்கிறாள்.
தெட்சிணாமூர்த்தி சிறப்பு:-
இத்தலத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி இரண்டு
கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் வித்தியாசமாக காட்சி
தருகிறார். இவரது காலுக்கு கீழே முயலகனும் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும்
இருக்கின்றனர். விவசாய தம்பதியர்கள் உணவு படைத்தபோது, சிவன் தரையில்
இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டாராம். இதன் அடிப்படையில்
தெட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர். இவரிடம்
வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம்
செழிக்கும் என்பது நம்பிக்கை.
சிவன் நீர் இறைத்த கலம்:-
இங்கு சிவன், சுயம்புலிங்கமாக சதுரவடிவ
பீடத்துடன் காட்சி தருகிறார். சிவன் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர்
மற்றும் நீர் இறைத்த கலம் தற்போதும் இருக்கிறது. அம்பாள் ஒப்பிலாநாயகி
தனிச்சன்னதியில் இருக்கிறார். இவளை "கருந்தடங்கன்னி"
"நீலதாம்பிகை'' என்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள். சுந்தரர் அம்பாளைக்குறித்தும் பதிகம்
பாடியிருக்கிறார்.
முன்பு சிவனுக்கு தினமும் திணைப்பயிரை நைவேத்யமாக படைக்கும் வழக்கம்
இருந்தது. தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் இப்பழக்கம்
நடைமுறையில் இல்லை. திணைப்பயிரை விளையச்செய்த தலம் என்பதால்
இவ்வூருக்கு, "திருத்திணை'' என்று பெயர். சிவன் பணியாளாக வந்து வேலை
செய்த தலம் என்பதால், இங்கு திணைப்பயிர் நைவேத்யம் செய்து வழிபட்டால்
பணிஉயர்வு கிடைக்கும் என்கிறார்கள்.
சிவனது உதவியாளராக இருந்து கணக்கெடுக்கும் பணியைச் செய்யும்
சண்டிகேஸ்வரர் பல கோயில்களில் தனித்துதான் இருப்பார். ஆனால்,
இக்கோயிலில் மனைவி சண்டிகேஸ்வரியுடன் இருக்கிறார். இவர், தன் பணிக்கு
உதவியாக மனைவியை வைத்துக்கொண்டிருப்பதாக ஐதீகம்.
இங்கு கோயிலுக்கு வெளியே "ஜாம்புவதடாக" தீர்த்தம் உள்ளது. முன்வினைப்
பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி
சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றாராம். இதனால், இத்தீர்த்தம் அவரது
பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதில் நீராடி சுவாமியை வழிபட்டால்
பாவங்கள் நீங்கும் என்கிறார்கள்.
🍁தல வரலாறு🍁
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினர் சிவன்
மீது அதிக பக்தியுடன் இருந்தனர்.
தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை
வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை
சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி
செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு
கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான்.
ஆனால், அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம்
அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் அங்கு வந்தார்.
விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி
கேட்டுக்கொண்டான்.
முதியவர் அவனிடம் நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே,
உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு அதற்கு கூலியாக
வேண்டுமானால் சாப்பிடுகிறேன் என்றார்.விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன்
தோட்டத்தை உழும்படி கூறினான்.
முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று,
உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில்
விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார்
நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே முதியவருக்கு
அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினான்.
முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது
எப்படி? என தன் சந்தேகத்தை கேட்டான். முதியவர் அப்படியே மறைந்தார். சிவன்
அவனுக்கு காட்சி தந்து தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த
விவசாயி சிவனை இங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். சிவன்
சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment